Wednesday 29 September 2010

திசைதிருப்பும் தீர்ப்பு

60 வருஷமா நீண்ட வழக்கின் தீர்ப்பு நாளைக்கு சொல்லப் போறாங்களாம். அடேங்கப்பா என்னா வேகம்!  சரி ஒரு வழியா தீர்பை சொல்லப்போறோம்னு வழிக்கு வந்துட்டாங்க. ஆனா இந்த தீர்ப்பு இப்போ வரக்காரணம் என்ன? வழக்கம் போல் மக்களை திசை திருப்பும் முயற்சியோ?!

என்னங்க பண்றது காலங்காலமா நம்ப நாட்டுல அது தானே நடக்குது. ஒரு பிரச்சினையை அமுக்க இன்னொன்றை முன்னாடி கொண்டு வரதுதானே இந்த அரசியல்வியாதிங்க பொழப்பே! மாவோயிஸ்ட் பிரச்சினையின் சலசலப்பை அடக்க உணவு தானிய பிரச்சினை. உணவுதானிய பிரச்சினையை சமாளிக்க காமன்வெல்த் பிரச்சினை. இப்போ அதை மறக்கடிக்க இந்த தீர்ப்பு.  மக்களாகிய நம்ம பழக்கமும் அதுதானே புதுசு கிடைச்சிடுச்சுன்னா பழசை மறந்துடுவோமே!

என் சந்தேகம் வலுக்கக் காரணம்... காமன்வெல்த் விளையாட்டை காரணம் காட்டியே தீர்ப்பை தள்ளி வைக்கணும்னு அபிப்ப்ராய பட்ட ஆளும் கட்சி இப்போ அந்தர் பல்டி அடிச்சிருக்கு. இப்போ உனக்கு சந்தேகம் வலுத்தா என்ன இல்லன்னா என்ன ஒன்னும் ஆகப்போறதில்லைன்னு சொல்றீங்களா அதுவும் சரிதான் :(

எது எப்படியோ தீர்ப்பை காரணம் காட்டி மக்கள் அடிச்சுக்காம இருந்தா சரி.

Monday 27 September 2010

எங்க அப்பாவும் பிளாக் ஆரம்பிச்சாச்சு :)

ஹாய் ஃப்ரெண்ட்ஸ் என்னோட அப்பாவும் பிளாக் ஆரம்பிச்சுட்டாங்க :-). அவங்க பக்கத்துக்கும் விசிட் அடிங்க அப்படீன்னு உங்களை உரிமையோட கேட்டுக்கறேன் :).

குமாரமுதம் இதை க்ளிக் பண்ணினா அங்க போயிடலாம். அவர் மக்கள்நலத்துறையில் அதிகாரியாக பணியாற்றியவர். மக்கள் நலத்துறை பற்றிய உங்கள் சந்தேகங்களையும் கேட்கலாம். முக்கியமா பிறப்பு இறப்பு சான்றிதழ்கள் பற்றிய உங்கள் சந்தேகங்களுக்கு சரியான பதில் கிடைக்கும். 

Friday 24 September 2010

கவிதை கவிதை

இது நான் ஒரு கவிதைப் போட்டிக்காக கிறுக்கியது. தலைப்பு "வாய்ப்பும் வியப்பும்"

யாம் பெற்ற இ(து)ன்பம் இவ்வையம் பெறுக :-)

பத்தாண்டு உணவு தானிய கையிருப்பு
பட்டினி ஏழைக்கும் வயிறு நிறையும் வாய்ப்பு
படித்த சீமான்களின் பழுதான கொள்கைப் பிடிப்பு
பசித்தவன் வாய்க்கு எட்டாது தடையானது வியப்பு!
பத்தாயத்து எலிகளுக்கு உணவாய்
பயனற்றுப் போனதில் மனம் நொந்த வெறுப்பு

பகல் கொள்ளை கல்வி கட்டணம்
சீரமைத்த அரசின் ஆணை
பரிதவித்த பெற்றோருக்கு கிடைத்த வாய்ப்பு
தடை விதித்து தன்னிருப்பை உணர்த்திய
நீதிமன்ற ஆணை கண்டு வியப்பு

