Saturday 11 December 2010

ஊருக்குப் போறோம்!

என் மொக்கைகளிலிருந்தும் புலம்பல்களிலிருந்தும்  நம் நட்புகளுக்கு மீண்டும் ஒரு குறுகிய கால விடுதலை :-). சந்தோஷமா இருங்க மக்கா!

பல வருடங்களுக்குப் பிறகு புகுந்த வீட்டு சொந்தங்கள் அனைவரும் மீண்டும் ஒரே இடத்தில் கூடப்போகிறோம் என்ற மகிழ்ச்சியோடு ஊருக்கு செல்கிறோம்.  அந்த மகிழ்ச்சியோடு அனைவருக்கும் எனது கிறிஸ்துமஸ் மற்றும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!

Saturday 4 December 2010

இடுக்கண் வருங்கால் நகுக

இன்னிக்கு நாட்டு நிலைமை இப்படித்தான் இருக்கு. மக்களே ஊழல்தொகையை பார்த்து மனம் வருந்தாதீர் என்று அரசியல்வியாதிகள் கோமாளிகளாக மாறி தினம் தினம் அறிக்கை விட்டு  மக்களை வேதனையில் சிரிக்க வைக்கறாங்க.
ஆரம்பிச்சு வச்சுது இத்தாலி மகராசி அன்னை சோனியா காந்தி

ஊழல் தடுப்பில் எங்களைப் போல செயல்படுங்கள்: சோனியா "அட்வைஸ்"

எப்படீங்க போஃபர்ஸ் விவகாரத்தில் குவாட்ரோச்சியை தப்பிக்க வச்சீங்களே அது மாதிரியா? இல்லை ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை 16 மாசம் மூடிவச்சீங்களே அது மாதிரியா? புரியலீங்க தெளிவா சொன்னா எல்லாருக்கும் உபயோகப்படும்ல!

அடுத்து வந்தாருய்யா நம்ப மாண்புமிகு(?!) முதலமைச்சர்

ஊழல் விஷயங்களில் நான் நெருப்பு மாதிரி!

எப்படீங்க எங்கயாச்சும் ஊழல் பண்ண வாய்ப்பு இருக்குன்னு தெரிஞ்ச உடனே நெருப்பு மாதிரி கப்புன்னு புடிச்சுக்குவீங்களே அதுமாதிரியா? இல்லை பணம் கொழிக்கும் துறைகள் உங்களுக்கு வேணும்னு நெருப்பு மாதிரி இருந்து சாதிப்பீங்களே அது மாதிரியா? சொல்றதை தெளிவா சொன்னா நாங்களும் நெருப்பு மாதிரி இருப்போம்ல

அடுத்து அடிச்சாரு பாருங்க ஒரு ஜோக்கு...

"கோபாலபுரம் வீட்டைத் தவிர வேறு சொத்துக்களை வாங்கவில்லை"

ஆமாமா வேற எல்லாம் "வாங்கவில்லை". நாங்க நம்பிட்டோம்.

அதுலயும் ஓடாத படங்களுக்கு கதைவசனம் எழுதி 50லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கினாராம். இதுதாங்க இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த ஜோக்.

நானும் கதைவசனம் எழுதலாமான்னு யோசிக்கறேன். 50லட்சமெல்லாம் வேணாம் ஒருலட்சம் கிடைச்சாலும் போதும்.

அடுத்து துணைமுதல்வர் எனக்கு மட்டும் ஜோக்கடிக்கத் தெரியாதான்னு கேட்டுட்டு வந்தார்

"தி.மு.க ஆட்சியின், "இமேஜ்' உயர்ந்து கொண்டிருக்கிறது : துணை முதல்வர் பெருமிதம்"

ஹி ஹி டங்கு ஆஃப் த ஸ்லிப்பு தூ தூ ஸ்லிப்பு ஆஃப் த டங்கு... டேமேஜ்னு சொல்றதுக்கு பதிலா இமேஜ்னு சொல்லிட்டார் போல

எது எப்படியோ நல்லா வாய் விட்டு சிரிக்கலாம் இந்த ஜோக்குக்கு.
அரசியல்வாதிக்கு குறைஞ்சவனா நானுன்னு ஸ்டேஜுக்கு வந்தாரு தொழிலதிபர் ரத்தன் டாட்டா
நீரா ராடியா டேப் விவகாரம்: "ரத்தன் டாடா, இது தனி மனித உரிமையை மீறிய செயல் என்று கருத்து தெரிவித்திருந்தார்."

ஆமாமா பிளாக் டை பிளாக் கவுன் ன்னு நீங்க ஜொள்ளியதையெல்லாம் வெளியிட்டது தனி மனித உரிமை மீறல்தான். அதை வன்மையாக கண்டிக்கிறோம். ஆனா மாறன் மந்திரி ஆகக் கூடாதுன்னு சொன்னீங்களே அது என்னங்க தனி மனித விஷயம் புரியலியே! சொன்னீங்கன்னா அப்பாவிங்க நாங்க புரிஞ்சுக்குவோம்.

மக்களே தினந்தோறும் செய்தித் தாள் படியுங்க. நம்ப அரசியல்வியாதிகள் வெளியிடற அறிக்கைகளைப் படிச்சா வாழ்க்கையில் என்ன டென்ஷன் ஸ்ட்ரெஸ் எல்லாம் இருந்தாலும் பறந்து போயிடும். வாய் விட்டு சிரிப்பீங்க

இடுக்கண் வருங்கால் நகுக!

Wednesday 1 December 2010

முதன்முறை அழுகைகள்- ஒரு எதிர்வினை!

வலைப்பூ ஆரம்பிச்சு பல மாதங்கள் ஆயிடுச்சு. இதுவரைக்கும் ஒரு எதிர்வினை கூட எழுதலேன்னா நானும் பதிவர்னு சொல்லிக்கிட்டு திரிய முடியுமா! ஆனால் எதிர்வினை எழுதி அடிவாங்கும் அளவுக்கு உடலில் தெம்பு இல்லை. அதனால் யாரும் அடிக்க மாட்டாங்கன்னு நம்பி எதிர்கவுஜ எழுதிட்டேன் :)

நாஞ்சிலார் எழுதிய இந்த கவிதைக்கு எதிர்கவுஜ...




முதல்முறை பள்ளி சென்ற போது
வராத அழுகை

முதல்முறை பரீட்சையில்
முட்டை வாங்கியபோது
வராத அழுகை

முதல்முறை ஆசிரியரிடம்
அடி வாங்கியபோது
வராத அழுகை

முதல்முறை சைட் அடித்து அவள் அண்ணனிடம்
மாட்டிக் கொண்டதும்
வராத அழுகை

முதல்முறை காதலில் தோற்ற போது
வராத அழுகை

முதல்முறை பார்த்த பெண்
வேண்டாம்னு சொன்ன போது
வராத அழுகை

முதல் முறை வேலை புட்டுக்கிட்ட போது
வராத அழுகை

முதல்முறை காதலித்த பெண்ணை
திருமணம் செய்தபோது
வராத அழுகை

முதல்முறை மனைவி சமையலை
சாப்பிட்ட போது
வராத அழுகை

முதல்முறை மொக்கை கவுஜ
எழுதிய போது
வராத அழுகை

பல முதல்முறை அழுகைகளை
முறியடிக்கும் ஏதாவது
ஒரு பிரகாசமான பல்பை
எதிர்பார்த்து வாழ்க்கையை
பல பல்புகளுடன் கழித்துக்
கொண்டிருக்கிறார்கள்...

Tuesday 23 November 2010

புத்தியும் மனமும்!

அப்பா உன் கண்ணில் செய்யும்


அறுவை சிகிச்சை என்னவோ

அரைமணி நேரம்தான்

ஆபத்தும் இல்லாததுதான்

காலை சென்று மாலையில் வீடு திரும்பி விடுவாய்தான்

சுற்றமும் நட்பும் உன்னருகில் இருக்கிறதுதான்

அத்தனையும் என் புத்திக்கு தெரிகிறது

மனம் கேட்க மறுக்கிறதே அப்பா!

உன் அருகில் நானின்றி

அயல்நாட்டில் அமைதியின்றி தவிக்கிறேன்

அலைபேசியில் ஆயிரம் தைரியம் சொன்னாலும்

உன் கண்ணில் ஆயுதமிடப் போவதை எண்ணி

என் கண்ணில் நீர் வடிகிறதே

அண்ணனும் இதே மனநிலையில்தான்

செய்வதறியாது தவிக்கிறான்

விரைவில் நீ குணமடைய வேண்டுமென

பிரார்த்திக்க மட்டுமே முடிகிறது எங்களால்!

Thursday 18 November 2010

சந்தேகமுங்கோ!

எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம். ஹலோ எங்க ஓடறீங்க? சத்தியமா இது ஜெய்லானி கேட்கற மாதிரி சந்தேகம் இல்லை.  நம்புங்க அட நம்புங்கப்பா? பாருங்க ஜெய் உங்க சந்தேகங்கள் நம்ப மக்களை எம்பூட்டு தூரம் பாதிச்சிருக்குன்னு :)




என்ன பிரச்சினைன்னாலும் நம்ப எதிர்க்கட்சி எம்பி க்களும் எம்எல்ஏ க்களும் உடனே நாடாளுமன்றத்தையும் சட்டசபையையும் கத்தி கூச்சலிட்டு குடுமிப்பிடி சண்டையிட்டு ஸ்தம்பிக்க வைத்து ஒத்தி வச்சுடறாங்களே! அதனால அந்த பிரச்சினைக்கு என்னிக்காவது ஏதாச்சும் உருப்படியான முடிவு வந்திருக்கா?

அப்புறம் மறைந்த உறுப்பினர்களுக்கு அஞ்சலிங்கற பேர்ல சபையை கூட்டி உடனே ஒத்தி வைக்கறது எல்லாம் ஓவரா இல்லை! இதுவா அஞ்சலி செலுத்தும் லட்சணம்? ஒரு நிமிடம் கண்மூடி மௌனமாக அஞ்சலி தெரிவித்து விட்டு அவை நடவடிக்கைகளைத் தொடர்ந்தால் என்ன?

ஒவ்வொரு நாளும் நாடாளுமன்றம் கூடணும்னா கோடிக்கணக்கில் செலவாகுதாமே!  இப்படி ஒத்தி வைக்கறதுனால ஏற்படும் நஷ்டத்தை ஈடு கட்டறது யார்? இளிச்சவாய் மக்கள்தானா :(.

இவங்களுக்கு எல்லாம் சபை கூடும் நாளில் அகவிலைப்படி அந்தப்படி இந்தப்படின்னு படியளக்கறாங்களாமே அந்த படிகள் இப்படி ஒத்தி வைக்கப்படும் நாளுக்கும் சேர்த்துதானே கொடுக்கப் படுது?! யார் அப்பன் வீட்டுப் பணம் இப்படி பணியே செய்யாதவர்களுக்கு படி என்ற பெயரில் வீணடிக்கப் படுகிறது?

திடீர்னு எனக்கு ஏன் இந்த சந்தேகம்னு பார்க்கறீங்களா? நம்ப மாண்புமிகு(குறை) முன்னாள் அமைச்சர் ராசா விவகாரதில் தொடர்ச்சியாக ஆறாவது நாளாக நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்தி வைக்கப் பட்டிருக்கிறது. ஏதாச்சும் பயன் இருக்கா :(. தெரிஞ்சவங்க தெளிவு படுத்தினா புண்ணியமா போகும்.

Tuesday 9 November 2010

கவிசிவானந்தாவின் தனிமை இனிமை கொடுமை-வாழ்வியல் போதனைகள் :)

பெரும்பாலானவர்கள் என்னிடம் கேட்கும் கேள்வி "எப்படி தனியா இருக்கறீங்க கஷ்டமா இல்லையா?". தனியா இருக்கறது அவ்வளவு கஷ்டமா என்ன? இவங்க அகராதியில் காலையில் ரங்ஸ் அலுவலகம் சென்றதிலிருந்து இரவு திரும்ப வரும்வரை வீட்டில் இருப்பதுதான் தனிமை, தனியாக இருப்பது எல்லாம்.


நம்ப அம்மாவும் இப்படித்தானே இருந்தாங்க. அவங்களுக்கு இல்லாதிருந்த தனிமை உணர்வு இப்போ எப்படி வருது? வெளிநாட்டில் இருப்பதாலா?! நானும் வெளிநாட்டில்தான் இருக்கிறேன். ஆனா எனக்குத் தனிமை உணர்வு இல்லையே! அது ஏன்?!

யோசிச்சுப் பார்த்தா எனக்கு புரிஞ்சது இதுதான். மனசு... இதுதான் தனிமை உணர்வுக்கும் அது இல்லாமல் இருப்பதற்கும் ஒரே காரணம்.

திருமணமாகி வெளிநாடு வரும் பல பெண்களும் சந்திப்பதுதான் இந்த பிரச்சினை. கணவர் துணையின்றி வெளியில் செல்ல முடியாது. கணவர் வரும் வரை வீட்டிற்குள்ளேயேதான் இருக்க வேண்டும். இவை ஒரு வித மன அழுத்தத்தை ஏற்படுத்தும் என்பது உண்மைதான். ஆனால் அதை எப்படி சமாளிக்கிறோம் என்பதில்தான் இருக்கிறது தனிமையின் இனிமையும் கொடுமையும்.

எந்த விஷயத்தையும் பாசிட்டிவாகவும் பார்க்கலாம். நெகடிவாகவும் பார்க்கலாம். திருமணமான புதிதில் ஏற்படும் இந்த தனிமையை எப்படி பாசிட்டிவா பார்க்கலாம்?  கணவன் மனைவிக்கிடையே மூன்றாவது மனிதர் இடையூறு இல்லாமல் இருக்கலாம். இருவருக்கும் இடையேயான நெருக்கம் அதிகரிக்க இந்த தனிமையை பயன் படுத்திக் கொள்ள முடியும். கணவர் வரும் நேரத்தில் புன்னகையுடன் எதிர்கொண்டு இனிமையாக பேசி களித்து சந்தோஷமாக இருந்தால் அதுவே அடுத்த நாளுக்கான புத்துணர்ச்சியையும் சந்தோஷத்தையும் கொடுக்குமே!

இதையே எப்படி நெகடிவாக அணுகலாம்?  பகல் எல்லாம் நான் தனியாக இருக்கிறேன். கஷ்டப் படுகிறேன்னு கணவர் அலுவலகத்தில் இருந்து வந்ததும் மூக்கைச் சிந்தினால் முதலில் கணவர் பரிதாபப் பட்டு நம்மை வெளியில் அழைத்து சென்று சமாதானப் படுத்த முயன்றாலும் இது தொடர்கதையானால் அவருக்கே சலிப்பு தட்டி விடும். தாம்பத்தியத்தையே அது பாதிக்கும். தேவையா இது?

இப்போதெல்லாம் திருமண நிச்சயதாம்பூலத்திற்கும் திருமணத்திற்கும் இடையே குறைந்தது ஆறு மாத காலம் இடைவெளி இருக்கிறது. அந்த காலத்தில் இருவரும் பேசிக் கொள்கிறார்கள். அப்போதே அந்த ஆண் அவர் இருக்கும் ஊரைப் பற்றி அவருடைய வேலையைப் பற்றி வேலை நேரத்தைப் பற்றி பெண்ணிடம் விளக்கி விட்டால் அந்த பெண்ணாலும் புதிய வாழ்க்கையை எதிர்கொள்ள மனதைத் தயார்படுத்திக் கொள்ள முடியும். (திருமணம் நிச்சயிக்கப்பட்ட, நிச்சயிக்கப்பட இருக்கும் மாப்பிள்ளைகள் கவனத்தில் கொள்ளவும் :D)

என்னதான் மனதைத் தயார்ப் படுத்தினாலும் ஆரம்பத்தில் கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கும். தனிமையை வெல்ல இணையம் ஒரு வரப்பிரசாதம். மெல்லிய இசையை வீட்டில் எப்போதும் ஒலிக்க விடலாம். நமக்குப் பிடித்த ஹாபியை தொடரலாம். படிக்க நினைத்து முடியாது போன விஷயங்களைப் புதிதாக கற்றுக் கொள்ளலாம். மொத்தத்தில் நமக்குப் பிடித்த விஷயங்களில் நம்மை ஈடுபடுத்திக் கொண்டு நம்மை எப்போதும் எங்கேஜ்டாகவே வைத்திருந்தால் தனிமைன்னா கிலோ என்ன விலைன்னு கேட்பீங்க என்னை மாதிரி :-)).

என்னைப் பொறுத்த வரை தனிமை எனக்கு கொடுமையாக இல்லை. இனிமையாகவே இருக்கிறது :-). ஆரம்பத்தில் கொடுமையாக இருந்தது உண்மை. ஆனால் எதிர்பார்ப்புகளைத் தூர எறிந்து விட்டு யதார்த்தத்தை மனம் ஏற்றுக் கொள்ள ஆரம்பித்ததும் இந்த வாழ்க்கை எனக்கு ரொம்பவே பிடித்திருக்கிறது. சந்தோஷமாகவே இருக்கிறோம்.

எனக்கு மற்றவர்கள் எல்லாம் எப்படி தனியா இருக்கீங்கன்னு கேட்கும் போதுதான் நாம் தனியாத்தான் இருக்கோமோ அப்படீன்னு தோணுது :(. ஆனால் நான் தனியாக இல்லை என்பது எனக்குத் தெரியும். என் மனதுக்குத் தெரியும். என் சொந்தங்கள் நட்புகள் தொலைவில் இருந்தாலும் எனக்காக அவர்கள் இருக்கிறார்கள் என்று என் மனதுக்கு நல்லாவே தெரியும். நான் தனியாக இருந்தாலும் தனிமையில் இல்லை :-).

தனிமையை தூக்கி எறியுங்க சந்தோஷமா இருங்க. எனக்கு அது இல்லையே இது இல்லையேன்னு இல்லாததை நினைத்து இருப்பதைத் தொலைக்காமல் இருந்தால் வாழ்வில் மகிழ்ச்சிக்கு குறைவேது :-)
 
அன்புடன்,
கவிசிவானந்தா :-)

Wednesday 3 November 2010

மலரும் தீபாவளி நினைவுகள் :-)

தீபாவளி வருது. அது பற்றி பதிவு போடலேன்னா மொக்கை போடும் பதிவுலகம் என்னாவது?

சிங்கப்பூர் லிட்டில் இந்தியாவில் தீபாவளி அலங்காரம்(2009ல்)

    சிங்கப்பூர் லிட்டில் இந்தியாவில் தீபாவளி அலங்காரம்(2008ல்)



சிறுவயதில் தீபாவளின்னா (அப்போ நீ கிழமான்னு கேணத்தனமா உண்மையை எல்லாம் கேட்கப் படாது :D) கொண்டாட்டம் குதூகலம்தான். புதிய காலெண்டர் வந்தவுடன் பார்ப்பது இரண்டு விஷயங்கள். முதலில் எனது பிறந்த நாள்(நட்சத்திரப் படி) . அடுத்தது தீபாவளி!

எப்படி பிறந்தநாள் வருவதற்கு ஒரு மாதம் முன்பே எங்கப்பாவை ட்ரெஸ் வாங்கணும்னு கேட்டு நச்சரிப்பேனோ அதே போல் தீபாவளிக்கும் நச்சரிக்க ஆரம்பித்து விடுவேன் :). பெரும்பாலும் ரெடிமேட் ஆடைகள்தான். அதனால் டெய்லர் கடையில் போய் காத்து நிற்கும் வேலையெல்லாம் அப்போ கிடையாது.

