Thursday 8 April 2010

நான் ஊருக்குப் போறேன் :)


எல்லோருக்கும்(?!) இதனால் அறிவிப்பது என்னவென்றால் இந்த மாதம் நான் இந்தியா செல்வதால் ஜூன் மாதம் வரை என் தொல்லை பதிவுலகில் இருக்காது என்று தெரிவிக்கப் படுகிறது :). இப்படி ஸ்மைலி போட்டு சொன்னாலும் எதையோ மிஸ் பண்ணுவது போல் கொஞ்சம் வருத்தம்தான். ஆனால் அப்பா அம்மா எல்லோரையும் பார்க்கப் போகும் சந்தோஷம் அதிகமா இருக்கு.

அடுத்த வாரம் இங்கிருந்து கிளம்புகிறேன். சிங்கப்பூர் பயணம்,பேக்கிங், ஷாப்பிங் மற்றும் பல வேலைகள் போன வாரமே ஆரம்பிச்சுட்டதால போன வாரத்திலிருந்தே இங்கு வர முடியாம போயிடுச்சு. நண்பர்களின் புதிய பதிவுகள் எதுவுமே படிக்கவும் பின்னூட்டமிடவும் முடியவில்லை. எனது பதிவுகளுக்கு பின்னூட்டமிட்டவர்களுக்கும் பதிலளிக்க முடியவில்லை. மன்னிக்கவும்.

ஜூன் மாதத்திலிருந்து மீண்டும் என் தொல்லை ஆரம்பிக்கும் :). அதுவரைக்கும் பை பை.

அனைவருக்கும் முன்கூட்டிய இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்!


தாத்தா பொங்கலை தமிழ் புத்தாண்டுன்னு சொன்னாலும் சித்திரை முதல் நாள்தான் நமக்கு புத்தாண்டு :)