பட்டிகாட்டு பட்டாம் பூச்சிகள்- பாங்காய்
படிக்க கிடைத்த சமச்சீர் கல்வி வாய்ப்பு
பகல் கொள்ளை பள்ளிகளின் முறையீட்டை
புறம் தள்ளிய நீதியின் கருணை கண்டு வியப்பு

இருமொழி கல்வி திட்டம்
இது தமிழக அரசு வழங்கிய வாய்ப்பு
இந்தியா முழுவதும் உள்ள வேலை வாய்ப்பு
இழந்தது தமிழர் கூட்டம் என்பது வியப்பு

தமிழில் கற்பவருக்கு வேலைவாய்ப்பில்-முன்னுரிமை
தருவதாக செப்பியது நல்ல வாய்ப்பு
தமிழில் கற்றவருக்கு கிடைத்த வேலையின்
தரம் என்னவோ கடைநிலையில்.. என்னே வியப்பு

சாதிகள் இல்லை என்று பெரியார்
சமத்துவபுரமாய் வந்தது வாய்ப்பு
கல்வியில் வேலையில் சாதி கேட்டு
கலங்க வைப்பது வியப்பு

பெண்களுக்கு முப்பத்திமூன்று சதவீத ஒதுக்கீட்டு
மசோதா கொண்டு வந்தது வாய்ப்பு
மன்றத்தில் அதனை நிறைவேற்றாத
மடமையை கண்டு வியப்பு

காமென்வெல்த் விளையாட்டுப் போட்டிகள்
கர்வத்தோடு பெருமை கொள்ள கிடைத்த வாய்ப்பு
கடமை மறந்த நிர்வாகிகளின் அலட்சியத்தால்
கர்வம் இழந்து தலைகுனியும் நிலை கண்டு வியப்பு.

அதிர்ச்சியும் ஆச்சரியமும் கொண்ட
அரசின் கொள்கைகள் கண்டு வியப்பு
அதனை உங்களோடு பகிர்ந்து கொள்ள
அருமையாய் அமைந்தது இந்த வாய்ப்பு.

Friday 10 September 2010

இடுகையூரில் ஒரு பதிவர் சந்திப்பூஊஊஊஊ- பகுதி2

பகுதி1



எல்லோரும் கிளம்பி பஸ்ஸில் ஏறும் சமயம் ஓட்டமா ஓடி வருகிறார் இலா. கூடவே விஜியும்.

இலா: ஹி ஹி மயில் குட்டி போட கொஞ்சம் லேட்டாயிடுச்சு அதான் நானும் லேட்டு

ஜெய்லானி: அதை நீங்க சொல்ல வேற செய்யணுமா. எங்களுக்கே தெரியுமே!

விஜி: நானும் ஃபெட்னா விழாவெல்லாம் முடிச்சு டயர்டா இருந்தேனா அதான் லேட்டாயிடுச்சு.

எல் போர்ட்: எங்களுக்காகவும் பாட்டு பாடுவீங்கல்ல.

விஜி: உங்களுக்கு இல்லாமலா?

விஜியின் இனிமையான பாடலோடு பயணம் தொடர்கிறது.

தீம் பார்க்கில்....

இமா அங்கிருக்கும் செடிகள் பூக்களோடு கையில் இருக்கும் ஃபோட்டோக்களை வைத்துக் கொண்டு உற்று உற்று பார்க்கிறார்

ஹைஷ்: என்ன இமா என்ன ஆராய்ச்சி நடக்குது?

இமா: இது என்ன பூ காய்னு பார்க்கறேன்.