நல்ல நாள் எல்லாம் பார்த்து அப்பா அம்மா அண்ணா நான்னு தீபாவளிக்கு ட்ரெஸ் வாங்க கிளம்புவோம். நமக்கு ட்ரெஸ்சை விட அதன் விலைதான் ரொம்ப முக்கியம் :). அழகான ட்ரெஸ்ஸாக இருந்தாலும் விலை குறைவானது என்றால் எனது அப்போதைய அகராதியில் நல்லா இல்லைதான் :). எங்க அப்பாவுக்கு கொஞ்சமே கொஞ்சம் எங்கயாவது ஜரிகை இருந்து விட்டால் போது ரொம்ப பிடித்துப் போகும் (அப்பா அப்படித்தானே :D). அப்படி இப்படி கொஞ்சம் அழுது அடம் பிடிச்சு நான் நினைக்கற ட்ரெஸ்ஸை வாங்கிடுவேன். அண்ணா பாவம் அதிகமா எதுவும் சொல்ல மாட்டார். கொஞ்சம் வளர்ந்த பிறகு அவரே ஃப்ரெண்ட்ஸோட போய் எடுத்துக்குவார். அம்மாவும் அதிகமா எதுவும் சொல்ல மாட்டார். (நீதான் குடும்பத்தில் ரவுடியான்னு கேட்கக் கூடாது. ஹி ஹி கடைக்குட்டி அதான் அப்படி)

பலகாரங்கள் எல்லாம் அம்மாவும் பாட்டியும் பத்து நாட்களுக்கு முன்னாடியே செய்ய ஆரம்பிச்சிடுவாங்க. அச்சு முறுக்கு, முறுக்கு, முந்திரி கொத்து இந்த மூணு ஐட்டங்களும் தவறாமல் எல்லா தீபாவளிக்கும் செய்யப்படும். வழக்கம் போல் நான் முதலில் எதுவும் சரியாக சாப்பிடாமல் எல்லாம் தீர்ந்த பிறகு நான் சாப்பிடவே இல்லைன்னு சொல்லி அழுவேன் :(. எங்க பாட்டி என் குணம் தெரிந்தே கொஞ்சம் தனியா வச்சிருப்பாங்க :)

எட்டு வயது வரை நாங்கள் இருந்தது ஒரு கிராமம். தீபாவளிக்கு முன் சிவகாசியில் படித்துக் கொண்டிருந்த உறவினர் ஒருவரிடம் சொல்லி அப்பா பட்டாசு வாங்கிட்டு வரச் சொல்வார். கம்பி மத்தாப்பு வைக்கக் கூட பயப்படும் படுதைரியசாலி நான் :). அப்பா வாழைத்தண்டில் கம்பி மத்தாப்பை குத்தி பிடிக்க வைப்பார் :). அதையும் அப்படியே கையை நீட்டிக் கொண்டு தலையை திருப்பிக் கொண்டு பிடிப்பேன். ஆனால் அதிலும் ஒரு சந்தோஷம். அண்ணாவும் அப்பாவும் சேர்ந்து ராக்கெட் எல்லாம் வெடிப்பாங்க.

கடைசியா ட்ரெயின் வெடி! நீளமா கயிறு கட்டி அதன் ஒரு முனையில் பத்த வச்சா அது அப்படியே ட்ரெயின் மாதிரி போகும். அதைப் பார்க்க எல்லாரும் ஏதோ புல்லட் ட்ரெயினின் வெள்ளோட்டம் பார்ப்பது போல் பார்த்துக் கொண்டு நிற்போம் :)

கொஞ்சம் வளர்ந்த பிறகு மதுரை நாகர்கோவில்னு வந்துட்டோம். மதுரையிலும் தீபாவளி ஜாலிதான். முந்தைய நாள் இரவு வீட்டிலுள்ள ஆண்கள் மட்டும் (நிறைய உறவினர்கள் மதுரையில் இருந்ததால் பெரும்பாலும் ஏதேனும் ஒரு வீட்டில் கூடிதான் தீபாவளி கொண்டாட்டம்) மதுரை டவுன்ஹால் ரோட்டுக்கு போவாங்க பட்டாசு வாங்க. எல்லா சாமான்களும் மிகவும் மலிவாக கிடைக்கும். இப்போது நடக்கிறதான்னு தெரியலை. அங்கேயே ஒரு பெரிய பையோ பக்கெட்டோ வாங்கி அது நிறைய பட்டாசு வாங்கிட்டு வருவாங்க. கம்பி மத்தாப்பு மட்டுமே எனக்கு :(

அப்புறம் நாகர்கோவிலில் தீபாவளி. சேட்டிலைட் தொலைக்காட்சியின் தாக்கம் ஆரம்பித்திருந்த நேரம். நானும் கம்பி மத்தாப்பிலிருந்து ஊசிவெடிக்கு பிரமோஷன் ஆகியிருந்தேன். அதைக் கூட ஏதோ ஆட்டம் பாம் ரேஞ்சுக்கு திரியை எல்லாம் பிய்த்து ஊதுபத்தியால் பயந்து பயந்து வைப்பேன் :)

அப்புறம் காலேஜ் போன பிறகு வெடிகளின் மீது நாட்டம் குறைந்து விட்டது. ஆனாலும் தீபாவளின்னா சந்தோஷம் இருந்துச்சு.
இப்போ இங்கே தீபாவளி வார நாட்களில் வந்தால் வார இறுதிக்கு தள்ளிவைக்கப் படுகிறது :(. தீபாவளி நேரத்தில் இந்தியாவில் இருந்தால் கூட முன்பிருந்த கொண்டாட்டம் குறைவாகவே இருக்கிறது. எல்லோரும் டிவி முன்னே தவம் கிடக்கிறார்கள். தெருக்களில் குழந்தைகள் வெடி வெடிப்பது கூட குறைந்து விட்டது :(. ஏதோ கடமைக்காக கொண்டாடுவது போல் இருக்கிறது.
இங்கு தீபாவளிக் கொண்டாட்டங்கள் வசதியான நாட்களுக்கு மாற்றப் பட்டாலும் கூட அன்றைய நாள் நிஜம்மாகவே தீபாவளி போல் நண்பர்கள் இணைந்து கொண்டாடுகிறோம். வெடிகள் வெடிக்கிறோம். ஆட்டம் பாட்டம்னு சந்தோஷமா இருக்கோம். ஆனாலும் எதையோ இழந்த உணர்வு இருக்கவே செய்கிறது. இந்த தடவை எங்கள் ஊர் தீபாவளிக் கொண்டாட்டம் நவம்பர்28 :).

அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

தலைதீபாவளி கொண்டாடுபவர்களுக்கு ஸ்பெஷல் வாழ்த்துக்கள்!

தனி தீபாவளி கொண்டாடும் சகோஸ் அடுத்த வருடம் ஜோடியோடு தலை தீபாவளி கொண்டாட வாழ்த்துக்கள்! :)

Tuesday 2 November 2010

தூதரகம்னா இப்படி இருக்கணும்!

நமது இந்திய தூதரகங்கள் மீது பொதுவாக நமக்கு நல்ல அபிப்ராயம் கிடையாது. கசப்பான அனுபவங்கள் கிடைத்திருக்கும். தூதரக அதிகாரிகளை பலவாறாக குறை சொல்லியிருப்போம்.


ஆனால் சில நல்ல இந்திய தூதரகங்களும் அதிகாரிகளும் இருக்கிறார்கள். அவர்களைப் பாராட்டவே இந்தப் பதிவு.

நாங்கள் இருப்பது இந்தோனேஷியாவில். (அதான் தெரியுமே திரும்ப திரும்ப எதுக்கு சொல்லிக்கிட்டு :D). நாங்கள் இருக்கும் தீவின் அருகே இருக்கும் இந்திய தூதரகம்னா அது மேடான் ல் இருக்கும் தூதரகம்தான். கடல் கடந்து விமானத்தில்தான் போக முடியும். சிறு சிறு தூதரக வேலைகளுக்கு கூட போய் வருவது என்பது சிரமம்.

அதனால் தூதரக அதிகாரிகள் இங்குள்ள இந்தியர்கள் சங்கத்தோடு இணைந்து வருடத்திற்கு இரண்டு முறை நாங்கள் இருக்கும் தீவில் கேம்ப் நடத்துவார்கள். கேம்ப் நடக்க ஒரு மாதம் முன்பாகவே இந்திய சங்கங்கள் மூலம் ஒவ்வொருவருக்கும் மெயில் மூலம் தெரிவிக்கப் பட்டு விடும்.

அப்போது தங்களுக்கு என்னென்ன பாஸ்போர்ட் மற்றும் தூதரக சேவைகள் வேண்டுமோ அது பற்றி தூதரகத்துக்கு மெயில் அனுப்பி விட வேண்டும். ஆன்லைனில் அப்ளை செய்ய வேண்டியதையும் செய்து விட வேண்டும். உதாரணமாக பிறப்புச் சான்றிதழ் பெறுவது, பாஸ்போர்ட் புதுப்பித்தல், பாஸ்போர்ட்டில் கணவர்/மனைவி பெயர் சேர்த்தல், பவர் ஆஃப் அட்டர்னி கொடுக்க வேண்டிய சான்றிதழ் பெறுதல் இப்படி தூதரகத்தில் செய்யப்படும் அத்தனை சர்வீஸ்களும் செய்து கொடுக்கப் படும்.

கேம்ப் நடக்கும் அன்று காலையில் நம்மிடம் இருந்து டாக்குமெண்டுகள் மற்றும் கட்டணத் தொகையை பெற்றுக் கொள்வார்கள். மாலையில் போய் வாங்கிக் கொள்ளலாம். சில வேலைகள் உடனேயே முடிந்து விடும். ஒரு மணிநேரத்திற்குள் கையில் கொடுத்து விடுவார்கள்.அப்போது தூதரக அதிகாரிகளும் நம்மோடு தோழமையோடு பேசுவார்கள். நமக்கு ஏதும் பிரச்சினை இருக்குதான்னு கேட்டு தயங்காமல் அணுகுங்கள் என்றும் சொல்லுவார்கள்.

இந்த சேவைகளை நாம் பெற தூதரகத்தில் நம் பெயரை பதிந்திருக்க வேண்டும். ஏற்கெனவே பதியாதவர்கள் இந்த கேம்ப் நடக்கும் போதே பதிந்து கொள்ளலாம். அப்படி பதிந்து கொண்டால் கேம்ப் நடக்கும் வரை கூட காத்திருக்கத் தேவையில்லை.

ஆன்லைனில் அப்ளை பண்ணி விட்டு டாக்குமெண்டுகளை கூரியரில் அனுப்பி வைத்து தூதரக அதிகாரிக்கும் ஒரு மெயில் செய்து விட்டால் போதும். நமக்கான வேலைகள் எளிதில் முடிந்து விடும். நமக்கு ஏதும் சந்தேகம் என்றாலும் நேரடியாக தொடர்பு கொண்டு பேச முடியும்.

சென்ற ஆண்டு தீபாவளிக்கு இந்திய தூதரகம் இங்குள்ள இந்தியர்களுக்காக சிறப்பான நிகழ்ச்சி ஏற்பாடு செய்து அருமையாக நடத்தினார்கள் (மழைதான் கொஞ்சம் சொதப்பிடுச்சு).

ஒருமுறை இங்கே சுற்றுலா வந்த இந்திய பயணி இறந்து விட அவரது உடலை இந்தியாவுக்கு அனுப்பி வைக்க எல்லா உதவிகளையும் தூதரகம் செய்தது. ஆனால் பொதுமக்களாகிய நாமும் அவர்களோடு ஒத்துழைக்க வேண்டும்.

கடந்த பத்து வருடங்களில் இரண்டு முறை பாஸ்போர்ட் அடிஷனல் புக்லெட் வாங்கியிருக்கிறேன். ஒருமுறை பாஸ்போர்ட் புதுப்பிக்கவும் செய்தாச்சு. எந்த பிரச்சினையும் இல்லை. பாஸ்போர்ட் புதுப்பிக்க எல்லாவற்றையும் கூரியரில்தான் அனுப்பினேன். இரண்டு வாரத்தில் வீடு தேடி பாஸ்போர்ட் வந்திடுச்சு.

எங்கள் நண்பர் ஒருவர் பாஸ்போர்ட்டை தொலைத்து விட்டு தவித்த போது கூட அவருக்கு எல்லா உதவிகளையும் செய்து புது பாஸ்போர்ட் கிடைக்க வழி செய்து கொடுத்தது.

எல்லா தூதரகமும் இதுபோல் இருந்தால் நல்லா இருக்கும் :). ஒருவேளை மற்ற நாடுகள் போல் இல்லாமல் இங்கு இந்தியர்கள் எண்ணிக்கை குறைவு என்பதால் எல்லோரையும் அவர்களால் சரியாக கவனிக்க முடிகிறதோ!

நாமும் இந்த ஒரு விஷயத்திற்காக மட்டுமாவது தமிழர் சங்கம், மலையாளி சங்கம், பஞ்சாபி சங்கம்னு மாநில வாரியா ஒரு சங்கம் வச்சுக்காம பொதுவா இந்திய சங்கமாக இணைந்து தூதரகங்களோடு இணைந்து பணியாற்றினால் எல்லோரும் பயனடையலாம்.

சில தூதரகங்களில் பணியாளர்கள் எண்ணிக்கை குறைவு. அப்படிப்பட்ட சூழல்களில் இது போன்ற கேம்ப்கள் அமைத்து தன்னார்வ ஊழியர்களையும் இணைத்துக் கொண்டு பணிகளைச் செய்தால் பலரும் ஒரே நேரத்தில் பலனடையலாம். ஒரேயடியாக குறை சொல்லிக் கொண்டிருக்காமல் இப்படியும் முயற்சிக்கலாமே!

டிஸ்கி:

ஜகார்த்தாவில் உள்ள இந்திய தூதரகம் பற்றி தெரியவில்லை. மேடானில் உள்ள இந்திய தூதரகம் சிறந்ததுதான். எனக்குத் தெரிந்தவரை இங்கே யாரும் தங்களுக்கு கசப்பான அனுபவம் நடந்ததாக சொல்லவில்லை.

Sunday 31 October 2010

ரங்ஸ் கொடுத்த பல்பு :(

இன்னிக்கு டின்னருக்கு வெளிய போகலாம்னு ரங்கமணி சொல்லிட்டார். (இன்னிக்கு ஒருநாளாவது தப்பிச்சுக்கலாம்னு நினைச்சிருப்பார். அது பொறுக்காதே!). நானும் நல்லா பந்தாவா கிளம்பி ரெடியாயிட்டேன். இல்லேன்னா பெரிய ரெஸ்ட்ராண்டுகளுக்கு கூட்டிட்டு போகாம குட்டி கடைகளுக்குப் போய் பர்சை பாதுகாத்துக்குவாரே! அதுக்கெல்லாம் இடம் கொடுக்கலாமோ! (அதானே நாம யாரு)



நான் நினைச்ச படியே ஸ்டார் ஹோட்டலுக்குத்தான் போனோம். (நீ நினைக்கறதைத்தானே அவரு நினைச்சாகணும். வேற வழி). கேண்டில் லைட் டின்னர்ங்கற பேர்ல கரண்டு செலவை மிச்சம் புடிக்கறான் ஹோட்டல் காரன். கூடவே அந்த மங்கலான வெளிச்சத்துல மெனுகார்டில் ஒவ்வொரு ஐட்டங்களுக்கும் என்ன விலைன்னு சரியாவே தெரிய மாட்டேங்குது. அதானே அவனுக்கு வேணும். இது புரியாம ஆஹா ரொமாண்டிக் லைட்டிங்னு மதி மயங்கிடறோம். பில் வரும்போதுதானே தெரியும் ரொமாண்டிக்கா இல்லையான்னு!



மெனு கார்ட் வந்ததும் நீங்களே ஆர்டர் பண்ணிடுங்கன்னு அவரோட சாய்சுல விட்டுட்டேன். (மெனுவுல போட்டிருக்கறது என்ன ஐட்டம்னு தெரியாது எதுக்கு ரிஸ்க் எடுக்கணும்னுதானே அப்படி சொல்லியிருப்ப). அவரும் ஏதோ ஸ்டீக் ஹாட் ப்ளேட் -னு ஆர்டர் செய்தார். முன்னாடியே இதுபோன்று சிக்கன் ஸ்டீக் சாப்பிட்டிருக்கிறேன் என்பதால் நானும் ஓகே சொல்லிட்டேன்.



ஆர்டர் பண்ணின ஐட்டமும் வந்தது. நானும் சாப்பிட்டேன். ரொம்ப டேஸ்டியா இருந்துச்சு. ஆனா எப்பவும் சாப்பிடற மாதிரி இல்லை. அவரிடம் கேட்டதற்கு இது நல்லாயில்லையா வேற ஆர்டர் பண்ணவான்னார். நல்லா இருக்கு ஆனா எப்பவும் சாப்பிடறது மாதிரி இல்லைன்னேன். நல்லா இருக்குல்ல சாப்பிடுன்னார். நானும் நம்பி சாப்பிட்டேன்.



ஆனா ரங்ஸ் முகத்துல ஏதோ கள்ளத்தனம் தெரிஞ்சுது. சாப்பாட்டோட ருசியில அதை பெருசா எடுத்துக்கலை. எல்லாம் சாப்பிட்டு முடிச்சதுக்கப்புறம் சாப்பாடு பிடிச்சிருந்துதா அப்படீன்னு கேட்டார். நானும் ரொம்ப நல்லா இருக்குங்க அடுத்தவாட்டியும் இங்கேயே வருவோம்னேன்.



அவர் சிரிச்சுக்கிட்டே பீஃப் எல்லாம் சாப்பிட மாட்டேன்னு ரொம்ப பந்தா காமிச்ச இப்போ அதை நல்லா ஒரு வெட்டு வெட்டினதும் இல்லாம அடுத்தவாட்டியும் இதுதான் வேணுங்கற அப்படீங்கறார். நான் ?!?! :((((



அடுத்து பில் வந்துச்சு. ஹோட்டல் காரன் ரொம்ப விவரம். பில் கொண்டு வரும் போது மட்டும் குட்டியூண்டு டார்ச் லைட் கொண்டு வந்து பில்லில் அடிச்சுக் காமிக்கறான். இது மட்டும் தெளிவா தெரியணுமாம். பில்லைப் பார்த்து மயக்கம் போடாத குறைதான் :(



முள்ளங்கி சாப்பிடாதவருக்கு பருப்போடு சேர்த்து கடைந்து கொடுத்து ஏமாத்தினதுக்கு இப்பூடி பழி வாங்கிட்டார். ஆனாலும் பீஃப் ரொம்ப ருசியா இருந்திச்சு :). அடுத்தவாட்டி சாப்பிடுவேனான்னு கேட்டால் பதில் நோ தான். தெரியாமல் சாப்பிட்டதால் ஓகே. ஆனால் பீஃப்னு தெரிஞ்சப்புறம் சாப்பிட முடியாது :(. ஏன்ன்னு எல்லாம் கேட்கக் கூடாது. அது அப்படித்தான் :)



டிஸ்கி: ரங்க்ஸைப் பற்றி எழுதினாலே கூடவே மைண்ட் வாய்சும் வந்துடுது :(. ஃபோட்டோ கூகுளாண்டவரிடம் சுட்டது :))

Sunday 24 October 2010

சாதனைத் தமிழன்

இது எனக்கு மெயிலில் வந்த செய்தி

நண்பர்களுக்கு அன்பான வேண்டுகோள். நம்மை உலக அரங்கில் தலை நிமிரச் செய்திருக்கும் இந்த தமிழரின் சாதனை சமூகத்தொண்டை எல்லோரிடமும் கொண்டு செல்ல உதவுங்கள். உங்கள் வலைப்பூவில் இதனை வெளியிட்டு அதிக வாக்குகள் கிடைத்து வெற்றி பெற உதவுவோம்.