ஹைஷ்: அதுக்கெல்லாம் இவ்வளவு கஷ்டப் பட வேணாம். வேலையை பூஸ்கிட்ட விட்டுடுங்க. வேலை கச்சிதமா முடிஞ்சிடும் :)

எல் போர்ட்: இமா இப்படிப் பார்த்தா ஒண்ணுமே புரியாது. அப்படியே ஒரு ஃபோட்டோவை செலக்ட் பண்ணிட்டு இப்போ பாருங்க எல்லாமே தெளிவா தெரியும் புரியும் :)

வானதி: ஹேஏஏய் இந்த லொகேஷன் நல்லா இருக்கு. இங்கயே சமையல் போட்டி நடத்திடலாம்.

கவிசிவா: நாட்டாமை அப்துல்காதர் இன்னும் வரலை. அதனால அந்த கத்திரிக்காய் மைக்கை உள்ளே வச்சுட்டு வாங்க. இல்லேன்னா 10கிலோ கத்திரிக்காய் வீட்டுக்கு அனுப்பிடுவோம்

நாஞ்சில்: ஆஹா இந்த இடத்தை பார்த்தவுடனேயே கவுஜ எழுதணும்னு தோணுதே!

ஜலீலா: ஏன் தம்பி ஏதாச்சும் பிலிப்பினோ பொண்ணு இந்தப் பக்கமா போச்சுதா?!

நாஞ்சில்: ஏங்க்கா நான் எங்க போனாலும் விடாம நானே மறந்து போன ஃபிலிப்பினோ பொண்ணை ஞாபகப் படுத்தறீங்க?

ஸ்டீபன்: அது ஒண்ணுமில்ல தல...அவங்க எல்லாம் அப்படித்தான். ஏதாச்சும் ஒரு வார்த்தை நம்ப வாயில இருந்து தப்பித் தவறி வந்திடுச்சுன்னா ஆயுசுக்கும் அதை வச்சே ஓட்டுவாங்க. அதுக்காக நாம நினைக்கறதை சொல்லாம இருக்க முடியுமா இல்ல பதிவு போடாமத்தான் இருக்க முடியுமா?

ஜலீலா: தம்பிங்கன்னா அப்படித்தான் கிண்டல் பண்ணுவோம். ஏற்கெனவே நாங்க மொட்டமாடி கவிஜ படிச்சு நொந்து போயிருக்கோம். இப்போ இன்னொரு கவிதையும்னா... தாங்க மாட்டோம். அதான் உங்களை டைவர்ட் பண்ண... ஹி ஹி

அப்படியே எல்லாரும் நடந்து போய்கிட்டு இருக்கும் போது ஒரு இடத்தில் கொஞ்சம் சைக்கிள்கள் வரிசையா நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது

எல் போர்ட்: அய்யோ என் சைக்கிள் இப்போ எப்படி இருக்கோ தெரியலியே :(. என் ஃப்ரெண்ட் அதை நல்லா கவனிச்சுக்கறாங்களோ இல்லையோ...

இலா: டேக் இட் ஈசி சந்து. தூசு படிஞ்சு போய் உங்ககிட்ட இருந்ததை விட சைக்கிள் இப்போ சந்தோஷமாவே இருக்கும்.

எல் போர்ட்: ?!?!?!?!

அப்படியே எல்லோரும் வேவ் பூல் பக்கம் வராங்க. பூலில் இருந்து யாரோ ஒருவர் நம் பதிவர்களைப் பார்த்து ஹாய் ஹாய்னு சொல்ற மாதிரி கையை ஆட்டறாங்க. எல்லோரும் திரும்பி ஹாய்னு சொல்றாங்க.

தண்ணீரைப் பார்த்ததும் பூஸ் அக்காவும் ஜீனோ தம்பியும் பயந்து நடுங்குகிறார்கள்

ஜீனோ: அக்கா அக்கா எனக்கு பயமா இருக்கு

பூஸ்(அழுகையை அடக்கியபடி): தம்பி அக்கா இருக்கறபோ பயப்படப்படாது. அக்கா மாதிரி தெகிரியமா இருக்கோணும். வா நாம அந்த சேருக்கு கீழே போய் உட்கார்ந்துக்கலாம்.

ஜீனோ: அக்கா நான் தண்ணியை பார்த்து பயப்படலை

பூஸ்: அப்புறம் தம்பி எதுக்கு நடுங்கற?

ஜீனோ: டோரா புஜ்ஜிக்கிட்ட பெர்மிஷன் வாங்காம வந்துட்டேன். இப்போ வீட்டுக்கு போனா என்னை வெளுத்து வாங்கிடும். அதான் அவ்வ்வ்வ்வ்

பூஸ்: சரி சரி நீ அடி வாங்கின அப்புறம் கண்ணை தொடைச்சுக்க ஒரு பாக்ஸ் டிஷ்யூ இமா தருவாங்க. நான் உனக்கு தைலம் வாங்கித் தரேன். அக்கா இருக்கறப்போ தம்பி இப்பூடி பயப்படப்படாது.

அப்போது வேவ் பூலில் இருந்து கை ஆட்டிய அந்தப் பெண் தட்டுத் தடுமாறி கரைக்கு வந்து...

ஆனந்தி: அடப்பாவிங்களா தண்ணிக்குள்ள மூழ்கிக்கிட்டு இருக்கேன் வந்து காப்பாத்துங்கன்னு கையை ஆட்டுனா கூலா ஹாய்னா சொல்றிங்க. நல்ல ஃப்ரெண்ட்ஸுங்கப்பா நீங்க எல்லாம்

ஆசியா: இன்னுமா நீங்க நீச்சல் கத்துக்கல?

ஆனந்தி: ஹி ஹி நீச்சல் தெரியும் ஆனா திடீர்னு மறந்து போச்சு

ஆசியா: நீங்க தனியாவா வந்தீங்க?

ஆனந்தி: இல்ல அப்பாவி தங்ஸும்,காயத்ரியும் வந்திருக்காங்க
கவிசிவா: அவங்க எல்லாம் எங்க?

ஆனந்தி: அதோ அங்க இருக்காங்க. காயத்ரியை யாரோ ஒரு பையன் ஆண்டின்னு சொல்லிட்டானாம். அவன அடிக்க துரத்திக்கிட்டு இருக்காங்க

பையன் எஸ்கேப்பாகி விட தளர்ந்து போய் காயத்ரி வருகிறார்

காயத்ரி: என்னை பார்த்து ஒரு பையன் ஆண்டின்னு சொல்லிட்டான். என்ன தீம் பார்க் வந்து... என்ன பிரயோஜனம்... என்ஜாய் பண்ண முடியாம பண்ணிட்டானே!

வசந்த்: ஆமாமா பாட்டியைப் பார்த்து ஆண்டின்னு கூப்பிட்டா கோபம் வரத்தான் செய்யும்.

காயத்ரி: அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

அப்பாவியும் வந்து சேர்கிறார்.

அப்பாவி: எல்லாரும் எப்படி இருக்கீங்க?

மைண்ட் வாய்ஸ்: இவ்வளவு நேரம் நல்லாத்தான் இருந்தாங்க. இப்பதான நீ வந்திருக்க. இனிமே கஷ்டம்தான்.

அப்பாவி: அப்பப்பா எங்க போனாலும் இந்த மைண்ட் வாய்ஸ் தொல்லை ரொம்ப ஜாஸ்தியா போச்சு

மைண்ட் வாய்ஸ்: ஏன் சொல்ல மாட்ட... உன்னோட பிளாகுக்கு நிறைய பேர் வர்றதே மைண்ட் வாய்சை படிக்கத்தான். அது என்னிக்குத்தான் உனக்கு புரியப்போகுதோ

அப்பாவி: சரி சரி ஒத்துக்கறேன். இப்போ என் இமேஜை டேமேஜ் பண்ணாதே ப்ளீஸ்

மைண்ட்வாய்ஸ்: அது நல்ல பிள்ளைக்கு அழகு

ஜெய்லானி: இந்த குளத்தில் இருக்கும் தண்ணி பச்சைத் தண்ணியா சுடு தண்ணியா

வசந்த்: பச்சைத்தண்ணிதான். ஏன் சுடுதண்ணி சமைக்கப் போறீங்களா?