                           A real hero from Madurai

                                     http://heroes.cnn.com/vote.aspx



2010 – உலகின் தலை சிறந்த ஹீரோ ஒரு தமிழன்

திரைப்படங்களை ரசியுங்கள் ரசிகர்களே. அதில் உங்கள் ஹீரோ செய்வதெல்லாம் நிஜம் என்று மட்டும் நம்பி விடவேண்டாம். உண்மையான ஹீரோ உங்கள் பகுதியில் நேர்மையாகவும், தியாக உணர்வோடும் , சேவை மனப்பான்யுடனும் , துணிவுடனும் உழைத்துகொண்டிருப்பார்கள் ஒரு ராணுவ வீரராக , தீயணைப்பு வீரராக, காவல் துறை அதிகாரியாக, ஆசிரியாராக, சமுக சேவகராக, துப்புரவு தொழிலாளியாக மற்றும் நேர்மையாக உழைத்து சம்பாதிக்கும் எவருமாக இருக்கலாம். அவர்களை சந்திக்கும் சமயத்தில் ஒரு நன்றி சொல்வோம் , பாராட்டுவோம். அவர்களில் யாரேனும் கவுன்சிலர் தேர்தலில் நிற்கக்கூடும். நின்றால் காசுக்கு ஆசைபடாமல் ஒட்டு போடுவோம்.



இப்போது அப்படி ஒரு நிஜமான ஹீரோவை உங்களுக்கு இந்த பதிவின் வாயிலாக அறிமுகபடுத்துகிறேன். இவர் உலகப்புகழ் பெற்ற CNN இணையதளத்தில் உலகின் தலை சிறந்த ரியல் ஹீரோக்களில் முதல் பத்தில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். ஒரு தமிழனாக, மதுரைகாரனாக ரெம்பவும் பெருமை படுகிறேன். இன்னும் வாக்கு பதிவு நடந்து கொண்டிருகிறது. இதில் தேர்ந்தெடுக்கப்படும் ஹீரோக்கள் அமெரிக்காவில் நவம்பர் மாதம் 25 ஆம் தேதியில் Shrine ஆடிடோரியம், Los Angeles இல் நடக்கும் ஒரு பெரும் விழாவில் கௌரவிக்க பட இருக்கிறார்கள். இது CNN தொலைகாட்சியில் இந்திய நேரம் காலை எட்டு மணி ( நமக்கு நவம்பர் 26 ஆம் தேதி ) உலகம் முழுக்க நேரலை ஒளிபரப்பில் காட்டப்பட இருக்கிறது. இதற்காக நாம் ஒவ்வொரு இந்தியனும், தமிழனும் பெருமை பட வேண்டும். ஆஸ்கார் சாதனையை விட இது தான் மகத்தான சாதனை.

பெயர் : நாராயணன் கிருஷ்ணன்

வயது : 29

இருப்பு : மதுரை

அப்படி என்ன செய்து விட்டார்?

அது நினைத்துபார்கவும் முடியாத கருணை செயல்.

தான் யார் என்றே அறியாத சித்த சுவாதீனம் கொண்ட மனிதர்களை நாம் சிறு கருணையுடனும் அல்லது கொஞ்சம் அருவருப்புடனும் கடந்து செல்வோம். சில சமயம் காசு போடுவோம். அதற்கும் மேல் என்ன செய்வோம்? அதை மறக்க முயற்சிப்போம். ஆனால் இவர் அவர்களை தேடி சென்று தினமும் மூன்று வேளை உணவு தருகிறார். அருவருப்பில்லாமல் ஊட்டி விடுகிறார்.கடந்த எட்டு வருடங்களாக ஒரு நாள் தவறாமல் இந்த சேவையை இவர் தொடர்ந்து செய்து வருகிறார். மழை, புயல்,தேர்தல்,கலவரம், பந்த் என்று எதுவும் பாராமல் வருடம் முழுக்க இந்த சேவையை செய்து வருகிறார். தினமும் 400 பேருக்கு மூன்று வேளை உணவு என்பது சாதாரணம் இல்லை. இது வரை ஒரு கோடியே இருபது லட்சம் உணவு பொட்டலங்கள் விநியோகிக்கபட்டுள்ளது.

ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் வேலை பார்த்த, விருதுகள் வென்ற செப் சமையல் கலை வல்லுநர் இவர். சுவிட்சர்லாந்தில் ஒரு பெரிய ஹோட்டல் நிறுவனத்தில் வேலை கிடைத்தவுடன் அதை பெற்றோர்களிடம் சொல்லிவிட்டு போவதற்காக மதுரைக்கு வந்தவர் அங்கே ஒரு வயது முதிர்ந்த ஒரு கிழவர் மலத்தை உணவாக உண்ணும் அவலத்தை கண்டு பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி தனது வெளிநாட்டு வேலையை துறந்து மதுரையிலேயே தங்கி வீட்டில் சமைத்து அதை இது போன்ற மனிதர்களை தேடி சென்று உணவு கொடுக்க ஆரம்பிக்கிறார். இது நடந்தது 2002 . இன்றும் இவரது சேவை தொடர்கிறது மதுரையை சுற்றி நூறு கிலோமீட்டர் பரப்பளவில் கண்ணில் படும் இதுபோன்ற மனிதர்களை தேடிபிடித்து உணவு தருகிறார். இதற்காக இவர் தன்னுடைய வாழ்கையை முழுமையாக அர்பணித்துள்ளார். இவரது அன்னை இவர் குறித்து கவலை பட்டு அழுதபோது, “அம்மா ஒரு நாள் என்னோடு வாங்க. நான் என்ன செய்கிறேன் என்று பாருங்கள் அப்புறம் நீங்கள் சொல்வதை கேட்கிறேன்” என்று சொல்லி அழைத்து போயிருக்கிறார். இவரது சேவையை கண்டு மனம் உருகிய அந்த தாய் ” நீ இவர்களை பார்த்துக்கொள், நான் உள்ளவரை உன்னை பார்த்துகொள்கிறேன்” என்று சொல்லிருக்கிறார். இதை படித்த போது என் கண்களில் நீர் முட்டிக்கொண்டு வந்ததை அடக்க முடியாமல் தவித்தேன். எழுதும் இந்த கணமும் கூட.

நாம் இங்கே நம்மை ஏமாற்றும் திரை நட்சத்திரங்களை ஹீரோ என்று சொல்லி தலையில் வைத்து கொண்டாடுகிறோம். பாலபிசேகம் முதல் முளைப்பாரி வரை எண்ணற்ற பைத்தியகாரத்தனத்தை அந்த ஹீரோக்களுக்காக செய்கிறோம். முதல் நாள் அவர்கள் படங்களை பார்க்க ஆயிரம், இரண்டாயிரம் செலவழிக்க தயங்குவதில்லை. சரி கொடுகிரீர்கள் அந்த அளவுக்கு உரித்தான கலைபடைப்பையாவது அவர்கள் தருகிறார்களா? அவர்கள் என்ன செய்தார்கள். நானும் கொடை செய்கிறேன் என்று சொல்லி சிலவற்றை செய்து பத்திரிகைகளில் மறக்காமல் செய்தி கொடுக்கிறார்கள். அவர்கள் இவரின் கால் தூசுக்கு கூட பொருந்த மாட்டார்கள். இவர் தான் உண்மையான ஹீரோ. சாகசம் செய்வது சாதனை அல்ல. இல்லாதவர்க்கு தேடிசென்று ஈவதே சாதனை. எனக்கு இவர் தான் என்றென்றும் ஹீரோ. இவரை பார்க்கவும், இவருடன் புகைப்படம் எடுத்துகொள்ளவும், இவருடன் ஒரு நாள் இருந்து சிறு உதவியேனும் செய்யவும், பொருள் உதவி செய்யவும், இவரை பற்றி எழுதவும் பேசவும் பெரும் ஆவல் கொள்கிறேன், பெரும் பெருமை கொள்கிறேன் எனது ஹீரோ ஒரு மகத்தானவன் என்பதில்.

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்

பெற்றான் பொருள்வைப் புழி.

ஏதும் இல்லாதவரின் கடும்பசியைத் தீர்த்து வையுங்கள். பொருளைப் பெற்றவன் சேமித்து வைக்கும் இடம் அதுவே.

ஆதலால் நீங்கள் சேர்த்துவைக்க இடம்

http://www.akshayatrust.org/contact.php

Akshaya’s Helping in H.E.L.P. Trust

9, West 1st Main Street,

Doak Nagar Extension,

Madurai – 625 010. India

Ph: +91(0)452 4353439/2587104
E mail : ramdost@sancharnet.in


மொக்கையாக எத்தனையோ வோட்டு போட்டுருக்கோம். ஒரு நல்ல விசயத்திற்கும் வோட்டு போடலாம் வாருங்கள். நீங்கள் வோட்டு போடவேண்டிய இடம்

http://heroes.cnn.com/vote.aspx

பின்குறிப்பு: ஒருவரே எத்தனை ஓட்டு வேண்டுமென்றாலும் போடலாம். எந்த கட்டணமும் இல்லை. கொஞ்சம் நேரத்தை ஒதுக்கி உங்களால் எவ்வளவு முடியுமோ அத்தனை ஓட்டு போடுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

Thursday 21 October 2010

தென்னை மரத்தில் தேள் கொட்டியதால் பனை மரத்தில் நெறி கட்டியிருக்கிறது

இந்தோனேஷியாவின் சுமத்ராவில் காட்டுத் தீ. இதன் காரணமாக சிங்கப்பூரிலும் மலேஷியாவிலும் இந்தோனேஷியாவிலும் ஒரே புகை மூட்டம். காற்றுத் தரக் குறியீட்டு எண் 108 ஐ தாண்டி விட்டது. இது ஆரோக்கியமான நிலை இல்லை.குழந்தைகளுக்கும் முதியவர்களுக்கும் ஆஸ்துமா உள்ளவர்களுக்கும் ரொம்பவே சங்கடமா இருக்கும். சென்ற ஆண்டு இதே போல் புகை மூட்டம் ஏற்பட்ட போது கண் எரிச்சல் ஏற்பட்டது. இப்போதும் லேசான கண் எரிச்சல் இருக்கிறது. இந்த ஆண்டு அந்த அளவுக்கு மோசமாகாமல் இருக்க வேண்டும்.


இந்தோனேஷியாவில் காட்டுத் தீக்கு முக்கிய காரணம் நிலச்சீரமைப்பு என்ற பெயரில் காடுகளுக்கு தீ வைப்பதுதான். சிறு விவசாயிகள்தான் தீ வைக்கிறார்கள் என்ற போர்வையில் பல தனியார் கம்பெனிகள்தான் இந்த தீ வைப்புகளுக்கு பின்னால். ஒருகட்டத்தில் தீ கட்டுக்குள் அடங்காமல் காட்டுத் தீயாக பரவுகிறது. ஒவ்வொரு வருடமும் இதே பிரச்சினைதான்.


காடுகளை சமப்படுத்த மிக எளிதாக தீ வைத்து விடுகிறார்கள். இங்கேயே பலமுறை நான் பார்த்திருக்கிறேன். சொன்னாலும் கேட்க மாட்டேங்கறாங்க. கொடுக்க வேண்டிய இடத்தில் கொடுத்து சரிகட்டிடறாங்க :(


இவர்கள் இப்படி காடுகளை அழிப்பதால் புகைமூட்டம் ஒரு பிரச்சினை என்றால் தட்பவெப்ப நிலையில் ஏகப்பட்ட மாற்றங்கள். பத்து வருடங்களுக்கு முன் அதிகபட்சமாக 32டிகிரி செல்சியஸ் வெப்பநிலைதான் இருக்கும். மிக அரிதாக 34டிகிரி செல்சியசுக்கு போகும். இப்போது 36டிகிரி 37டிகிரின்னு சர்வசாதாரணமா போகுது. முன்பு போல் மழைப்பொழிவும் இல்லை. சில நேரங்களில் ஒரேயடியாக கொட்டி வெள்ளப்பெருக்கும் வருகிறது.


மாதம் மும்மாரின்னு சொல்லுவாங்களே அது போல் மாதம் 10 மாரிகளாவது பொழியும்.இந்த வருடம் தொடர்ச்சியாக 35நாட்கள் மழை இல்லை. நல்ல சூடும் அனுபவப்பட்டது.  நாங்கள் இருப்பது சிறிய தீவு.  மழை நீர்தான் ரிசர்வாயர்களில் தேக்கப்பட்டு விநியோகிக்கப் படுகிறது. இப்படி தொடர்ச்சியா மழை இல்லேன்னா தண்ணீர் கஷ்டம். அப்புறம் என்ன கப்பலில்தான் தண்ணீர் கொண்டு வரவேண்டும் :(.  தண்ணீர் விநியோகம் தனியார் வசம் என்பதால் அதுவும் நடக்கும். ஒருமுறை அப்படியும் நடந்ததாம். தகவல் உண்மையான்னு உறுதியாத் தெரியலை. இப்போ இந்த புகைமூட்டம் மாறணும்னா கூட மழைபெய்ய வேண்டும்.  வருணபகவான் கருணை காட்டுவாரான்னு பார்த்துக்கிட்டு இருக்கோம்.

Sunday 3 October 2010

காமன் வெல்த் விளையாட்டுகள் கோலாகலத் தொடக்கம்


 
முன்குறிப்பு:  கொஞ்சம் பெரிய பதிவுதான். எடிட் பண்ணாமலேயே போட்டுட்டேன் :)
 
காமென்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் பல தடைகளையும் விமர்சனங்களையும் தாண்டி இன்று கோலாகலமாக நமது தலைநகர் புதுதில்லியில் துவங்கி விட்டது.


ஏழு மணிக்கு ஆரம்பிக்கும் என்று சொல்லப்பட்டது. வழக்கமான இந்திய பங்க்சுவாலிட்டியாகத்தான் இருக்கப் போகிறது என்ற எனது நம்பிக்கையை(?!) தவிடு பொடியாக்கி சரியாக ஏழு மணிக்கு விழா தொடங்கியது.

முதலில் பிரதமரும் அவரது மனைவியும் வந்தனர். அடுத்து இளவரசர் சார்லசும் அவரது மனைவியும் வந்தனர். தொடர்ந்து நமது ஜனாதிபதி வந்தார். இவர்கள் எல்லோருக்கும் முன்னரே நம் அன்புக்குரிய ஜனாதிபதி (ஜனாதிபதிகளை 'முன்னாள்' என்று சொல்லக் கூடாது என்று எங்கேயோ படித்த ஞாபகம் :D) அப்துல் கலாம் ஐயா வந்து விட்டார்.

முதலில் நம் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. பின்னர் அந்த ராட்சச ஹீலியம் பலூன் உயரே எழும்பியது. அதன் அடியில் கட்டப்பட்டிருந்த எட்டு பாவைகளும் (பல்வேறு கலாச்சார உடைகள் அணிந்திருந்தவை) உயர்ந்தன. அந்த பலூனே பெரிய டிஸ்ப்ளே ஸ்க்ரீனாகவும் அமைந்தது.

முதல் கலை நிகழ்ச்சியாக நம் நாட்டின் பல்வேறு பாரம்பரிய தாள வாத்தியக் குழுக்களின் (கேரளா, மணிப்பூர், பஞ்சாப், மேலும் சில மாநில குழுக்கள்) இசை நிகழ்ச்சி. உண்மையிலேயே எல்லோரையும் எழும்பி ஆட வைக்கும் தாளம். அதிலும் ஒரு சுட்டி மழலை மேதை 7வயது கேசவ் நடுநாயகமாக அமர்ந்து தபலா வாசித்த அழகே அழகு!

அடுத்து டெல்லி பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகளின் வரவேற்பு நடனம்(ஸ்வாகதம்) அருமையிலும் அருமை. பாடகர் ஹரிஹரன் பாடலைப் பாட, வளையணிந்த கரங்கள் கை கூப்பி வணங்குவது போல் உருவம் வரும்படி மாணவர்கள் அணிவகுத்து நின்று நடனம் ஆடினர். நடனத்தின் இறுதியில் மேலே அணிந்திருந்த அங்கி போன்ற ஆடையை கழற்றியதும் சிவப்பு வெள்ளை பச்சை உடையணிந்த மாணவர்கள் மூவர்ணக் கொடியை உருவாக்கினர். அதை ரசித்து முடிக்கும் முன் திடீரென்று அவர்கள் மேல் பெரிய வெள்ளைத்துணியால் மூடினர். என்ன நடக்கிறது என்று ஆவலோடு பார்க்கையில் துணிக்கு அடியில் நின்ற மாணவர்கள் சிவப்பு வண்ணத்தால் அந்த துணியில் ஏதோ வரைய ஆரம்பித்தனர். ஒரு நிமிடத்திற்குள் அருமையான பிசிறில்லாத மெஹந்தி டிசைன் வரைந்து ஆச்சரியப் படுத்திவிட்டனர் மாணவர்கள்! இதற்காக அவர்கள் எத்தனை மாதங்கள் பயிற்சி எடுத்தனர் எனத் தெரியவில்லை. ஹேட்ஸ் ஆஃப் மாணவர்களே!

அடுத்து பங்குபெறும் 71 நாடுகளின்  விளையாட்டு வீரர்கள் அணிவகுத்து வந்தனர். பாகிஸ்தான் அணி வரும் போது பகைமை மறந்து ஆரவாரத்துடன் கூடிய வரவேற்பை ஸ்டேடியத்தில் இருந்த மக்கள் அளித்தனர். இறுதியாக நமது அணியினர் வரும் போது ஸ்டேடியத்தில் இருந்த அறுபதாயிரம் பேரும் ஆர்ப்பரித்து வரவேற்றனர். டிவியில் பார்த்துக் கொண்டிருந்த ஒவ்வொரு இந்திய குடிமகனும் பிரச்சினைகளை மறந்து மனப்பூரவமாக வரவேற்றிருப்பான் என்பது உறுதி.

ஆனாலும் அந்த சுரேஷ் களவாணி ச்சே ச்சே சுரேஷ் கல்மாடி வரவேற்புரை வாசித்த போது(உண்மையிலேயே வாசிக்கத்தாங்க செய்தார்) காமெடியா இருந்துச்சு. அரசியல்ல இதெல்லாம் ஜகஜமப்பான்னு சொல்ற கவுண்டமணிய பார்க்கற மாதிரியே இருந்துச்சு :). எத்தனை பேருக்கு காசு கொடுத்து கூட்டிட்டு வந்தாருனு தெரியலை ஒன்னுமில்லாத்ததுக்கு எல்லாம் கைதட்டி விசிலடிச்சாங்க. ஒருவேளை அவரை கிண்டல் பண்ணினாங்களோ :)

அப்புறம் குத்துச்சண்டை வீரர் சுஷில் குமார் இளவரசர் சார்லசிடம் Queen's Batton ஐ கொடுத்தார். பின்னர் அவர் இங்கிலாந்து ராணியின் செய்தியை வாசித்தார். (மகாராணியார் இந்தியா வந்தால் அதுவே அவரது கடைசிப்பயணமா இருக்கும்னு யாரோ ஜோசியர் சொன்னாராம். அதான் அவர் வரலியாம். அங்கிட்டுமா ஜோசியத்தை நம்புறாக!)

அடுத்து நம்ம ஜனாதிபதி போட்டியை துவங்கி வைத்தார். அபினவ் பிந்த்ரா உறுதிமொழி எடுத்துக் கொண்டார். பின்னர் கலைநிகழ்ச்சிகள் தொடர்ந்தன.

Tree of knowledge என்ற பெயரில் குரு சிஷ்ய கல்வி முறை பற்றிய விளக்கமும் தொடர்ந்து இந்திய நடனங்களின் தொகுப்பாகவும் ஒரு நடன நிகழ்ச்சி. பரதநாட்டியம், மோகினி ஆட்டம், மணிப்பூரி நடனம், ஒடிசி, கதக், குச்சுப்புடி என் இந்திய பாரம்பரிய நடனங்கள் பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தப் பட்டது. அடுத்து பாரம்பரிய இந்திய கலையான யோகாசனங்களை செய்து காட்டினர்.