ஜெய்லானி: பச்சைத் தண்ணியா? அப்போ ஏன் இது பச்சை நிறத்தில் இல்லை? பச்சை நிறத்தில் இல்லாததை ஏன் பச்சைத் தண்ணின்னு சொல்லணும்?

கவிசிவா: அடடா ஆரம்பிச்சுட்டாரய்யா ஆரம்பிச்சுட்டாரு. இனி வரிசையா சந்தேகம் வருமே. வாங்க வாங்க இங்க இருந்து போயிடலாம். இல்லன்னா சந்தேகம் கேட்டே நம்மளக் கொன்னுடுவார்.

ஜெய்லானி: ஏன் நான் அடுத்த இடத்துக்குப் போனா எனக்கு சந்தேகம் வராதா? அப்படீன்னா ஏன் வராது? இங்கன்னா மட்டும் ஏன் சந்தேகம் வருது?

நாஞ்சில்: இது வேலைக்காகாது. ரெண்டு மூணு அ.கோ.மு. வை வாயில் வச்சு அமுக்குங்கப்பா.

ஜெய்லானி: என் வாயிலயா? உங்க வாயிலயா?

நாஞ்சில்: மக்கா ஸ்டீபா என்னை காப்பாத்தூஊஊஊஊ

வசந்த் ஜெய்லானியை திசை திருப்பும் விதமாக சிறிய விளையாட்டுப் போட்டியை நடத்துகிறார். இரண்டு படங்களைக் காட்டி அதற்கான வார்த்தையை கண்டு பிடிக்க சொல்கிறார்.

நாஞ்சில்: தல எனக்கு தூக்கம் வருது. அப்புறமா வந்து விடை சொல்றேன்

ஸ்டீபன் சரியான விடையை சொல்லி பரிசைத் தட்டி செல்கிறார்.

தூரத்தில் ஒருவர் மேஜை அடுப்பு எல்லாம் ரெடியா வைத்து கையில் சுத்தியோடு காத்திருக்கிறார். யாருன்னு பார்த்தா... நாட்டாமை அப்துல் காதர்.

அப்துல்காதர்: வானதி அக்கா சொன்ன மாதிரி இங்கேயே சமையல் போட்டியும் நடத்திடலாம்.

நாஞ்சில்: இது வேறயா?

ஸ்டீபன்: ஆசியாக்கா இந்தாங்க நீங்க கேட்ட மாங்காய். திருட்டு மாங்காய்தானே ருசிக்கும் அதான் பக்கத்து வீட்டில் திருடிக் கொண்டு வந்தேன். வெற்றி உங்களுக்குத்தான்.

மற்ற போட்டியாளர்களும் சமையலுக்கு தேவையான பொருட்களை எடுத்து வைக்க அப்பாவி ஒரு பெரிய பார்சலை எடுத்து மேசை மேல் வைக்கிறார்.

அப்துல்காதர்: அது என்ன இவ்ளோ பெரிசா எடுத்துட்டு வந்திருக்கீங்க

அப்பாவி: இட்லி குண்டானும்,நானே அரைத்த இட்லி மாவும்

மற்ற எல்லோரும்: என்னது அப்பாவி இட்லி சமைக்கப் போறாங்களா...... எஸ்ஸ்ஸ்ஸ்கேஏஏஏஏஏஏஏப்...................

எல்லோரும் மறைந்து விட அப்பாவியாக தங்கமணி தான் கொண்டு வந்த மாவில் இட்லி செய்து சோகமாக தண்ணீரில் எறிந்து கொண்டிருக்கிறார்.

மைண்ட் வாய்ஸ்: எதுக்கும் கொஞ்சம் மெதுவாவே இட்லியை வீசு. இல்லேன்னா பாவம் தண்ணியில் உள்ள மீனெல்லாம் அடிபட்டு செத்துப் போகும்.

அப்பாவி: ?!?!?!?!

Tuesday 7 September 2010

எலிக்கு உணவில்லையெனில் ஏழையை பட்டினியிடுவோம்

தானியக் கிடங்கில் தானியம் வீணாகி மக்கி நாசமாய்ப்போனாலும் பரவாயில்லை ஆனால் ஏழைகளுக்கு கொடுக்க மாட்டோம் அப்படீங்கறாரு நம்ப உணவு அமைச்சரும் பிரதம மந்திரியும். அதிலும் 37 சதவீதம் மக்கள் வறுமைக்கோட்டுக்கு கீழ இருக்கிறார்களாம்.  அதையும் அவருதான் சொல்றாரு.

ஏண்டா டேய் (மரியாதை கொடுக்க மனசு இல்லை) உங்களுக்கு எல்லாம் மனசாட்சின்னு ஒன்னு கிடையாதாடா? உங்களுக்கு சம்பள உயர்வு வேணும்ம்னு கேட்டு கூச்சல் போடுறீங்களேடா உன்னை ஓட்டு போட்டு அனுப்பினானே ஓட்டாண்டி அவனுக்கு வீணாகப் போகும் உணவுப் பொருளைக் கொடுக்கக் கூட உனக்கு என்னடா கஷ்டம்? அப்படி என்னடா பொல்லாத கொள்கை உங்களுடையது?
உங்களுக்கெல்லாம் கொள்கைன்னா என்னான்னு தெரியுமா? அதான் சீசனுக்கு சீசன் தேர்தலுக்கு தேர்தல் மாத்துறதுதானே உங்க கொள்கையெல்லாம். அப்புறம் ஏன் இந்த விஷயத்தில் இத்தனை பிடிவாதம்? வீணாகிப் போவதை பகிர்ந்தளிப்பதில் என்ன பிரச்சினை? அப்படி என்ன ஈகோ!

சின்ன சின்ன பிரச்சினைகளுக்கு கூட நாடாளுமன்றத்தை ஸ்தம்பிக்க வைக்கும் எதிர்கட்சிகள் இதில் அதிகம் அலட்டிக் கொள்ளாதது ஏன்? ஏழைப்பங்காளர்கள் என்று சொல்பவர்கள் கூட பெரிதாக கண்டுகொள்ளவில்லையே ஏன்?

சரி இந்த பாழாப்போன அரசியல்வியாதிகளுக்குத்தான் அறிவு கிடையாது. ஐஏஎஸ் படிச்சு பெரிய பெரிய பதவியில் இருந்து பிரதமருக்கு ஆலோசனை சொல்லும் அதிகாரிகளுக்கு கூடவா அறிவு, மனிதாபிமானம் கிடையாது? அது எப்படி இருக்கும் அரசு செலவில் சுகிப்பவர்கள் அல்லவா நீங்கள். ஆட்சிக்கேற்ற, அரசியல்வாதிக்கேற்ற மாதிரி ஜால்ரா தட்டத்தானே உங்களுக்கெல்லாம் தெரியும். அங்கே பட்டினியால் மடியும் ஏழையைப் பற்றி உங்களுக்கென்ன கவலை? உணவுதானியங்கள் எலிகளுக்கு உணவானால் உங்களுக்கு என்ன கவலை?  உங்கள் உணவில் எலி விழாமல் இருக்க வேண்டும் அவ்வளவுதானே?!


நடிக நடிகையரின் அந்தரங்கங்கங்களை தோண்டித் துருவும் ஊடகங்கள் இதில் அக்கறை காட்டாதது ஏன்? போணியாகாது என்பதாலா?

உன் தலைவனை ஏதோ சொல்லிட்டான்னு சொல்லி தீக்குளிக்க தயாராக இருக்கும் தொண்டனே உன் சக மனிதனுக்கு வீணாகும் உணவுப் பொருளைக் கூட கொடுக்க மறுக்கிறானே உன் தலைவன் ஏன்னு கேட்க மாட்டியா?  அவ்வளவு பயமா? அப்புறமும் ஏன் அவனுக்கு கொடி பிடித்துக் கொண்டு அலைகிறாய்?  உன் ரத்தைத்தை உறிஞ்சிக் கொண்டு உன்னையே கொள்ளையடிப்பவன் பின்னால் ஏன் போகிறாய்?