அடுத்து இந்திய ரெயில்வேயின் க்ரேட் இந்தியன் ஜர்னி நிகழ்ச்சி. இந்தியாவின் கலாச்சாரத்தை விளக்கும் வாகனங்கள் ஊர்வலமாக வந்தன கூடவே கிராமிய நடனக்கலைஞர்களின் நடனங்களும். அரசியல்வாதிகள் ஓட்டுக் கேட்பதை சித்தரிக்கும் வாகனம் கூழைக் கும்பிடு போடும் அரசியல்வாதிகளோடும் ஏகப்பட்ட லவுட் ஸ்பீக்கரோடும் அமர்க்களமாக வந்தது :). இது எந்த புண்ணியவானோட யோசனைன்னு தெரியல ஆனா பார்த்து நல்லா சிரிச்சேன் :).   மணல் ஓவியக்கலைஞர்கள் காந்திஜி மற்றும் இந்தியக் கொடியோடு பின் தொடரும் மக்களையும் மணலில் ஓவியமாக வரைந்தனர். அவர்கள் வரைய வரைய அது அப்படியே டிஸ்ப்ளே ஸ்க்ரீனில் வரும் போது பார்க்க ரொம்ப நல்லா இருந்தது.

இறுதியாக வந்தார் நம் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான்.   காமென் வெல்த் விளையாட்டின் தீம் பாடலைத் தொடர்ந்து ஜெய் ஹோ பாடலைப் பாடும் போது ஸ்டேடியத்தின் பின்னணியில் வாணவேடிக்கைகள் விண்ணில் வர்ணஜாலம் காட்டியது. அதனுடன் காமென் வெல்த் விளையாட்டுப் போட்டியின் துவக்கம் இனிதே நிறைவடைந்தது.

புகைப்படங்கள் காண க்ளிக் செய்யவும்!

வீடியோ தொகுப்பு காண க்ளிக்கவும்!

Wednesday 29 September 2010

திசைதிருப்பும் தீர்ப்பு

60 வருஷமா நீண்ட வழக்கின் தீர்ப்பு நாளைக்கு சொல்லப் போறாங்களாம். அடேங்கப்பா என்னா வேகம்!  சரி ஒரு வழியா தீர்பை சொல்லப்போறோம்னு வழிக்கு வந்துட்டாங்க. ஆனா இந்த தீர்ப்பு இப்போ வரக்காரணம் என்ன? வழக்கம் போல் மக்களை திசை திருப்பும் முயற்சியோ?!

என்னங்க பண்றது காலங்காலமா நம்ப நாட்டுல அது தானே நடக்குது. ஒரு பிரச்சினையை அமுக்க இன்னொன்றை முன்னாடி கொண்டு வரதுதானே இந்த அரசியல்வியாதிங்க பொழப்பே! மாவோயிஸ்ட் பிரச்சினையின் சலசலப்பை அடக்க உணவு தானிய பிரச்சினை. உணவுதானிய பிரச்சினையை சமாளிக்க காமன்வெல்த் பிரச்சினை. இப்போ அதை மறக்கடிக்க இந்த தீர்ப்பு.  மக்களாகிய நம்ம பழக்கமும் அதுதானே புதுசு கிடைச்சிடுச்சுன்னா பழசை மறந்துடுவோமே!

என் சந்தேகம் வலுக்கக் காரணம்... காமன்வெல்த் விளையாட்டை காரணம் காட்டியே தீர்ப்பை தள்ளி வைக்கணும்னு அபிப்ப்ராய பட்ட ஆளும் கட்சி இப்போ அந்தர் பல்டி அடிச்சிருக்கு. இப்போ உனக்கு சந்தேகம் வலுத்தா என்ன இல்லன்னா என்ன ஒன்னும் ஆகப்போறதில்லைன்னு சொல்றீங்களா அதுவும் சரிதான் :(

எது எப்படியோ தீர்ப்பை காரணம் காட்டி மக்கள் அடிச்சுக்காம இருந்தா சரி.

Monday 27 September 2010

எங்க அப்பாவும் பிளாக் ஆரம்பிச்சாச்சு :)

ஹாய் ஃப்ரெண்ட்ஸ் என்னோட அப்பாவும் பிளாக் ஆரம்பிச்சுட்டாங்க :-). அவங்க பக்கத்துக்கும் விசிட் அடிங்க அப்படீன்னு உங்களை உரிமையோட கேட்டுக்கறேன் :).

குமாரமுதம் இதை க்ளிக் பண்ணினா அங்க போயிடலாம். அவர் மக்கள்நலத்துறையில் அதிகாரியாக பணியாற்றியவர். மக்கள் நலத்துறை பற்றிய உங்கள் சந்தேகங்களையும் கேட்கலாம். முக்கியமா பிறப்பு இறப்பு சான்றிதழ்கள் பற்றிய உங்கள் சந்தேகங்களுக்கு சரியான பதில் கிடைக்கும். 

Friday 24 September 2010

கவிதை கவிதை

இது நான் ஒரு கவிதைப் போட்டிக்காக கிறுக்கியது. தலைப்பு "வாய்ப்பும் வியப்பும்"

யாம் பெற்ற இ(து)ன்பம் இவ்வையம் பெறுக :-)

பத்தாண்டு உணவு தானிய கையிருப்பு
பட்டினி ஏழைக்கும் வயிறு நிறையும் வாய்ப்பு
படித்த சீமான்களின் பழுதான கொள்கைப் பிடிப்பு
பசித்தவன் வாய்க்கு எட்டாது தடையானது வியப்பு!
பத்தாயத்து எலிகளுக்கு உணவாய்
பயனற்றுப் போனதில் மனம் நொந்த வெறுப்பு

பகல் கொள்ளை கல்வி கட்டணம்
சீரமைத்த அரசின் ஆணை
பரிதவித்த பெற்றோருக்கு கிடைத்த வாய்ப்பு
தடை விதித்து தன்னிருப்பை உணர்த்திய
நீதிமன்ற ஆணை கண்டு வியப்பு

பட்டிகாட்டு பட்டாம் பூச்சிகள்- பாங்காய்
படிக்க கிடைத்த சமச்சீர் கல்வி வாய்ப்பு
பகல் கொள்ளை பள்ளிகளின் முறையீட்டை
புறம் தள்ளிய நீதியின் கருணை கண்டு வியப்பு

இருமொழி கல்வி திட்டம்
இது தமிழக அரசு வழங்கிய வாய்ப்பு
இந்தியா முழுவதும் உள்ள வேலை வாய்ப்பு
இழந்தது தமிழர் கூட்டம் என்பது வியப்பு

தமிழில் கற்பவருக்கு வேலைவாய்ப்பில்-முன்னுரிமை
தருவதாக செப்பியது நல்ல வாய்ப்பு
தமிழில் கற்றவருக்கு கிடைத்த வேலையின்
தரம் என்னவோ கடைநிலையில்.. என்னே வியப்பு

சாதிகள் இல்லை என்று பெரியார்
சமத்துவபுரமாய் வந்தது வாய்ப்பு
கல்வியில் வேலையில் சாதி கேட்டு
கலங்க வைப்பது வியப்பு

பெண்களுக்கு முப்பத்திமூன்று சதவீத ஒதுக்கீட்டு
மசோதா கொண்டு வந்தது வாய்ப்பு
மன்றத்தில் அதனை நிறைவேற்றாத
மடமையை கண்டு வியப்பு

காமென்வெல்த் விளையாட்டுப் போட்டிகள்
கர்வத்தோடு பெருமை கொள்ள கிடைத்த வாய்ப்பு
கடமை மறந்த நிர்வாகிகளின் அலட்சியத்தால்
கர்வம் இழந்து தலைகுனியும் நிலை கண்டு வியப்பு.

அதிர்ச்சியும் ஆச்சரியமும் கொண்ட
அரசின் கொள்கைகள் கண்டு வியப்பு
அதனை உங்களோடு பகிர்ந்து கொள்ள
அருமையாய் அமைந்தது இந்த வாய்ப்பு.

Friday 10 September 2010

இடுகையூரில் ஒரு பதிவர் சந்திப்பூஊஊஊஊ- பகுதி2

பகுதி1



எல்லோரும் கிளம்பி பஸ்ஸில் ஏறும் சமயம் ஓட்டமா ஓடி வருகிறார் இலா. கூடவே விஜியும்.

இலா: ஹி ஹி மயில் குட்டி போட கொஞ்சம் லேட்டாயிடுச்சு அதான் நானும் லேட்டு

ஜெய்லானி: அதை நீங்க சொல்ல வேற செய்யணுமா. எங்களுக்கே தெரியுமே!

விஜி: நானும் ஃபெட்னா விழாவெல்லாம் முடிச்சு டயர்டா இருந்தேனா அதான் லேட்டாயிடுச்சு.

எல் போர்ட்: எங்களுக்காகவும் பாட்டு பாடுவீங்கல்ல.

விஜி: உங்களுக்கு இல்லாமலா?

விஜியின் இனிமையான பாடலோடு பயணம் தொடர்கிறது.

தீம் பார்க்கில்....

இமா அங்கிருக்கும் செடிகள் பூக்களோடு கையில் இருக்கும் ஃபோட்டோக்களை வைத்துக் கொண்டு உற்று உற்று பார்க்கிறார்

ஹைஷ்: என்ன இமா என்ன ஆராய்ச்சி நடக்குது?

இமா: இது என்ன பூ காய்னு பார்க்கறேன்.

ஹைஷ்: அதுக்கெல்லாம் இவ்வளவு கஷ்டப் பட வேணாம். வேலையை பூஸ்கிட்ட விட்டுடுங்க. வேலை கச்சிதமா முடிஞ்சிடும் :)

எல் போர்ட்: இமா இப்படிப் பார்த்தா ஒண்ணுமே புரியாது. அப்படியே ஒரு ஃபோட்டோவை செலக்ட் பண்ணிட்டு இப்போ பாருங்க எல்லாமே தெளிவா தெரியும் புரியும் :)

வானதி: ஹேஏஏய் இந்த லொகேஷன் நல்லா இருக்கு. இங்கயே சமையல் போட்டி நடத்திடலாம்.

கவிசிவா: நாட்டாமை அப்துல்காதர் இன்னும் வரலை. அதனால அந்த கத்திரிக்காய் மைக்கை உள்ளே வச்சுட்டு வாங்க. இல்லேன்னா 10கிலோ கத்திரிக்காய் வீட்டுக்கு அனுப்பிடுவோம்

நாஞ்சில்: ஆஹா இந்த இடத்தை பார்த்தவுடனேயே கவுஜ எழுதணும்னு தோணுதே!

ஜலீலா: ஏன் தம்பி ஏதாச்சும் பிலிப்பினோ பொண்ணு இந்தப் பக்கமா போச்சுதா?!

நாஞ்சில்: ஏங்க்கா நான் எங்க போனாலும் விடாம நானே மறந்து போன ஃபிலிப்பினோ பொண்ணை ஞாபகப் படுத்தறீங்க?

ஸ்டீபன்: அது ஒண்ணுமில்ல தல...அவங்க எல்லாம் அப்படித்தான். ஏதாச்சும் ஒரு வார்த்தை நம்ப வாயில இருந்து தப்பித் தவறி வந்திடுச்சுன்னா ஆயுசுக்கும் அதை வச்சே ஓட்டுவாங்க. அதுக்காக நாம நினைக்கறதை சொல்லாம இருக்க முடியுமா இல்ல பதிவு போடாமத்தான் இருக்க முடியுமா?

ஜலீலா: தம்பிங்கன்னா அப்படித்தான் கிண்டல் பண்ணுவோம். ஏற்கெனவே நாங்க மொட்டமாடி கவிஜ படிச்சு நொந்து போயிருக்கோம். இப்போ இன்னொரு கவிதையும்னா... தாங்க மாட்டோம். அதான் உங்களை டைவர்ட் பண்ண... ஹி ஹி

அப்படியே எல்லாரும் நடந்து போய்கிட்டு இருக்கும் போது ஒரு இடத்தில் கொஞ்சம் சைக்கிள்கள் வரிசையா நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது

எல் போர்ட்: அய்யோ என் சைக்கிள் இப்போ எப்படி இருக்கோ தெரியலியே :(. என் ஃப்ரெண்ட் அதை நல்லா கவனிச்சுக்கறாங்களோ இல்லையோ...

இலா: டேக் இட் ஈசி சந்து. தூசு படிஞ்சு போய் உங்ககிட்ட இருந்ததை விட சைக்கிள் இப்போ சந்தோஷமாவே இருக்கும்.

எல் போர்ட்: ?!?!?!?!

அப்படியே எல்லோரும் வேவ் பூல் பக்கம் வராங்க. பூலில் இருந்து யாரோ ஒருவர் நம் பதிவர்களைப் பார்த்து ஹாய் ஹாய்னு சொல்ற மாதிரி கையை ஆட்டறாங்க. எல்லோரும் திரும்பி ஹாய்னு சொல்றாங்க.

தண்ணீரைப் பார்த்ததும் பூஸ் அக்காவும் ஜீனோ தம்பியும் பயந்து நடுங்குகிறார்கள்

ஜீனோ: அக்கா அக்கா எனக்கு பயமா இருக்கு

பூஸ்(அழுகையை அடக்கியபடி): தம்பி அக்கா இருக்கறபோ பயப்படப்படாது. அக்கா மாதிரி தெகிரியமா இருக்கோணும். வா நாம அந்த சேருக்கு கீழே போய் உட்கார்ந்துக்கலாம்.

ஜீனோ: அக்கா நான் தண்ணியை பார்த்து பயப்படலை

பூஸ்: அப்புறம் தம்பி எதுக்கு நடுங்கற?

ஜீனோ: டோரா புஜ்ஜிக்கிட்ட பெர்மிஷன் வாங்காம வந்துட்டேன். இப்போ வீட்டுக்கு போனா என்னை வெளுத்து வாங்கிடும். அதான் அவ்வ்வ்வ்வ்

பூஸ்: சரி சரி நீ அடி வாங்கின அப்புறம் கண்ணை தொடைச்சுக்க ஒரு பாக்ஸ் டிஷ்யூ இமா தருவாங்க. நான் உனக்கு தைலம் வாங்கித் தரேன். அக்கா இருக்கறப்போ தம்பி இப்பூடி பயப்படப்படாது.

அப்போது வேவ் பூலில் இருந்து கை ஆட்டிய அந்தப் பெண் தட்டுத் தடுமாறி கரைக்கு வந்து...

ஆனந்தி: அடப்பாவிங்களா தண்ணிக்குள்ள மூழ்கிக்கிட்டு இருக்கேன் வந்து காப்பாத்துங்கன்னு கையை ஆட்டுனா கூலா ஹாய்னா சொல்றிங்க. நல்ல ஃப்ரெண்ட்ஸுங்கப்பா நீங்க எல்லாம்

ஆசியா: இன்னுமா நீங்க நீச்சல் கத்துக்கல?

ஆனந்தி: ஹி ஹி நீச்சல் தெரியும் ஆனா திடீர்னு மறந்து போச்சு

ஆசியா: நீங்க தனியாவா வந்தீங்க?

ஆனந்தி: இல்ல அப்பாவி தங்ஸும்,காயத்ரியும் வந்திருக்காங்க
கவிசிவா: அவங்க எல்லாம் எங்க?

ஆனந்தி: அதோ அங்க இருக்காங்க. காயத்ரியை யாரோ ஒரு பையன் ஆண்டின்னு சொல்லிட்டானாம். அவன அடிக்க துரத்திக்கிட்டு இருக்காங்க

பையன் எஸ்கேப்பாகி விட தளர்ந்து போய் காயத்ரி வருகிறார்

காயத்ரி: என்னை பார்த்து ஒரு பையன் ஆண்டின்னு சொல்லிட்டான். என்ன தீம் பார்க் வந்து... என்ன பிரயோஜனம்... என்ஜாய் பண்ண முடியாம பண்ணிட்டானே!

வசந்த்: ஆமாமா பாட்டியைப் பார்த்து ஆண்டின்னு கூப்பிட்டா கோபம் வரத்தான் செய்யும்.

காயத்ரி: அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

அப்பாவியும் வந்து சேர்கிறார்.

அப்பாவி: எல்லாரும் எப்படி இருக்கீங்க?

மைண்ட் வாய்ஸ்: இவ்வளவு நேரம் நல்லாத்தான் இருந்தாங்க. இப்பதான நீ வந்திருக்க. இனிமே கஷ்டம்தான்.

அப்பாவி: அப்பப்பா எங்க போனாலும் இந்த மைண்ட் வாய்ஸ் தொல்லை ரொம்ப ஜாஸ்தியா போச்சு

மைண்ட் வாய்ஸ்: ஏன் சொல்ல மாட்ட... உன்னோட பிளாகுக்கு நிறைய பேர் வர்றதே மைண்ட் வாய்சை படிக்கத்தான். அது என்னிக்குத்தான் உனக்கு புரியப்போகுதோ

அப்பாவி: சரி சரி ஒத்துக்கறேன். இப்போ என் இமேஜை டேமேஜ் பண்ணாதே ப்ளீஸ்

மைண்ட்வாய்ஸ்: அது நல்ல பிள்ளைக்கு அழகு

ஜெய்லானி: இந்த குளத்தில் இருக்கும் தண்ணி பச்சைத் தண்ணியா சுடு தண்ணியா

வசந்த்: பச்சைத்தண்ணிதான். ஏன் சுடுதண்ணி சமைக்கப் போறீங்களா?

ஜெய்லானி: பச்சைத் தண்ணியா? அப்போ ஏன் இது பச்சை நிறத்தில் இல்லை? பச்சை நிறத்தில் இல்லாததை ஏன் பச்சைத் தண்ணின்னு சொல்லணும்?

கவிசிவா: அடடா ஆரம்பிச்சுட்டாரய்யா ஆரம்பிச்சுட்டாரு. இனி வரிசையா சந்தேகம் வருமே. வாங்க வாங்க இங்க இருந்து போயிடலாம். இல்லன்னா சந்தேகம் கேட்டே நம்மளக் கொன்னுடுவார்.

ஜெய்லானி: ஏன் நான் அடுத்த இடத்துக்குப் போனா எனக்கு சந்தேகம் வராதா? அப்படீன்னா ஏன் வராது? இங்கன்னா மட்டும் ஏன் சந்தேகம் வருது?

நாஞ்சில்: இது வேலைக்காகாது. ரெண்டு மூணு அ.கோ.மு. வை வாயில் வச்சு அமுக்குங்கப்பா.

ஜெய்லானி: என் வாயிலயா? உங்க வாயிலயா?

நாஞ்சில்: மக்கா ஸ்டீபா என்னை காப்பாத்தூஊஊஊஊ

வசந்த் ஜெய்லானியை திசை திருப்பும் விதமாக சிறிய விளையாட்டுப் போட்டியை நடத்துகிறார். இரண்டு படங்களைக் காட்டி அதற்கான வார்த்தையை கண்டு பிடிக்க சொல்கிறார்.

நாஞ்சில்: தல எனக்கு தூக்கம் வருது. அப்புறமா வந்து விடை சொல்றேன்

ஸ்டீபன் சரியான விடையை சொல்லி பரிசைத் தட்டி செல்கிறார்.

தூரத்தில் ஒருவர் மேஜை அடுப்பு எல்லாம் ரெடியா வைத்து கையில் சுத்தியோடு காத்திருக்கிறார். யாருன்னு பார்த்தா... நாட்டாமை அப்துல் காதர்.

அப்துல்காதர்: வானதி அக்கா சொன்ன மாதிரி இங்கேயே சமையல் போட்டியும் நடத்திடலாம்.

நாஞ்சில்: இது வேறயா?

ஸ்டீபன்: ஆசியாக்கா இந்தாங்க நீங்க கேட்ட மாங்காய். திருட்டு மாங்காய்தானே ருசிக்கும் அதான் பக்கத்து வீட்டில் திருடிக் கொண்டு வந்தேன். வெற்றி உங்களுக்குத்தான்.

மற்ற போட்டியாளர்களும் சமையலுக்கு தேவையான பொருட்களை எடுத்து வைக்க அப்பாவி ஒரு பெரிய பார்சலை எடுத்து மேசை மேல் வைக்கிறார்.