இவ்வளவும் இங்கு பேசும் நமக்காவது சொரணை இருக்கிறதா :(

Saturday 4 September 2010

இடுகையூரில் ஒரு பதிவர் சந்திப்பூஊஊஊ

எல்லாரும் அடிக்கடி பதிவர் சந்திப்பெல்லாம் நடத்துறாங்க. நமக்குத்தான் அதுக்கெல்லாம் கொடுப்பினை இல்லியே! தனியா இந்தத்தீவுல உட்கார்ந்து பொலம்பிக்கிட்டு இருக்காம கற்பனையிலாவது ஒரு பதிவர் சுற்றுலா நடத்துவோமேனு நடத்திட்டேன்.ஹி ஹி :-)

பதிவர் சந்திப்பு
நாள்: பிப்ரவரி 31 2011
இடம்: ப்ளாக் தீம் பார்க், இடுகையூர்.


எல்லோரும் இடுகையூர் சந்திப்பில் சந்தித்து அங்கிருந்து தீம் பார்க் போவதாக ப்ளான்.


வசந்த் எல்லோருக்கும் முன்பாகவே வந்து காத்திருக்கிறார். கூடவே ஒரு ரோபோவும் இருக்கிறது.


ஜலீலாக்காவும் வழக்கம் போல அட்டகாசமான சாப்பாட்டு ஐட்டங்களோடு வந்து இறங்குகிறார். இந்த முறை கூடவே சமைத்து அசத்தும் ஆசியாவும்.


வசந்த்: என்னக்கா மூட்டை முடிச்செல்லாம் பெரிசா இருக்கு?


ஜலீலா: நான் எங்க போனாலும் எல்லாருக்கும் சாப்பாடு எடுத்துட்டுதான் வருவேன். என் கையால சமைச்சுக் கொடுத்தாத்தான் எனக்கு திருப்தி ஹி ஹி

ஆசியா: என்ன வசந்த் ஒரு பொம்மையையும் கூடவே எடுத்துட்டு வந்திருக்கீங்க. சின்ன வயசு ஞாபகம் இன்னும் போகலியா?

வசந்த்: அய்யோ நல்லா பாருங்க அது ரோபோ. என்ன வேலை சொன்னாலும் செய்யும். உங்க மூட்டை முடிச்சு எல்லாத்தையும் அதுவே தூக்கிட்டு வரும்.

ஜலீலா: அதுசரி நாஞ்சில் தம்பி எங்கே இன்னும் காணோம்?

வசந்த்: அங்கே பாருங்க ஒருத்தர் கன்னத்துல கை வச்சுட்டு போஸ் கொடுத்துட்டே ஒருத்தர் வரார். அவர் நாஞ்சில்னுதான் நினைக்கறேன்.

ஜலீலா: கன்னத்துல கை வச்சுட்டு வர்றாரா? அப்போ கண்டிப்பா அது நாஞ்சிலாரேதான்

நாஞ்சில் பிரதாப்பும் வந்து சேர்கிறார்.


ஜெய்லானி மூக்கு சிவக்க கண்கலங்க வருகிறார்.

ஜலீலா: என்னாச்சு? ஏன் அழறீங்க ஜெய்லானி?

ஜெய்லானி: ஒண்ணுமில்லக்கா. ஒழுங்கா சுடுதண்ணி சமைக்கலேங்கறதுக்காக எங்க வீட்டுல பூரிக்கட்டை கைதவறி என் மண்டையில் விழுந்திடுச்சு அதான் அவ்வ்வ்வ்வ்வ்

நாஞ்சில்: சரி விடுங்க தல... குடும்ப வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம். இனிமே ஹெல்மெட் போட்டுக்கிட்டே சமையல் பண்ணுங்க

அப்போது மரத்தின் மீது ஏதோ சலசலப்பு... எண்ணம் அயகானால் எல்லாம் அயகாகும் அப்ப்டீன்னு ஒரு பூஸ் மியாவ் மியாவ்னு தலையில் கவசம் கையில் கோடரியோடு உட்கார்ந்திருக்கு.