அப்துல்காதர்: அது என்ன இவ்ளோ பெரிசா எடுத்துட்டு வந்திருக்கீங்க

அப்பாவி: இட்லி குண்டானும்,நானே அரைத்த இட்லி மாவும்

மற்ற எல்லோரும்: என்னது அப்பாவி இட்லி சமைக்கப் போறாங்களா...... எஸ்ஸ்ஸ்ஸ்கேஏஏஏஏஏஏஏப்...................

எல்லோரும் மறைந்து விட அப்பாவியாக தங்கமணி தான் கொண்டு வந்த மாவில் இட்லி செய்து சோகமாக தண்ணீரில் எறிந்து கொண்டிருக்கிறார்.

மைண்ட் வாய்ஸ்: எதுக்கும் கொஞ்சம் மெதுவாவே இட்லியை வீசு. இல்லேன்னா பாவம் தண்ணியில் உள்ள மீனெல்லாம் அடிபட்டு செத்துப் போகும்.

அப்பாவி: ?!?!?!?!

Tuesday 7 September 2010

எலிக்கு உணவில்லையெனில் ஏழையை பட்டினியிடுவோம்

தானியக் கிடங்கில் தானியம் வீணாகி மக்கி நாசமாய்ப்போனாலும் பரவாயில்லை ஆனால் ஏழைகளுக்கு கொடுக்க மாட்டோம் அப்படீங்கறாரு நம்ப உணவு அமைச்சரும் பிரதம மந்திரியும். அதிலும் 37 சதவீதம் மக்கள் வறுமைக்கோட்டுக்கு கீழ இருக்கிறார்களாம்.  அதையும் அவருதான் சொல்றாரு.

ஏண்டா டேய் (மரியாதை கொடுக்க மனசு இல்லை) உங்களுக்கு எல்லாம் மனசாட்சின்னு ஒன்னு கிடையாதாடா? உங்களுக்கு சம்பள உயர்வு வேணும்ம்னு கேட்டு கூச்சல் போடுறீங்களேடா உன்னை ஓட்டு போட்டு அனுப்பினானே ஓட்டாண்டி அவனுக்கு வீணாகப் போகும் உணவுப் பொருளைக் கொடுக்கக் கூட உனக்கு என்னடா கஷ்டம்? அப்படி என்னடா பொல்லாத கொள்கை உங்களுடையது?
உங்களுக்கெல்லாம் கொள்கைன்னா என்னான்னு தெரியுமா? அதான் சீசனுக்கு சீசன் தேர்தலுக்கு தேர்தல் மாத்துறதுதானே உங்க கொள்கையெல்லாம். அப்புறம் ஏன் இந்த விஷயத்தில் இத்தனை பிடிவாதம்? வீணாகிப் போவதை பகிர்ந்தளிப்பதில் என்ன பிரச்சினை? அப்படி என்ன ஈகோ!

சின்ன சின்ன பிரச்சினைகளுக்கு கூட நாடாளுமன்றத்தை ஸ்தம்பிக்க வைக்கும் எதிர்கட்சிகள் இதில் அதிகம் அலட்டிக் கொள்ளாதது ஏன்? ஏழைப்பங்காளர்கள் என்று சொல்பவர்கள் கூட பெரிதாக கண்டுகொள்ளவில்லையே ஏன்?

சரி இந்த பாழாப்போன அரசியல்வியாதிகளுக்குத்தான் அறிவு கிடையாது. ஐஏஎஸ் படிச்சு பெரிய பெரிய பதவியில் இருந்து பிரதமருக்கு ஆலோசனை சொல்லும் அதிகாரிகளுக்கு கூடவா அறிவு, மனிதாபிமானம் கிடையாது? அது எப்படி இருக்கும் அரசு செலவில் சுகிப்பவர்கள் அல்லவா நீங்கள். ஆட்சிக்கேற்ற, அரசியல்வாதிக்கேற்ற மாதிரி ஜால்ரா தட்டத்தானே உங்களுக்கெல்லாம் தெரியும். அங்கே பட்டினியால் மடியும் ஏழையைப் பற்றி உங்களுக்கென்ன கவலை? உணவுதானியங்கள் எலிகளுக்கு உணவானால் உங்களுக்கு என்ன கவலை?  உங்கள் உணவில் எலி விழாமல் இருக்க வேண்டும் அவ்வளவுதானே?!


நடிக நடிகையரின் அந்தரங்கங்கங்களை தோண்டித் துருவும் ஊடகங்கள் இதில் அக்கறை காட்டாதது ஏன்? போணியாகாது என்பதாலா?

உன் தலைவனை ஏதோ சொல்லிட்டான்னு சொல்லி தீக்குளிக்க தயாராக இருக்கும் தொண்டனே உன் சக மனிதனுக்கு வீணாகும் உணவுப் பொருளைக் கூட கொடுக்க மறுக்கிறானே உன் தலைவன் ஏன்னு கேட்க மாட்டியா?  அவ்வளவு பயமா? அப்புறமும் ஏன் அவனுக்கு கொடி பிடித்துக் கொண்டு அலைகிறாய்?  உன் ரத்தைத்தை உறிஞ்சிக் கொண்டு உன்னையே கொள்ளையடிப்பவன் பின்னால் ஏன் போகிறாய்?

இவ்வளவும் இங்கு பேசும் நமக்காவது சொரணை இருக்கிறதா :(

Saturday 4 September 2010

இடுகையூரில் ஒரு பதிவர் சந்திப்பூஊஊஊ

எல்லாரும் அடிக்கடி பதிவர் சந்திப்பெல்லாம் நடத்துறாங்க. நமக்குத்தான் அதுக்கெல்லாம் கொடுப்பினை இல்லியே! தனியா இந்தத்தீவுல உட்கார்ந்து பொலம்பிக்கிட்டு இருக்காம கற்பனையிலாவது ஒரு பதிவர் சுற்றுலா நடத்துவோமேனு நடத்திட்டேன்.ஹி ஹி :-)

பதிவர் சந்திப்பு
நாள்: பிப்ரவரி 31 2011
இடம்: ப்ளாக் தீம் பார்க், இடுகையூர்.


எல்லோரும் இடுகையூர் சந்திப்பில் சந்தித்து அங்கிருந்து தீம் பார்க் போவதாக ப்ளான்.


வசந்த் எல்லோருக்கும் முன்பாகவே வந்து காத்திருக்கிறார். கூடவே ஒரு ரோபோவும் இருக்கிறது.


ஜலீலாக்காவும் வழக்கம் போல அட்டகாசமான சாப்பாட்டு ஐட்டங்களோடு வந்து இறங்குகிறார். இந்த முறை கூடவே சமைத்து அசத்தும் ஆசியாவும்.


வசந்த்: என்னக்கா மூட்டை முடிச்செல்லாம் பெரிசா இருக்கு?


ஜலீலா: நான் எங்க போனாலும் எல்லாருக்கும் சாப்பாடு எடுத்துட்டுதான் வருவேன். என் கையால சமைச்சுக் கொடுத்தாத்தான் எனக்கு திருப்தி ஹி ஹி

ஆசியா: என்ன வசந்த் ஒரு பொம்மையையும் கூடவே எடுத்துட்டு வந்திருக்கீங்க. சின்ன வயசு ஞாபகம் இன்னும் போகலியா?

வசந்த்: அய்யோ நல்லா பாருங்க அது ரோபோ. என்ன வேலை சொன்னாலும் செய்யும். உங்க மூட்டை முடிச்சு எல்லாத்தையும் அதுவே தூக்கிட்டு வரும்.

ஜலீலா: அதுசரி நாஞ்சில் தம்பி எங்கே இன்னும் காணோம்?

வசந்த்: அங்கே பாருங்க ஒருத்தர் கன்னத்துல கை வச்சுட்டு போஸ் கொடுத்துட்டே ஒருத்தர் வரார். அவர் நாஞ்சில்னுதான் நினைக்கறேன்.

ஜலீலா: கன்னத்துல கை வச்சுட்டு வர்றாரா? அப்போ கண்டிப்பா அது நாஞ்சிலாரேதான்

நாஞ்சில் பிரதாப்பும் வந்து சேர்கிறார்.


ஜெய்லானி மூக்கு சிவக்க கண்கலங்க வருகிறார்.

ஜலீலா: என்னாச்சு? ஏன் அழறீங்க ஜெய்லானி?

ஜெய்லானி: ஒண்ணுமில்லக்கா. ஒழுங்கா சுடுதண்ணி சமைக்கலேங்கறதுக்காக எங்க வீட்டுல பூரிக்கட்டை கைதவறி என் மண்டையில் விழுந்திடுச்சு அதான் அவ்வ்வ்வ்வ்வ்

நாஞ்சில்: சரி விடுங்க தல... குடும்ப வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம். இனிமே ஹெல்மெட் போட்டுக்கிட்டே சமையல் பண்ணுங்க

அப்போது மரத்தின் மீது ஏதோ சலசலப்பு... எண்ணம் அயகானால் எல்லாம் அயகாகும் அப்ப்டீன்னு ஒரு பூஸ் மியாவ் மியாவ்னு தலையில் கவசம் கையில் கோடரியோடு உட்கார்ந்திருக்கு.

ஆசியா: ஹேய் அதீஸ் பூஸ் என்ன இன்னும் மரத்து மேல உட்கார்ந்திருக்கீங்க. அதான் கவசமெல்லாம் போட்டிருக்கீங்கல்ல கீழே வாங்க

அதிரா@பூஸ்@அதீஸ்: ம்ஹூம். எனக்கு அ.கோ.மு. தந்தாதான் வருவேன்.

ஜெய்லானி: முடியாது முடியாது அ.கோ.மு. எல்லாம் எனக்குத்தான்

அது என்னடா அ.கோ.மு.ன்னு மற்ற எல்லாரும் திரு திருன்னு முழிக்கறாங்க.


அந்த நேரம் யாரையோ திட்டிக்கிட்டே கவிசிவா வர்றாங்க.

நாஞ்சில்: என்னாச்சு கவி இன்னைக்கு யாரைத் திட்டறீங்க? யாராச்சும் பல்பு கொடுத்துட்டாங்களா?

கவிசிவா: எல்லாம் இந்த ஏர் இந்தியாக்காரனைத்தான் திட்டிக்கிட்டு வரேன். இவனுங்க லேட்டாத்தான் கிளம்புவானுங்கன்னு தெரிஞ்சுதான் நேற்றே வந்து சேர்ந்துடணும்னு 5நாளைக்கு முன்பு உள்ள ஃப்ளைட்லயே புக் பண்ணினேன். பாழாப்போனவனுங்க 5நாள் தாமதமா புறப்பட்டு இப்பதான் வந்து சேர்ந்தானுங்க.

நாஞ்சில் பிரதாப்: இதுக்கெல்லாமா டென்ஷன் ஆவாங்க. சரி சரி விடுங்க

அதீஸ்: எனக்கு அ.கோ.மு வேணும்.

ஆசியா: அது என்னப்பா அ.கோ.மு. அதைத் தூக்கிப் போடுங்க பூஸ் கீழ வரட்டும்.

கவிசிவா: அது ஒண்ணுமில்ல ஆசியா. அவிச்ச கோழி முட்டையைத்தான் ஜெய்லானியும் அதிராவும் அப்படி   அ.கோ.மு. ன்னு சொல்லிக்கிட்டு இருப்பாங்க. இதுக்காக எப்ப பாரு ரெண்டு பேருக்கும் சண்டைதான்.

ஆசியா: இவ்வளவுதானா. அதான் நான் நிறைய கொண்டு வந்திருக்கேனே. சுடச்சுட முட்டை பஜ்ஜி போடலாம்னு நினைச்சு எடுத்துட்டு வந்தேன். இதோ பிடியுங்க.

பூஸ் முட்டையை முழுங்கிக் கொண்டே கீழே இறங்கி வருகிறது.

மேலே ஒரு ஃப்ளைட் வரும் சத்தம் கேட்கிறது. அவ்வளவுதான் கூட ஐந்தாறு முட்டையை அபேஸ் பண்ணிக்கிட்ப்டு பூஸ் ரோபோவின் பின்னே போய் ஒளிந்து கொள்கிறது.


எல்லோரும் சிரிக்க ஃப்ளைட்டிலிருந்து ஹைஷ் அண்ணாவும் ஜீனோ, இறங்கி வருகிறார்கள். ஜீனோவுக்கு ரோபோவைப் பார்த்ததும் சந்தோஷம் தாங்கவில்லை. உடனே என் இனிய இயந்திரா மொழியில் ரோபோவுடன் கதைக்க ஆரம்பித்து விட்டது.

அப்போது ரோபோவின் பின்னிருந்து கர்ர்ர்ர்ர்ர்ர் என்று சத்தம். ஜீனோ சுற்றும் முற்றும் தேடிப்பார்த்து பூஸ் அக்காவைக் கண்டதும் சந்தோஷம் தாங்காமல் துள்ளிக் குதிக்க ஆரம்பித்து விட்டது

தூரத்தில் எல் போர்ட் மாட்டி சீரியசாக ஒரு பெண் நடந்து வந்து கொண்டிருக்கிறார்.


பார்த்தவடன் எல்லோருக்கும் புரிந்து விட்டது.

எல்லோரும் கோரசாக: ஹேஏஏஏஏஏய் சந்தூஊஊஊஊ

சந்தூ@எல்போர்ட்: (இதுக்கு என்னான்னு ரியாக்ட் பண்ணனும்னு தெரியலன்னு சொல்லிக்கிட்டே) ஹாஆஆஆஆய்

நாஞ்சில்: லேட்டாச்சுப்பா கிளம்ப வேணாமா?

கவிசிவா: இன்னும் இமா வானதி இவங்கல்லாம் வர்றேன்னு சொன்னாங்க இன்னும் காணோமே.

அப்போது இமா கையில் பல பூக்கள் காய்களின் ஃபோட்டோக்களோடு வருகிறார். கூடவே ஆமையாரும்.

இமா: இது நான் நியூஸிலாந்தில் காட்டுக்குள் மாட்டிக்கிட்டபோது எடுத்த படங்கள். இதெல்லாம் என்ன பூ காய்னு யாருக்காவது தெரியுமா?

வசந்த்: ஆரம்பிச்சுட்டாங்கையா ஆரம்பிச்சுட்டாங்க

அப்போது வானதி கேமரா மைக் எல்லாம் எடுத்துட்டு வர்றாங்க

ஜெய்லானி: என்னாது இதெல்லாம்?

வானதி: ஹி ஹி இங்கேயே சமையல் போட்டியும் நடத்திடலாம்னு..

நாஞ்சில்(மனதுக்குள்):அடடா தெரியாம இந்த கும்பல்ல வந்து மாட்டிக்கிட்டோம் போல இருக்கே! நம்ப பங்காளிக யாராவது வந்தாலூம் கும்மி அடிக்கலாம்.

அந்த நேரம் பார்த்து "நாடோடி" ஸ்டீபன் வருகிறார்

நாஞ்சில்: மக்கா நீயாவது வந்தியே! இங்க எல்லாம் ஒரு கேங்கா இருக்காங்க. அது சரி ஏன் லேட்டு?

ஸ்டீபன்: ஹி ஹி அது பக்கத்து வீட்டு மதிலேறி குதிச்சு மாங்கா பறிக்கும் போது மாட்டிக்கிட்டேன். அதான் அங்க இருந்து மாங்காயோட எஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஆக லேட்டாயிடுச்சு

எல்லோரும் கிளம்பி தீம் பார்க் போறாங்க. இனி தீம் பார்க்கில்...இவர்களோடு இன்னும் சிலரையும் சேர்த்து  தீம் பார்க்கில் சந்திக்கலாம்....

Saturday 28 August 2010

இவர்களெல்லாம் மருத்துவர்கள்தானா? மனிதர்கள்தானா?

நேற்று ஒரு மலையாள சேனலில்(அம்ரிதா டிவி) பார்த்த ஒரு நிகழ்ச்சி இப்படி கூடவா மருத்துவர்களும் மருத்துவமனை ஊழியர்களும் இருப்பார்கள் என்று கோபப்பட வைத்தது.

அது 'கதையல்ல நிஜம்' போன்றதொரு நிகழ்ச்சி. பல பிரச்சினைகளுக்கும் இரு தரப்பினரையும் அழைத்து ஒரு லீகல் பேனல்(Legal pannel) முன்பு வைத்து பேசி சுமூகமான முடிவை எட்ட உதவுகிறார்கள். சில எபிசோடுகளில் சுமூக முடிவை எட்டாமல் கோர்ட்டில் பார்த்துக் கொள்கிறோம் என்று பிரிவதும் நடக்கிறது.

நேற்று நடந்த நிகழ்ச்சியின் சுருக்கம் இதோ.

24வயது பெண் ஒருவர் கர்ப்பம் தரித்த ஆறாவது வாரத்தில் ரத்தப்போக்கு ஏற்படவே உடனே கணவரும் மாமியாரும்(கணவரின் அம்மா) சேர்ந்து பக்கத்தில் உள்ள ஒரு மருத்துவ மனைக்கு அழைத்து சென்றிருக்கிறார்கள். மருத்துவர்கள் பரிசோதித்து விட்டு கர்ப்பம் கலைந்து விட்டதாகவும் டி அண்ட் சி செய்யவேண்டும் எனவும் சொல்லியிருக்கிறார்கள். கணவரும் சம்மதித்து அட்மிட் செய்திருக்கிறார்.

திடீரென்று ஆப்பரேஷன் தியேட்டரில் இருந்து நர்சுகளும் டாக்டரும் உள்ளே போவதும் வருவதுமாக பரபரப்பாக இருந்திருக்கின்றனர். ஒருவர் வந்து அந்த பெண்ணின் கணவருக்கு ப்ளட் டெஸ்ட் செய்ய வேண்டும் என்று கூட்டிக் கொண்டு போய் ரத்த சாம்பிள் எடுத்திருக்கிறார்.

சிறிது நேரம் கழித்து கணவரின் சகோதரியை அழைத்து பலரின் முன்னிலையில் அந்த பெண்ணுக்கு ஹெச் ஐ வி பாசிட்டிவ் எனவும் பயப்பட வேண்டாம் இன்னும் 20வருடங்கள் உயிரோடு இருப்பார் எனவும் சொல்லியிருக்கிறார். குடும்பத்தினருக்கு பயங்கரமான அதிர்ச்சி. இதற்கிடையே கணவரின் ப்ளட் டெஸ்ட் ரிசல்ட் வரவும் அவருக்கு நெகட்டிவ் என்றும் சொல்லியிருக்கின்றனர்.

மருத்துவனை ஊழியர்கள் பலரும் ஆப்பரேஷன் தியேட்டருக்குள் போவதும் அந்த பெண்ணை எட்டிப் பார்ப்பதுமாக இருந்துள்ளனர். ஆனால் அப்பெண்ணோ சுயநினைவற்ற நிலையில்(அனஸ்தீஷியா கொடுக்கப்பட்டிரூப்பதால்). அந்த பெண்ணின் மாமியார் பொறுக்க முடியாமல் ஆப்பரேஷன் தியேட்டருக்குள் நுழைந்ததும் அங்கு அவர் கண்ட காட்சி அவரை நிலைகுலைய வைத்துள்ளது. அந்த பெண்ணின் மீது எந்த துணியும் இல்லாமல் அப்படியே படுக்க வைத்திருக்கின்றனர். இந்த நிலையில் தான பலரும் (ஆண்கள் உட்பட) வந்து எட்டிப் பார்த்து விட்டு போயிருக்கின்றனர். எந்த ஒரு நர்சும் அந்த பெண்ணின் மீது ஒரு போர்வையை எடுத்துப் போடக் கூட மனமற்றவர்களாய் இருந்திருக்கின்றனர். அருகில் செல்லவே தயங்கியிருக்கின்றனர்.

அந்த மாமியாரும் அவரது பெண்ணும் சேர்ந்து இந்த பெண்ணுக்கு உடை போட்டு விட்டு ஆம்புலன்ஸ் வரவழைத்து மெடிக்கல் காலேஜ் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு வைத்து நடந்து மூன்று கட்ட பரிசோதனைகளிலும் அந்த பெண்ணுக்கு ஹெச் ஐ வி நெகட்டிவ் என்ற ரிசல்ட் வந்துள்ளது. அந்த மூன்று டெஸ்ட்களும் முடிந்து ரிசல்ட் வரும் நாள் வரை அந்த பெண்ணுக்கு உற்ற துணையாக இருந்து கவனித்துக் கொண்டது கணவரும் மாமியாரும்தான். அந்த பெண்ணின் தாய்க்கு தகவல் தெரிவித்து அவரையும் கலங்கச் செய்ய வேண்டாம் என்று தெரிவிக்கவில்லை. ஒருவேளை பாசிட்டிவ் ஆக இருந்தால் மூவரும் தற்கொலை செய்ய திட்டமிட்டிருக்கின்றனர்.

இதன் பின்னர் முதலில் சென்ற மருத்துவமனையை தொடர்ந்து விளக்கம் கேட்டதற்கு சரியாக பதிலளிக்காமல் இழுத்தடிதிருக்கின்றன்ர். நேற்றைய நிகழ்ச்சிக்கும் அவர்கள் வரவில்லை. மருத்துவமனைக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்க எல்லா விதத்திலும் உதவுவதாக அம்ரிதா டிவி உறுதியளித்துள்ளது .

எனக்குத் தோன்றிய சந்தேகங்கள்

1. ஹெச் ஐ வி டெஸ்ட் ரிசல்ட்டின் ரகசியம் காக்கப்பட வேண்டும் என்பது சட்டம். அது காற்றில் பறக்க விடப்பட்டுள்ளது.
2. டி அண்ட் சி செய்யப்படும் பெண்ணுக்கு அவரது அனுமதியில்லாமலேயே ஹெச் ஐ வி டெஸ்ட் செய்ய வேண்டியதின் அவசியம் என்ன?
3. முதல் டெஸ்டில் பாசிட்டிவ் என ரிசல்ட் வந்தால் அடுத்த இரண்டு கட்ட சோதனைகளுக்கு பின்னர் மட்டுமே பாசிட்டிவ் என்பது உறுதி செய்யப்பட வேண்டும்.
4. ஹெச் ஐ வி தொடுவதால் தொற்றுவதில்லை என்பது மருத்துவருக்கும் அங்கு வேலை பார்க்கும் நர்சுகளுக்கும் தெரியாதா?
5. அந்த கணவரும் மாமியாரும் கொஞ்சம் விவரம் உள்ளவர்களாக இருந்ததால் அந்த பெண்ணை அங்கேயே நிராதரவாக விட்டுச் செல்லாமல் வேறுமருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இருந்தாலும் அந்த குடும்பத்தினர் அனுபவித்த மனவேதனைகளுக்கு யார் பரிகாரம் செய்வார்கள்?

இதுபோன்ற மருத்துவர்கள் உண்மையிலேயே மருத்துவம் படித்தவர்கள்தானா? முதலில் அவர்கள் மனிதர்கள்தானா?

இந்த லட்சணத்தில் அந்த மருத்துவமனை நிர்வாகம் நடத்தும் மருத்துவகல்லூரிக்கு அங்கீகாரம் கிடைத்து விட்டதாம் :(. அங்கீகாரம் கொடுப்பதற்குத்தான் கேதன் தேசாய் போன்றவர்கள் இருக்கின்றனரே! இதுவும் நடக்கும் இதற்கு மேலும் நடக்கும். நாம்தான் கவனமாக இருக்க வேண்டும்.

Wednesday 25 August 2010

எனக்கொரு சந்தேகம் நான் இந்தியரா?!


நான் கடந்த 10வருடமாக வெளிநாட்டில் இருக்கிறேன். வருடத்திற்கு ஒரு மாதம் மட்டுமே இந்தியாவில் இருக்கிறேன். என்னிடம் இந்திய பாஸ்போர்ட் இருக்கிறது. அப்போ நான் இந்தியனா அல்லது நான் இந்தோனேஷியாவில் வாழ்வதால் இந்தோனேஷியனா?

எனக்கு ஏன் இந்த சந்தேகம் வந்ததுன்னா...

நம்ப செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் இந்தியரான்னு நம்ப மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்துக்கு சந்தேகம் வந்திடுச்சாம் :-(. நம் நாட்டுக்காக விளையாடி நான்கு முறை சாம்பியன் பட்டம் பெற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர். பத்ம விபூஷன் விருதால் சிறப்பிக்கப்பட்டவர். முதல் கேல் ரத்னா வாங்கியவர். எப்போதும் போட்டிகளில் விளையாடும் போதும் இந்திய கொடி வைத்துக் கொண்டுதான் விளையாடுகிறார். இந்தியன் பாஸ்போர்ட் வைத்திருக்கிறார்.

விளக்கமான செய்திக்கு இங்கே சொடுக்கவும்

இம்பூட்டும் இருக்கறவர பார்த்தே நீ இந்தியனான்னு சந்தேகப்படும் போது நானெல்லாம் எம்மாத்திரம்?

எனக்கு இன்னும் கொஞ்சம் சந்தேகம் இருக்குதுங்கோ யாராச்சும் தெளிவு படுத்தினா புண்ணியமா போகும்.

சோனியாகாந்தி இத்தாலியில் பிறந்தவர். இந்தியாவில் இருப்பவர் அவர் இந்தியரா இத்தாலியரா?

அவரின் தலைமையின் கீழ் ஆளும் கட்சியான காங்கிரஸ் இயங்குவதால் நாட்டின் சட்ட திட்டங்களுக்கு எந்த குந்தகமும் வந்து விடவில்லையா?

முக்கியமான சந்தேகம் வெளிநாட்டில் இருக்கும் நாமெல்லாம் இந்தியரா இல்லை நாடில்லாத நாடோடிகளா?

Monday 23 August 2010

பரிசுக் கவிதை

அறுசுவை.காமில் நடந்த கவிதைப்போட்டியில் முதல் பரிசு பெற்ற எனது கவிதை இங்கே

நான் கலந்து கொண்ட முதல் கவிதைப் போட்டி இது. பரிசு பெற்ற மகிழ்ச்சியை உங்களோடும் பகிர்ந்து கொள்கிறேன் :-)).

Friday 20 August 2010

ஏர் இந்தியா லொள்ளு

இந்த ஏர் இந்தியா ஆட்களோட லொள்ளு தாங்க முடியலப்பா. திடீர்னு ஃப்ளைட்டை கேன்சல் பண்ணிடறானுங்க. இல்லேன்னா ஒருமணிநேரம் இரண்டு மணி நேரம் இல்லை ஒருநாள் இரண்டுநாள் தாமதமாகத்தான் புறப்படவே செய்யும். சரி அதையாவது பொறுப்பா பயனிகளுக்கு சொல்லுவானுங்களான்னு கேட்டா அதுவும் கிடையாது.

எனக்கென்னவோ இவனுங்க மற்ற ஏர்லைன்ஸுக்கு லாபம் ஏற்படுத்திக் கொடுக்கவே இப்படி செய்யறானுங்களோன்னு சந்தேகம்... இல்லை இல்லை உறுதியாவே சொல்லலாமோன்னு தோணுது :(. தாமதமாவதற்கு இவனுங்க சொல்ற காரணம் பைலட் இல்லை பைலட் வரலை பைலட்டுக்கு ட்யூட்டி டைம் முடிஞ்சிடுச்சும்பானுங்க. ஏன் இவனுங்களுக்கு முன்னாடியே ஃப்ளைட் ஷெட்யூல் எல்லாம் தெரியாதா? அதற்கேற்ற மாதிரி பைலட் ட்யூட்டி ஷெட்யூல் பண்ண முடியாதா? அப்படி பைலட் பற்றாக்குறைன்னா புதிய ஆட்களை எடுக்கணும். இல்லேன்னா பைலட் எண்ணிக்கைக்கு தகுந்த மாதிரி முதலிலேயே ஷெட்யூல் செய்யணும்.

இதையெல்லாம் விட்டுட்டு அவனுங்க பொறுப்பில்லாம பயணிகளை அலைக்கழிப்பானுங்களாம். சும்மா ஃப்ரீயாவா ஃப்ளைட்டுல ஏத்தறானுங்க. இதையெல்லாம் கேட்டா கோர்ட்டுக்குப் போவியா போ எனக்கொண்ணும் பிரச்சினை இல்லேன்னு தெனாவெட்டா பதில் சொல்றானுங்க.

என் அண்ணி இந்தியாவுக்கு போறதுக்காக சிங்கப்பூர் டூ திருவனந்தபுரத்துக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரசில் மூன்று மாதத்திற்கு முன்பே டிக்கெட் புக் பண்ணியிருந்தாங்க. பயணத்திற்கு ஒருவாரம் இருக்கும் முன்பு எதற்கும் ஃப்ளைட் டைமை செக் பண்ணிக்கலாம்னு ஏர் இந்தியா வெப்சைட்டுக்குப் போய் தேதியையும் ஃப்ளைட் நம்பரையும் கொடுத்தா அன்னிக்கு ஃப்ளைட்டே இல்லேன்னு மெசேஜ் வருது. சரி நாம் ஃப்ளைட் நம்பரைத் தப்பா டைப் செய்துட்டோமோன்னு திரும்பவும் ட்ரை பண்ணினா அப்பவும் அதே மெசேஜ்தான் வருது.

இது என்னடா வம்பா போச்சுனு ஏர் இந்தியா ஆஃபீசுக்கு ஃபோன் பண்ணி கேட்டா நீங்க வெப் சைட்டிலேயே செக் பண்ணுங்க அப்படீன்னு பொறுப்பில்லாம பதில் சொல்லி வச்சிட்டானுங்க.
திரும்பவும் ஃபோன் பண்ணி வெப் சைட்டில் இல்லன்னுதான உங்களுக்கு ஃபோன் பண்றோம் அப்ப்டீன்னோம். அதுக்கு அந்த பொண்ணு ஏதோ அவங்க சொத்தையே நாங்க எழுதி கேட்ட மாதிரி கொஞ்சம் வெயிட் பண்ணுங்கன்னுட்டு 5நிமிஷம் கழிச்சு வந்து ஃப்ளைட் கேன்சல் மேடம் அப்படீன்னு கூலா சொல்லுது.

என்னங்க இது ஆன்லைன்ல புக் பண்ணினா ஃப்ளைட் கேன்சல் பத்தி ஒரு மெயில் கூட அனுப்ப மாட்டீங்களா நாங்க பாட்டுக்கு ஃப்ளைட் டைமை ரீ செக் செய்யாம ஏர்போர்ட் போய் நின்னா என்னங்க பண்றதுன்னு கேட்டா அதெல்லாம் நாங்க மெயில் பண்ண மாட்டோம். அது எங்க வேலை இல்லன்னு சொல்லிட்டு வேணும்னா டிக்கெட்டை ரீஷெட்யூல் பண்ணித்தரோம்னு சொல்லுச்சு.

சரின்னு அடுத்த ஃப்ளைட்டில் புக் பண்ணுங்கன்னு சொன்னா அது ஃபுல் ஆயிடுச்சு அதற்கடுத்த வாரம்தான் டிக்கெட் இருக்குதுன்னு சொல்லுது அந்த பொண்ணு. அப்ப்டீன்னா அண்ணியோட மொத்த பயணதிட்டத்தையும் மாத்தணும் அதனால டிக்கெட்டுக்கான பணத்தை திருப்பி கொடுங்கன்னு கேட்டா அது முடியாது மேடம், ஃப்ளைட் ரீசெட்யூல் மட்டும்தான் பண்ணமுடியும்ங்கறாங்க.

ஏங்க இவங்க ஃப்ளைட்டுல போறவங்க எல்லாம் வேலை வெட்டி இல்லாதவங்கன்னு நினைச்சுக்கிட்டு இருக்கானுங்களா? இல்லை இவனுங்க மட்டும்தான் ஏர்லைன்ஸ் வச்சிருக்காங்களா? ஒருவாரம் பயணத்தை பின் தள்ளணும்னா அலுவலகத்தில் லீவை மாற்ற வேண்டும். இந்தியாவினுள் போய்வர எடுத்த ரயில் டிக்கெட்டுகளையெல்லாம் மாத்தணும் (டிக்கெட் வேறு கிடைக்காது). மொத்தத்தில் எல்லாமே குழப்படி ஆகும்.

இதையெல்லாம் கஸ்டமர் சர்வீசில் புகாராக சொன்னால் நீங்க வேணும்னா கோர்ட்டுக்குப் போங்க. அதான் நாங்க terms and conditions ல் தெளிவா எப்ப வேணும்னாலும் ஃப்ளைட் ஷெட்யூலை மாத்துவோம்னு சொல்லியிருக்கோமேங்கறாங்க. கண்ணுக்கு தெரியாத எழுத்துல ஒரு லைனை கண்டிஷன்னு போட்டு வச்சுக்கிட்டு என்ன வேணும்னாலும் செய்யலாமா? என்ன கொடுமை சரவணா இது :(.

அன்னிக்கே நான் முடிவெடுத்துட்டேன் ஏர் இந்தியாவில் போவதில்லைன்னு. சில்க் ஏரில் கொஞ்சம் காசு அதிகம்(150டாலர் வரை அதிகம்) ஆனாலும் பிரச்சினைகள் இல்லாமல் போய்வர முடிகிறது. இதுவரை ஒரே ஒரு முறைதான் ஃப்ளைட் தாமதமாகியிருக்கிறது. அதற்கு அந்த பணியாளர்கள் மன்னிப்பு கேட்ட விதம், ஹோட்டல் ரூம் சாப்பாடு என எந்த குறையுமில்லாமல் கவனித்துக் கொண்டதால் அந்த தாமதம் பெரிதாக தெரியவில்லை. ஆனால ஏர் இந்தியா ஊழியர்களின் அலட்சியம் பொறுப்பின்மை இதெல்லாம் பார்த்தால் எரிச்சல்தான் வருகிறது.

எப்பதான் மாறுவாங்களோ?!

டிஸ்கி: வெளிநாட்டுக்குப் போயிட்டா உங்களுக்கெல்லாம் இந்தியாவை குறை சொல்றதே வேலையாப்போச்சுன்னு கும்ம வந்துடாதீங்க. தப்பை தப்புன்னு சொல்ல இந்தியாவில்தான் இருக்கணும்னு அவசியம் இல்லை.

Saturday 14 August 2010

தாய் மண்ணே வணக்கம்

Clipart



அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்!

தேசியகீதம் வரிகள் மறந்தவர்களுக்காக

ஜன கண மன அதிநாயக ஜெய ஹே
பாரத பாக்ய விததா
பஞ்சாப சிந்து குஜராத்த மராத்தா
திராவிட உத்கல பங்கா
விந்த்ய ஹிமாச்சல யமுனா கங்கா
உஜ்ஜல ஜலதி தரங்கா
தவ சுப நாமே ஜாகே
தவ சுப ஆஷிச மாகே
காஹே தவ ஜெய காதா
ஜன கண மங்கள தாயக ஜெய ஹே
பாரத பாக்ய விதாதா
ஜெய ஹே ஜெய ஹே ஜெய ஹே
ஜெய ஜெய ஜெய ஹே!

வருங்கால தலைமுறையின் இனிய மழலையில் நம் தேசிய கீதம்... ரசியுங்கள்

Wednesday 11 August 2010

என்னைய பார்த்தா எப்படி இருக்கு :-(

என்னையப் பார்த்தாவே எல்லாருக்கும் கலாய்க்கணும்னு தோணுமோ என்னவோ தெரியல :-(.
இதுவும் காலேஜ் கொசுவத்திதான் :-). தைரியம் இருந்தா கீழே படியுங்கோ!

வகுப்பு நடந்துகிட்டு இருந்தது. ஹை வகுப்பு நடக்குமா எப்படீன்னு கலாய்க்க கூடாது அழுதுடுவேன். சரி மேல படியுங்கோ. உடனே முதல்லேருந்து படிக்கப்படாது. தொடர்ந்து படியுங்கோ

ப்யூன் வந்து கவிதா ப்ரின்சிபால் கூப்பிட்றாருன்னு சொன்னார். அய்யோ நாம் எதுவும் தப்புதண்டா பண்ணலியே எதுக்கு கூப்பிடறாறோனு பயந்துகிட்டே போனேன். அங்க பார்த்தா என்னோட ஜூனியர் ஒரு பொண்ணும் நின்னுக்கிட்டு இருந்தா. அய்யோ நாம ராகிங் கூட பண்ணலியே எதுக்கு இவளும் இங்க நிக்கறா என்ன ஏழரையோ தெரியலியேன்னு யோசிச்சுக்கிட்டே போனேன்.

பாழாப்போன ப்ரின்சி அரைமணிநேரம் காக்க வச்சுட்டு எங்களை உள்ள கூப்பிட்டார். ஜூனியர் பொண்ணு ஒருத்தியோட பேரைச் சொல்லி அவ எங்கன்னு கேட்டார். அந்த பொண்ணு எங்க கூட காலேஜ் பஸ்ஸில் வருவா. ரெண்டு நாளா வரலை. நாங்க திருதிருன்னு முழிச்சுக்கிட்டு(எப்பவும் அதை மட்டும் நல்லாவே செய்வோமே) தெரியல சார் அப்படீன்னோம்.

அந்த பொண்ணோட பேர் கொஞ்சம் வித்யாசமா இருக்கும். சட்டுன்னு புரியாது. அதனால் ப்ரின்சி அந்த பொண்ணோட பேர் என்னன்னு திருப்பி கேட்டார். எப்படியும் பேரைச்சொன்னா இவர் அதை தப்பாதான் சொல்லப்போறார் எதுக்கு வம்புன்னு அவளோடப் பேரை எல்கேஜி புள்ளைங்க மாதிரி ஒவ்வொரு எழுத்தா சொன்னேன்.

அப்போ அங்க இருந்த அறிவாளி ஒருத்தர் ஜூனியர் பேரை இவ்வளவு தெளிவா சொல்ற அவ எங்கன்னு கேட்டா தெரியாதுங்கற கதை வுடறியான்னார்? ஏங்க ஒரு புள்ளையோட பேரைச் சரியா சொல்றது ஒரு தப்பா? நாங்களே பிரச்சினை என்னான்னு புரியாம முழிச்சுக்கிட்டு நிக்கறோம் இதுல இவரு வேற கதை வுடறியான்னு கேட்டா கோபம் வருமா வராதா?

எப்படியோ கொஞ்சம் தைரியத்தை வர வச்சுட்டு அவ பேர் தெரியும்கறதால அவ எங்க போறான்னெல்லாம் கேட்டா எனக்கு எப்படி தெரியும்னு கேட்டேன். அப்பதான் ப்ரின்சி சொன்னாரு... அந்த பொண்ணு யாரோ ஒரு பையனோட போயிடுச்சாம். அவங்க அப்பா அம்மா காலேஜ்ல வந்து கேட்கறாங்களாம் அப்படீன்னார்.

எங்களுக்கு ரொம்ப ஷாக்காயிடுச்சு. ஏன்னா ஒரு மாசத்துக்கு முன்னாடிதான் அக்கா எனக்கு கல்யாணம் ஃபிக்ஸ் ஆயிடுச்சுன்னு ஃபோட்டோல்லாம் காண்பிச்சிருந்தா. இப்போ எங்களுக்கு குழப்பம். அப்பா அம்மாவே முடிவு பண்ணின கல்யாணம்தானே அப்புறம் ஏன் இந்த பொண்ணு அவசரப்பட்டுச்சுன்னு. அப்புறம்தான் ப்ரின்சி விவரமா சொன்னார் அந்த பொண்ணு வீட்டுப்பக்கத்துல உள்ள ஏதோ வொர்க் ஷாப்புல உள்ள பையனோட போயிடுச்சுன்னு.

அதுசரி எதுக்காக எங்களைக் கூப்பிட்டு விசாரிச்சாருன்னு கேட்கறீங்களா? நாங்க இறங்குற பஸ் ஸ்டாப்பில்தான் அவளும் இறங்குவாளாம். அதனால் எங்களுக்கு தெரிஞ்சுதான் அவள் போயிருக்கணும்னு அவங்க நினைச்சாங்களாம். என்னா கண்டுபுடிப்பு!

ஏங்க ஒரே பஸ் ஸ்டாப்பில் இறங்கறோம்ங்கறதுக்காக அவங்க எல்லாரும் எங்க போறாங்க வாரங்கன்னா கவனிச்சுக்கிட்டு இருக்க முடியும்? இதைத்தான் ப்ரின்சிகிட்டயும் கேட்டேன்.
அதுக்கு அவரு சொல்றாரு "கவிதா நான் உன்னை சந்தேகப்படலை. ஆனா உனக்கு தெரிஞ்சிருக்குமோன்னு விசாரிச்சேன்"னார்.

இதுக்கு என்னங்க அர்த்தம். அவரு என்னை சந்தேகப்படலேங்கறாரா இல்லை எனக்கு தெரிஞ்சுதான் நடந்திருக்கும்னு சந்தேகப்பட்டாரா? இன்னிக்கு வரைக்கும் அதுக்கு அர்த்தம் என்னான்னு புரியலை.

ஒரே ஸ்டாப்பில் இறங்கினோம்ங்கறதுக்காக ஒரு விசாரணை. இதைத்தான் போலீசுக்காரங்களும் செய்யறாங்களோ :(

நம்மைப் பார்த்தாலே எல்லாரும் ஒரு மார்க்கமாத்தான் இருக்காங்க :(

டிஸ்கி: படிப்பை பாதியில் விட்டுட்டு கல்யாணம் பண்ணிக்கிட்டு போய் இப்போ தினம் தினம் கஷ்டப்படறான்னு கேட்கும் போது கஷ்டமா இருக்கு. ஏன் தான் இப்படி ஒரு முட்டாள்தனமான முடிவு எடுக்கறங்களோ தெரியல.

Monday 2 August 2010

மீண்டும் ஒரு பல்பு

நான் வாங்கிய பல பல்புகளில் இதுவும் ஒண்ணு :-(

பள்ளியில் படிக்கும் போது கம்பன் கழகம் பல்பு கொடுத்துச்சுன்னா கல்லூரியில் என் ஆசிரியரே கொடுத்தார் :-(. என்னைப்பார்த்தாலே அவங்களுக்கெல்லம் பல்பு கொடுக்கணும்னு தோணுமோ என்னவோ :-(

கொசுவத்தியை மூஞ்சிக்கு முன்னாடி வச்சு சுத்துங்கோ....

காலேஜில் அப்போ செகண்ட் இயர் படிச்சுக்கிட்டு இருந்தேன்(காலேஜில் படிச்சேன்னு சொல்றதை நீங்க நம்பித்தான் ஆகணும் வேற வழியில்லை). ஒரு நாள் எங்க கணித விரிவுரையாளர் வகுப்பில் ஒரு விஷயம் அறிவிச்சார். இதனால் சகலமானவருக்கும் அறிவிப்பது என்னவென்றால் இந்த செமஸ்டரில் கணித பாடத்தில் சென்டம்(அதாங்க நூற்றுக்கு நூறு...ஜெய்சங்கர் பட தலைப்புன்னு லொள்ளு பண்ணக்கூடாது சொல்லிட்டேன்) வாங்கறவங்களுக்கு சிறப்பான பரிசு வழங்கப்படும் அப்படீன்னார். நமக்கு கணக்குன்னா ரொம்ப இஷ்டம். எப்பவும் தொண்ணூறு மார்க்குக்கு குறைச்சலா வாங்கினதில்லை. இருநூறு மார்க்குக்குக்கு தொண்ணூறான்னு நீங்க கேட்கறதெல்லாம் எனக்கு நல்லாவே கேட்குது. அப்படீல்லாம் சந்தேகப்படக் கூடாது. அழுதுடுவேன் :-(

எக்ஸாம் முடிஞ்சு ரிசல்ட்டும் வந்திடுச்சு. (எக்சாம் எழுதினாத்தான் ரிசல்ட் வரும்னு லூசுத்தனமா தத்துவம்லாம் சொல்லப்படாது). நான் நூற்றுக்கு நூறும் வாங்கிட்டேன்(இதையும் நீங்க நம்பித்தான் ஆகணும்). காலேஜில் நானும் சிவில் டிப்பார்ட்மெண்டில் ஒரு பையனும் சென்டம் வாங்கியிருந்தோம்.

கம்பன் கழகம் சொன்ன மாதிரியே இங்கயும் விழா நடத்திதான் பரிசளிப்போம்னு சொல்லிட்டாங்க. அப்பவே எனக்கு கம்பன் கழகம் கொடுத்த பல்பு மண்டையில பளீர்னு எரிஞ்சுது. சரி காலேஜ் டேயில் தான் கொடுப்பாங்கன்னு இருந்துட்டேன். ஆனால் அதுக்கு முன்னாடியே இந்த ஃபர்ஸ்ட் இயர் பலியாடுகள் சே சே மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி காலேஜில் ஏற்பாடு பண்ணியிருந்தாங்க. எங்க சேர்மனுக்கு காசு கொடுத்து சேர்ந்த மாணவர்களின் பெற்றோர் முன்னாடி காலேஜின் பிரதாபத்தை (கவனிக்கவும் பிரதாப்பை இல்லை) காண்பிக்க எங்களை பலியாடா பயன்படுத்த முடிவு பண்ணிட்டார் :-(

எங்க விரிவுரையாளரும் வந்து இன்னிக்குத்தான் சேர்மன் உங்களுக்கு பரிசு கொடுக்கப் போறார். எஸ்கேப் ஆகி ஊர் சுத்த போயிடாதீங்கன்னார். சரின்னு நாங்களும் வெயிட் பண்ணினோம். ஆனா ரெண்டுமணிநேரமாகியும் விழா ஆரம்பிக்கப் போறதா தெரியல. என்னோட துணைக்கு ஒருத்தியை மட்டும் விட்டுட்டு மற்றவங்க எல்லாம் எஸ்கேப் ஆயிட்டாங்க. பாவம் எனக்காக அவளும் தேவுடு காத்துக்கிட்டு இருந்தா.

ஒருவழியா விழா ஆரம்பிச்சு காலேஜின் சிறப்புக்களையெல்லாம் அள்ளி விட்டுட்டு இருந்தார் சேர்மன். இந்தப் புளுகு புளுகறாங்களேன்னு மனசுக்குள்ள நொந்துக்கிட்டோம். ஒருவழியா எங்களை அவங்க முன்னாடி அறிமுகம் செய்து வைத்தார். ஏதோ அவரே வந்து பரீட்சை எழுதி அதனால் நாங்க மார்க் வாங்கினோம்ங்கற மாதிரி காலேஜைப் பற்றி பெரிய பில்டப் எல்லாம் கொடுத்தார். (நூறு மார்க் எடுத்தது ரெண்டு பேர்னா ஃபெயிலானது 50பேருக்கும் மேல அவங்களை கூட்டி வந்து இவங்க முன்னாடி நிக்க வைக்கணுனு இருந்துச்சு ஆனா முடியாதே)

அடுத்து பரிசளிப்பு என்னும் பல்பு வழங்கும் நிகழ்ச்சி. நல்லா கிஃப்ட் பேப்பரில் சுத்தி ஒரு பொட்டலம்தான் பரிசு. அதை கையில் வாங்கினப்பவே புரிஞ்சிடுச்சு இது பல்புதான்னு(பின்னே எத்தனை பல்பு வாங்கியிருக்கோம் அந்த அனுபவம் கைகொடுக்காதா என்ன). விட்டா போதும்னு ஹாஸ்டலுக்கு தோழியின் ரூமுக்கு போயிட்டோம். என்ன பரிசுன்னு எல்லாரும் சேர்ந்து பேப்பரை பிரிச்சா பெரிய பல்பு பளிச்சுன்னு எரிஞ்சுது.

கண்ணாடிப் பொட்டிக்குள்ள நடுவுல ஒரு ப்ளாஸ்டிக் பூவும் ரெண்டு பக்கமும் வாத்தும் இருக்குமே அதே அதே அந்த கண்ணாடிப் பொட்டிதான் பரிசு. என்னோட துணைக்கு நின்ன ஃப்ரெண்டுதான் நொந்து போயிட்டா. அடிப்பாவி இதுக்காகவா அந்த ரம்ப பேச்சைக் கேட்டுக்கிட்டு காத்திருந்தோம். அதுக்கப்புறம் என்ன எல்லாருடைய கிண்டலையும் கேலியையும் கேட்டுக்கிட வேண்டியதுதான்.

அதுக்கப்புறம் அவர் எல்லா செமஸ்ட்டர் ஆரம்பிக்கும் போதும் பரிசு தரப்படும்னுதான் சொல்லுவார். ஆனா நாங்க யாரும் அதுக்கப்புறம் நூறு மார்க் வாங்கவே இல்லையே! எத்தனை வாட்டிதான் பல்பு வாங்கறது? எவ்வளவு நாள்தான் வலிக்காத மாதிரியே நடிக்கறது அவ்வ்வ்வ்வ்வ்வ்

Saturday 31 July 2010

பதிவுலகில் நான் எப்படிப் பட்டவன்...நாட்டுக்கு ரொம்ப தேவை

இந்த தொடர்பதிவிற்கு என்னை அழைத்த (மாட்டி விட்ட) பிரியமுடன் வசந்த்துக்கு நன்றி :-)

வழக்கம் போல இதுவும் மொக்கையாத்தான் இருக்கும். எதையும் தாங்கும் இதயம் உள்ளவர்கள் மட்டுமே தொடர்ந்து படிக்கவும் :-).

1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

அதான் எல்லாருக்குமே தெரியுமே கவிசிவா ன்னு (என்னா விவரமா கேட்கறாங்கப்பா)

2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

இந்த கேள்விக்கு கண்டிப்பா உண்மைய சொல்லணுமா? சொல்லிடறேன். என் உண்மை பெயரில் பாதிதான் பதிவில் தோன்றும் பெயர். எங்கப்பா புள்ள வளந்து நல்ல கவிதையெல்லாம் எழுதணும்னு நினைச்சுதான் இந்த பேர் வச்சார். ஆனா எனக்கு மொக்கைதான் போட வருது. அதுகூட உருப்படி இல்லை :-(

3 )நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.

என் தனிமையை விரட்ட நெட்டில் உலவிக் கொண்டிருக்கும் போது அறுசுவை அறிமுகம். அங்கே எல்லோருடனும் பேசி கலாய்த்துக் கொண்டிருக்கும் போது சிலர் திடீர்னு காணாம போய்ட்டாங்க :(. அப்போ ஜலீலாக்கா ப்ளாக் ஆரம்பிச்சிருக்காங்கன்னு கேள்விப்பட்டு அவங்க பக்கத்துக்கு வந்தேன். பார்த்தா என் காணாமல் போன தோழிகள் எல்லாரும் இங்க சுத்திக்கிட்டு இருந்தாங்க. அவங்க எல்லார் பதிவையும் சத்தமில்லாம கொஞ்ச நாள் வாசிச்சுக்கிட்டு இருந்தேன். அப்புறம் சுபயோக சுப நாளில் நானும் ப்ளாக் ஆரம்பிக்கணும்னு ஆரம்பிச்சு இதோ இப்ப உங்களையெல்லாம் மொக்கை போட்டு கொன்னுக்கிட்டு இருக்கேன்.

4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

இன்னும் பிரபலமாகவில்லை. பிரபலம் ஆகும்னு நினைக்கவும் இல்லை. நம்ம எழுத்தைப் பற்றி நமக்குத் தெரியாதா :-)? பெருசா எதுவும் செய்யலை. நாஞ்சில் ப்ரதாப் மற்றும் ஜலீலாக்கா சொன்ன மாதிரி பிறருக்கு பின்னூட்டங்கள் இட்டேன் அப்புறம் தமிழிஷில் இணைத்தேன். அவ்வளவுதான். அதற்காக ரொம்ப மெனக்கெடவெல்லாம் இல்லை(மெனக்கெட்டுட்டாலும்...).

5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

ஆமா... பல பதிவுகளும் சொந்த புலம்பல்கள்தானே :-) பெருசா எந்த விளைவுகளும் இல்லை.


6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

பதிவுலகம் மூலம் சம்பாதிச்சு சிங்கையில் ஒரு காண்டோமினியம் வாங்கிப் போட்டிருக்கிறேன் :-). வெளிய சொல்லிடாதீங்க இன்கம்டேக்ஸ் காரன் வந்துடப் போறான் :-)
பொழுதுபோக்குக்காக மட்டும் இல்லை சில நேரம் மனக்குமுறல்களைக் கொட்டவும் பதிவுகள் எழுதுகிறேன்.

7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு. இன்னொன்னு ஒப்புக்கு சப்பாணியா டெம்ப்ளேட் மாற்றங்கள் பரீட்சித்துப் பார்க்க

8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

கோபம்... அது என்னோடவே பிறந்தது. தவறாக கண்ணில் படும் எதுவும் என்னைக் கோபப்படுத்தும். அடுத்தவர் மனதை நம்பிக்கைகளைப் பாதிக்கும் சில பதிவுகள் என்னை கோபப்படுத்தியிருக்கின்றன. பொறாமை வந்ததில்லை. வியந்திருக்கிறேன் நிறையபேரைப் பார்த்து. பல விஷயங்கள் கற்றுக் கொண்டிருக்கிறேன்.

9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..

பாராட்டுற மாதிரி நான் எந்த பதிவும் போடலை. அறுசுவை தோழிகள் விஜிசத்யா, மேனகாசத்யா,ஆசியா, ஜலீலாக்கா, அதிரா அப்புறம் ஜெய்லானி, நாஞ்சில் ப்ரதாப், பிரியமுடன் வசந்த் இவங்கதான் எனக்கு பின்னூட்டங்கள் மூலம் முதலில் ஊக்கமளித்தவர்கள்.

10. கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...

ஊழலற்ற வளமான இந்தியாவைக் கனவு காணும் எண்ணற்ற பேரில் நானும் ஒருத்தி. மற்றபடி பெருசா ஒண்ணுமில்லை


அதிரா, ஆசியாஓமர், கீதா ஆச்சல், மேனகாசத்யா ஆகியோரை இந்த தொடர்பதிவுக்கு அழைக்கிறேன். பூஸை மாட்டி விட்டதும் மனசுக்கு என்னா சந்தோஷமா இருக்குது :-)))

Friday 30 July 2010

யுனிவர்சிட்டி வச்ச ஆப்பு

இது கொஞ்சம் பழைய மேட்டர்தான்.

நாம எதுக்குங்க படிக்கறோம்? என்னது... காது கேட்கலை அறிவை வளர்க்கவா? அது இருந்தாத்தானே வளர்றதுக்கு :-(
அடிச்சு புடிச்சி படிச்சு கிழிச்சு ஒரு வேலையைத் தேடி சம்பாதிக்கத்தானே? அதுக்கும் நம் ஊர்ல ஒரு பல்கலைக்கழகம் ஆப்பு வச்ச கதை தெரியுமா?

இப்படித்தாங்க எங்க காலேஜ்ல மொத்தம் 260பேர் படிச்சு கிழிச்சு பாசும் பண்ணிட்டோம். சிலருக்கு பல்கலைக்கழக ரேங்கும் உண்டு.
அப்புறம் நாம படிச்சதுக்கு அத்தாட்சியா டிகிரி(ஜீரோ டிகிரியா 100டிகிரியான்னு கேனத்தனமா கேக்கப்படாது சொல்லிட்டேன்) சர்ட்டிஃபிகேட் கொடுப்பாங்க. அங்கதான் எங்களுக்கு யூனிவர்சிட்டி வச்சது ஆப்பு.

ஆனா எங்களுக்கு ஆப்பு வைக்கப்பட்டிருப்பது தெரியாமலயே நாங்களும் சர்ட்டிஃபிகேட் வாங்கிட்டு வந்து பத்திரமா பூட்டி வச்சுட்டோம். கூடப்படிச்சவனுக்கு காலேஜ்ல படிக்கற ஆசை இன்னும் தீரல. அதனால இன்னொரு காலேஜில் எம்பிஏ படிக்க அப்ளை பண்ணி இடமும் கிடைச்சு காலேஜில் சேரப் போனான். அப்பதான் யுனிவர்சிட்டி வச்ச ஆப்பு வேலையை காட்ட ஆரம்பிச்சுது.

சர்ட்டிஃபிகேட் எல்லாம் வெரிஃபை பண்ணும் போதுதான் தெரிஞ்சுது எங்களுக்கு கொடுத்த சர்ட்டிஃபிகேட்டில் யுனிவர்சிடி ரெஜிஸ்ட்ராரின் கையொப்பம் மற்றும் சீல் இல்லைன்னு. காலேஜில் சேர்க்க முடியாதுன்னு அவனைத் திருப்பி அனுப்பிட்டாங்க.

அவன் எங்களுக்கெல்லாம் ஃபோன் பண்ணி எங்க சர்டிஃபிகேட்டுகளை பார்க்கச் சொன்னான். அப்பதான் தெரிஞ்சுது ஆப்பு எல்லாருக்கும் வச்சிருக்காங்கன்னு. சரின்னு காலேஜ் போய் ப்ரின்சிப்பலை பார்த்து விஷயத்தைச் சொன்னோம். அவர் எங்களை நேரடியாக யுனிவர்சிட்டி போகச் சொல்லிட்டார்.

கொஞ்ச பசங்க மட்டும் நாங்க போய் என்னான்னு விசாரிச்சுட்டு சொல்றோம்னு சொல்லிப் போனாங்க. யுனிவர்சிட்டில சிம்பிளா "எப்படியோ விட்டுப் போச்சு(?!) கொடுங்க சீல் வச்சுத் தர்றோம்" னு சொல்லி சரிசெய்து கொடுத்தாங்களாம். அப்புறம் என்னா எல்லாரும் யுனிவர்சிட்டி போய் அவங்கவங்க சர்டிஃபிகேட்டை சரி செய்துக்கிட்டோம்.

அது எப்படி தெரியாம விட்டுப் போகும்? அவங்களை ரெண்டு தட்டு தட்டிட்டு சாரி தெரியாம நடந்திடுச்சுன்னு சொன்னா விட்டுடுவாங்களா? தொடர்ந்து படிக்கணும்னு நினைத்தவர்களுக்கு ஒரு வருடம் வீணானது. அந்த வருடத்தை அவர்களால் திருப்பிக் கொடுக்க முடியுமா?

சிலர் உடனே போய் சர்டிஃபிகேட்டை சரி செய்ய முடியாமல் 6மாதம் கழித்து சென்றபோது "இவ்வளவு நாள் என்ன செஞ்சீங்க"ன்னு வேற எகிறியிருக்கானுங்க. இவனுங்களை என்ன செய்யலாம்?

நல்ல வேளை இப்போ எல்லா பொறியியல் கல்லூரிகளையும் அண்ணா யுனிவர்சிட்டிக்கு கீழ கொண்டு வந்துட்டாங்க. ஆனா அங்கயும் என்னென்ன குழறுபடிகள் நடக்குதுன்னு தெரியல.

Thursday 29 July 2010

இந்தோனேஷியவில் இந்தியர் தாக்கப்பட்ட விவகாரம்- மற்றொரு பக்கம்

இந்தோனேசியர்களுக்கும் இந்தியர்களுக்கும் இடையே சின்ன பிரச்சினை வந்திடுச்சுனு போன பதிவில் சொன்னேனே அதைப் பற்றிதான் இந்த பதிவு.

இந்த நியூசை பெரும்பாலான இந்தியர்கள் படித்திருப்பீர்கள். "ஆஸ்திரேலியாவைத் தொடர்ந்து இந்தோனேஷியாவிலும் இந்தியர்கள் மீது இனவெறித் தாக்குதல்" அப்படீன்னு இந்திய பத்திரிக்கைகளிலும் தொலைக்காட்சிகளிலும் செய்திகள் வந்தன. கண்டிப்பா அது இனவெறித் தாக்குதல் இல்லேன்னு இங்குள்ள உணர்ச்சிவசப்படாத நடுநிலையானவர்களுக்கு தெரியும்.

ஆனால் உண்மையில் நடந்தது என்னன்னு பார்க்கணும். ஒரு நிறுவனத்தில் சூப்பர்வைசர் பொறுப்பிலிருந்த ஒரு இந்தியர் தன் கீழ் வேலை பார்த்த இந்தோனேஷிய தொழிலாளியிடம் "முட்டாள் இதுகூடத் தெரியாதா" என்று திட்டி விட்டார். பிரச்சினையின் ஆரம்பம் இதுதான். இதனால் கோபமடைந்து இந்தோனேஷிய தொழிலாளிகள் அங்கு வேலை பார்த்த இந்தியர்களை தாக்கியும் அவர்களது வாகனங்களை அடித்தும் நொறுக்கினர்.

இவ்வளவையும் கேட்டவுடன் சக இந்தியன் இன்னொரு நாட்டவனால் தாக்கப்பட்டால் எல்லோருக்கும் எழும் இயல்பான கோபத்தைதான் நம் பத்திரிக்கைகளும் எழுதியது. ஆனால் உண்மையில் "முட்டாள் இது கூட தெரியாதா படிக்கவில்லையா" போன்ற வார்த்தைகள் இந்தோனேஷியர்களை மிகவும் கோபம் கொள்ளவைக்கக் கூடிய வார்த்தைகள். வீட்டில் வேலை செய்பவரிடம் "இது கூடத் தெரியாதா"ன்னு கொஞ்சம் குரலை உயர்த்திக் கேட்டாலே அழ ஆரம்பித்து விடுவார்கள். அவர்களை மிகவும் வேதனைப்பட வைக்கக் கூடிய வாரத்தைகள் இவை (நமக்கு மிக சாதாரணமானவையாக தோன்றினாலும்)

இங்கே வரும் வெளிநாட்டு ஊழியர்களிடம் அங்கு ஏற்கெனவே வேலை பார்ப்பவர்கள் இதைச் சொல்லி எச்சரிக்கையும் செய்வார்கள். அப்படியும் ஏதோ ஒரு வேகத்தில் நம்மவர் வார்த்தையை விட்டு விட்டார். அன்று இந்த வார்த்தையை சொன்னது இந்தோனேஷியனாக இருந்தாலும் அவரையும் தாக்கியிருப்பார்கள்.

இன்னொரு முக்கிய விஷயம் சம்பளத்தில் காட்டப்படும் வித்தியாசம். ஒரே வேலையை செய்யும் இந்தோனேஷியனுக்கு கிடைக்கும் சம்பளத்தை விட வெளிநாட்டு ஊழியர் வாங்கும் சம்பளம் 5 முதல் 6மடங்கு அதிகம். நம் நாட்டில் இந்த நிலை என்றால் நாம் சும்மா இருப்போமா? ஆங்கிலம் தெரியாதது மட்டுமே அவர்களின் மைனஸ் பாய்ண்ட். மற்ற படி இருவரும் ஒரே வேலையைத் தான் செய்கிறார்கள்.

உள்ளுக்குள் வருத்தம் இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் இருந்தார்கள். ஒரு கம்பெனியில் ஒரே வேலைபார்க்கும் ஒருவர் சொகுசான வாழ்க்கை வாழும் போது இன்னொருவர் கஷ்ட ஜீவனம் நடத்திக் கொண்டிருப்பார். மால்களில் நாம் நம் பில்லுக்கான பணம் கொடுக்கும் போது அவர்களின் முகத்தில் ஒரு ஏக்கப் பார்வை இருக்கும். அவர்களின் ஒருமாதச் சம்பளத்தை நாம் ஒரே பில்லாக கொடுத்துக் கொண்டிருப்போம்.

நம்மவர்களில் சிலர் இந்தோனேஷியர்களை கொஞ்சம் மரியாதைக் குறைவாகவே நடத்துவார்கள் என்பது வேதனையோடு ஒத்துக் கொள்ளவேண்டிய விஷயம். என்னதான் நாம் அவர்களை விட அதிகம் சம்பாதித்தாலும் அது அவர்களுடைய நாடு என்பதை மறந்து விடுகிறார்கள்.

எல்லா வருத்தமும் சேர்ந்து நம்மவர்கள் மீது காட்டி விட்டார்கள். பாவம் அந்த இந்தியருக்கும் வேலை போய் விட்டது. இப்போது நிலைமை கட்டுக்குள் இருந்தாலும் அவர்களின் முகத்தில் முன்பிருந்த நட்புப் பார்வை இப்போது இல்லை என்றே சொல்ல வேண்டும். விரைவில் சரியாக வேண்டும் என்பதே என் எதிர்பார்ப்பு.

Saturday 24 July 2010

இந்தோனேஷிய டிவியில் இந்திய நடிகர்கள்

இந்தோனேஷியாவைப் பத்தி மொக்கை போட்டு ரொம்ப நாளாச்சேன்னு இந்த பதிவு

கல்யாணமாகி இங்க வந்த புதுசுல ரங்ஸ் துணை இல்லாம வெளியில் இறங்கவே எனக்கு பயம். அதனால் காலையில் அவர் கிளம்பியதும் பூட்டப்படும் வாசல் கதவு மீண்டும் அவர் வரும்போதே திறக்கப் படும். மெய்ட் மட்டும் பின்புற வாசல் வழியே தானே திறந்து வந்து வேலை செய்து விட்டு போவார்.

ஊரில் இருந்து அப்பா அம்மா எப்படீம்மா இருக்கேன்னு கேட்டால் எனக்கென்னப்பா தங்கக் கூட்டில் கிளி மாதிரி இருக்கேன்ப்பா அப்படீம்பேன் :-). சமையலைத் தவிர வேற வேலையே கிடையாது. அப்புறமென்ன டிவியை போட்டுட்டு சேனலை மாத்திக்கிட்டே இருக்க வேண்டியதுதான் வேலை.

சிங்கப்பூரிலிருந்து ஒளிபரப்பப்படும் "வசந்தம் சென்ட்ரல்" மற்றும் மலேசியாவிலிருந்து "டிவி3" இதில் மட்டுமே தமிழ் நிகழ்ச்சிகள் வரும். அதுவும் காலையில் ஒன்றரை மணிநேரம் டிவி3யும் மாலை இரண்டரை மணிநேரம் வசந்தத்திலும்(இப்போது 3மனி முதல் 11மணிவரை) வரும். எல்லாமே படு மொக்கையான நிகழ்ச்சிகளாகத்தான் இருக்கும். இப்பவும் அப்படித்தான் இருக்கு அதிக மாற்றம் ஒண்ணும் இல்லை. அதுவும் ஒரு திரைப்படத்தை 'தொடரும்' போட்டு இரண்டு நாட்களாக டிவி3யில் போடுவானுங்க.

ஆனாலும் அந்த மொக்கைகளையும் தமிழ்மொழியின் இனிமைக்காகவும் வேறு வழியில்லாததாலும் பார்ப்பேன் :-). மற்ற நேரங்களில் சேனல்கள் சும்மாவேனும் மாற்றிக் கொண்டு ஏதாவது புரியறமாதிரி நிகழ்ச்சி இருக்கான்னு தேடிக்கிட்டு இருப்பேன் :-(

இப்படி சேனல்கள் மாற்றும் போது ஒரு இந்தோனேஷியன் சேனலில் நம்ப பிரபுதேவாவும் ரோஜாவும் இந்தோனேஷிய மொழியில் பேசிக்கிட்டு இருந்தாங்க. அடடா நம்ம ஆளுங்க இந்தோனேஷிய சினிமாக்களில் கூட நடிக்கறாங்களான்னு வாயைப் பிளந்து பார்த்துக்கிட்டு இருந்தேன். அப்புறம்தான் புரிஞ்சுது அது 'ராசையா' தமிழ்படத்தின் இந்தோனேஷிய டப்பிங்னு. எனக்கு சந்தோஷம் தாங்கல. உடனே என் மெய்டை கூப்பிட்டு எங்க ஊர்க்காரங்கன்னு பெருமையா காண்பிச்சேன். அப்போ அவங்க சொன்னாங்க டெய்லி அந்த சமயத்தில் இந்திய படங்கள் டப் பண்ணி அந்த சேனலில் போடுவாங்களாம். அவங்களைப் பொறுத்தவரை அது ஒரு ஹிந்தி படத்தின் மொழிமாற்று படம்.

அது எங்கள் தமிழ் மொழி படம்னு சொல்லி புரிய வைக்கறதுக்கு ரொம்ப கஷ்டப் பட்டேன். ஏன்னா இந்தியர்களின் மொழி ஹிந்தி என்பது இங்குள்ள பெரும்பாலானவர்களின் எண்ணம். இத்தனைக்கும் இங்கே தமிழ் பேசும் பூர்வீக இந்தியர்கள் உண்டு. அப்புறம் டயலாக் புரியுதோ இல்லியோ இந்திய முகங்களைப் பார்ப்பதற்காகவே தினமும் பார்க்க ஆரம்பித்தேன்.

இங்குள்ளவர்களிடையே அதிகம் பிரபலமான தமிழ்படம் 'தளபதி'. ரஜினியை தெரிந்திருக்கிறார்கள். ஆனால் இவர்களின் ஆல் டைம் ஃபேவரைட் 'குச் குச் ஹோத்தா ஹை'. இந்திய பெண்களை பார்த்தவுடன் அவர்கள் அந்த குச் குச் ஹோத்தா ஹை பாட்டை பாட ஆரம்பித்து விடுவார்கள். மொழி தெரியாவிட்டாலும் ஹிந்தி பாட்டுக்களை அருமையாக பாடுவார்கள். ரெஸ்ட்ராண்டுகளுக்கு போனால் அங்குள்ள ம்யூசிக் க்ரூப் நம்மைக் கண்டதும் கண்டிப்பாக ஒரு ஹிந்தி பாட்டு பாடுவார்கள். அந்நிய தேசத்தில் நமக்காக நம் தேசத்துப் பாடலை அவர்கள் பாடி கேட்க ரொம்ப சந்தோஷமாக இருக்கும்.

எந்த ஒரு இந்தோனேஷிய இளம்பெண்ணும் இந்தியரைப் பார்த்ததும் கேட்கும் கேள்வி ஷாருக்கான் உங்க ஊர்க் காரரான்னுதான். ஷாருக்கான்னா அவர்களுக்கு ரொம்பவே பிடிக்கும். அடுத்தது ஹ்ருத்திக்ரோஷன். இந்திய நடிகைகளையும் அறிந்து வைத்திருக்கிறார்கள். நாங்களும் சும்மானாச்சுக்கும் ஷாருக்கானும் நாங்களும் ஒரே ஊர்தான் என்று டூப் அடித்து விடுவோம் :-)

ஆண்கள் கேட்கும் ஒரே ஒரு விஷயம் ஹிந்தியில் எப்படி ஐ லவ் யூ சொல்றதுன்னுதான். அவங்க கேர்ள் ஃப்ரெண்டிடம் சொல்லி அசத்துவதற்காம். நமக்கே ஹிந்தி சுத்தமா தெரியாது. நம் வாயில் என்ன வருதோ அதுதான் ஐ லவ் யூ க்கான ஹிந்தி மொழிபெயர்ப்பு :-)
இந்தியர்கள்னா அவர்களுக்கு ரொம்ப பிடிக்கும். ஏன்னா அவர்களின் முன்னோர்கள் இந்தியாவில் இருந்து சென்றவர்கள் என்ற வரலாறு கொண்டவர்கள்.

இப்படி இந்தியர்கள் மீது தனி பாசம் கொண்டிருந்த மக்களுக்கு இப்போது கொஞ்சம் மனவருத்தம். சில இந்தியர்களுக்கும் இந்தோனேஷியர்களுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினையால் :-(. விரைவில் எல்லாம் சரியாகனும்னு ஆசைப்படறேன். ஏன்னா எனக்கு இந்த மக்களை ரொம்பவே பிடிக்கும்.

இந்தோனேஷிய சினிமா தொலைக்காட்சி சீரியல்கள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள நிறுவனம் பூர்வீக இந்தியர்களுடையது என்பது பெருமையான விஷயம்.

அந்த பிரச்சினை பற்றி வேறொரு பதிவில் சொல்கிறேன்

Monday 19 July 2010

போலி சான்றிதழ் கொடுத்த அப்பாவிகள்

//""போலி சான்றிதழ் விஷயத்தில் அப்பாவி மாணவர்கள், பெற்றோரை தண்டிப்பது நியாயமாகாது,'' என உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.//

முழு செய்தியைப் படிக்க இங்கே க்ளிக்கவும்



அடங்கொய்யால.... மாணவன் பாவம் அப்பாவி விட்டு விடுவோம் அப்பா சொல்றதுக்கு தலையாட்டும் ஆடு பாவம். ஆனால் போலிச் சான்றிதழை பணம் கொடுத்து வாங்கிய பெற்றோர் அப்பாவியாம். இந்த கொடுமையை எங்க போய் சொல்றது?!

தன்னோட பையன் பரீட்சையில மார்க் குறைவா எடுப்பாராம். உடனே அப்பாகாரர் போலிச்சான்றிதழ் எங்க கிடைக்கும்னு விசாரிச்சு கேட்டுத் தெரிஞ்சு கொடுக்கவேண்டியதைக் கொடுத்து வேண்டிய மார்க் ஷீட் வாங்கி கல்லூரிகளுக்கு அப்ளை பண்ணி சீட்டும் வாங்கிடுவாராம். பையனும் தட்டுத்தடுமாறி படிச்சு வெளிய வந்து ஏதோ ஒரு இடத்தில் குப்பை கொட்டி சம்பாதிப்பானாம். இப்படி அடுத்தவன் குடியை கெடுக்கற அப்பா அப்பாவியாம். அமைச்சர் சர்ட்டிஃபிகேட் கொடுக்கறார். கொஞ்சமாவது மனசாட்சி இருக்கா? நல்லா வருது வாயில.

ஒருவகையில் அமைச்சர் சொல்றது போல இவர்கள் அப்பாவிகள்தான். இல்லேன்னா பேப்பர் சேஸ் பண்ணி கொடுக்க வேண்டியதைக் கொடுத்து வாங்க வேண்டியதை வாங்கியிருப்பாரே. இல்லேன்னா பையனுக்கு பிட் அடிக்க வசதி செய்து கொடுத்திருப்பாரே. இவர்கள் அப்பாவிகள்தான்.

இப்படிப்பட்ட அப்பாவிகளால் உண்மையாக படித்து மார்க் எடுத்த அப்பாவி அப்பிராணி மாணவனின் வாய்ப்பல்லவா தட்டிப் பறிக்கப் படுகிறது. இதெல்லாம் அமைச்சருக்கு தெரியாதா? இவனுங்களைக் கேட்க யாருமே இல்லையா?

Friday 16 July 2010

இந்திய விமான நிலையங்களில் பாஸ்போர்ட்டுகள் கவனம்

இது எனக்கு மெயிலில் வந்த செய்தி. ஏற்கெனவே உங்களுக்கு தெரிந்திருக்கலாம். தெரியாதவர்களுக்கு உதவட்டுமே என்றுதான் இந்த பதிவு.

நாம் பாஸ்போர்ட்டை இமிக்ரேஷன் ஆஃபீசர், அல்லது கஸ்டம்ஸ் அல்லது ஏர் இந்தியா ஊழியர்களிடம் கொடுக்கும் போது மிக கவனமாக இருக்க வேண்டும். நம் பாஸ்போர்ர்ட்டை சேதப்படுத்திவிட்டு நம்மை சிக்கலில் மாட்டி காசு கறக்கப் பார்ப்பார்கள்.

எப்படீன்னா நாம இந்தியாவை விட்டு வெளிநாடுகளுக்கு போகும்போது நாம் பாஸ்போர்ர்டை அதிகாரியிடம் கொடுத்துவிட்டு நாம் அசந்த சமயம் பார்த்து பாஸ்போர்ட்டில் ஏதேனும் பக்கத்தை கிழித்து விட்டு அல்லது சேதப்படுத்திவிட்டு exit stamp அடித்து தந்து விடுவார். நாமும் இது தெரியாமல் பாஸ்போர்ட்டை வாங்கிக்கொண்டு போய்விடுவோம். ஆனால் நம் பாஸ்போர்ட் பற்றிய எல்லா விவரங்களையும் ரெட் மார்க்கோடு சிஸ்டத்தில் ஏற்றிவிடுவார்.

அடுத்தமுறை நாம் இந்தியாவரும்போது ஆரம்பிக்கும் ஏழரை. விசாரணை ஆரம்பிக்கும். எவ்வளவு நாள் வெளிநாடுகளில் இருக்கிறார் அவரது வருமானம் இதைப் பொறுத்து பேரம் போலீஸ் மற்றும் இமிக்ரேஷன் அதிகாரிகளால் பேரம் பேசப்பட்டு பணம் கறக்கப்படும். யாராவது நம்ம மேல தப்பு இல்லன்னுட்டு சண்டை போட ஆரம்பிச்சோம் அவ்வளவுதான் நம்ப எதிர்காலத்தையே நாசமாக்கிடுவானுங்க இந்த படுபாவிங்க.

அதனால பாஸ்போர்ட்டை இந்த படுபாவிங்கக்கிட்ட கொடுத்துட்டு தேமேன்னு நிற்காம நம் பாஸ்போர்ட்டில் எப்போதும் கவனம் வைத்திருக்க வேண்டும். இல்லேன்னா ஆப்புதான்.

இந்த செயல் அதிகம் நடக்கும் ஏர்போர்ட்டுகள் மும்பை,ஹைதராபாத் மற்றும் பெங்களூரு. ஒரு மாதத்தில் 20 முதல் 30 கேஸ்கள் பதிவு செய்யப்படுகின்றனவாம் (இதுக்கு கூட டார்கெட் வச்சிருக்கானுங்க போல).

Aramaco's Arifuddin அப்படீங்கறவர் தன்னோட குடும்பத்தோட மொத்தம் 6பேர் ஜெட்டாவிலிருந்து இந்தியா வழியாக அமெரிக்கா செல்ல திட்டமிட்டிருக்கிறார்கள். ஹைதராபாத்தில் வந்திறங்கி ஒரு மாதம் தங்கி விட்டு அங்கிருந்து அமெரிக்கா சென்றிருக்கிறார். அமெரிக்காவில் இறங்கி அங்குள்ள இமிக்ரேஷன் கடக்க இருக்கும் போதுதான் மனைவி பாஸ்போர்ர்ட்டிலிருந்த அமெரிக்க விசா பக்கத்தை காணவில்லை என்பதை பார்த்திருக்கிரார். ஹைதராபாத்தில் இருக்கும் போது விசா இருந்திருக்கிறது. வேறு வழியில்லாமல் மொத்த குடும்பமும் இந்தியா திரும்பியிருக்கிறது. மும்பையில் இறங்கியதும் போலீஸ் அரெஸ்ட் செய்து இருக்கிறது. இப்போது கோர்ட்டுக்கும் இமிக்ரேஷன் அலுவலங்களுக்கும் இடையே கிடந்து அல்லாடுகிறார்.

மக்களே கவனமா இருங்க. நீங்களும் சிக்கலில் மாட்டிக்காதீங்க. நண்பர்களிடத்தும் தெரிந்தவர்களிடத்தும் சொல்லி உஷார்ப்படுத்துங்கள். மீடியாவில் வெளியிடப்பட்டால் மிக நல்லது.

பணத்திற்காக அப்பாவிகளை பாடாய்ப்படுத்தும் இந்த ஜென்மங்களை என்ன செய்வது.