ஆசியா: ஹேய் அதீஸ் பூஸ் என்ன இன்னும் மரத்து மேல உட்கார்ந்திருக்கீங்க. அதான் கவசமெல்லாம் போட்டிருக்கீங்கல்ல கீழே வாங்க

அதிரா@பூஸ்@அதீஸ்: ம்ஹூம். எனக்கு அ.கோ.மு. தந்தாதான் வருவேன்.

ஜெய்லானி: முடியாது முடியாது அ.கோ.மு. எல்லாம் எனக்குத்தான்

அது என்னடா அ.கோ.மு.ன்னு மற்ற எல்லாரும் திரு திருன்னு முழிக்கறாங்க.


அந்த நேரம் யாரையோ திட்டிக்கிட்டே கவிசிவா வர்றாங்க.

நாஞ்சில்: என்னாச்சு கவி இன்னைக்கு யாரைத் திட்டறீங்க? யாராச்சும் பல்பு கொடுத்துட்டாங்களா?

கவிசிவா: எல்லாம் இந்த ஏர் இந்தியாக்காரனைத்தான் திட்டிக்கிட்டு வரேன். இவனுங்க லேட்டாத்தான் கிளம்புவானுங்கன்னு தெரிஞ்சுதான் நேற்றே வந்து சேர்ந்துடணும்னு 5நாளைக்கு முன்பு உள்ள ஃப்ளைட்லயே புக் பண்ணினேன். பாழாப்போனவனுங்க 5நாள் தாமதமா புறப்பட்டு இப்பதான் வந்து சேர்ந்தானுங்க.

நாஞ்சில் பிரதாப்: இதுக்கெல்லாமா டென்ஷன் ஆவாங்க. சரி சரி விடுங்க

அதீஸ்: எனக்கு அ.கோ.மு வேணும்.

ஆசியா: அது என்னப்பா அ.கோ.மு. அதைத் தூக்கிப் போடுங்க பூஸ் கீழ வரட்டும்.

கவிசிவா: அது ஒண்ணுமில்ல ஆசியா. அவிச்ச கோழி முட்டையைத்தான் ஜெய்லானியும் அதிராவும் அப்படி   அ.கோ.மு. ன்னு சொல்லிக்கிட்டு இருப்பாங்க. இதுக்காக எப்ப பாரு ரெண்டு பேருக்கும் சண்டைதான்.

ஆசியா: இவ்வளவுதானா. அதான் நான் நிறைய கொண்டு வந்திருக்கேனே. சுடச்சுட முட்டை பஜ்ஜி போடலாம்னு நினைச்சு எடுத்துட்டு வந்தேன். இதோ பிடியுங்க.

பூஸ் முட்டையை முழுங்கிக் கொண்டே கீழே இறங்கி வருகிறது.

மேலே ஒரு ஃப்ளைட் வரும் சத்தம் கேட்கிறது. அவ்வளவுதான் கூட ஐந்தாறு முட்டையை அபேஸ் பண்ணிக்கிட்ப்டு பூஸ் ரோபோவின் பின்னே போய் ஒளிந்து கொள்கிறது.


எல்லோரும் சிரிக்க ஃப்ளைட்டிலிருந்து ஹைஷ் அண்ணாவும் ஜீனோ, இறங்கி வருகிறார்கள். ஜீனோவுக்கு ரோபோவைப் பார்த்ததும் சந்தோஷம் தாங்கவில்லை. உடனே என் இனிய இயந்திரா மொழியில் ரோபோவுடன் கதைக்க ஆரம்பித்து விட்டது.

அப்போது ரோபோவின் பின்னிருந்து கர்ர்ர்ர்ர்ர்ர் என்று சத்தம். ஜீனோ சுற்றும் முற்றும் தேடிப்பார்த்து பூஸ் அக்காவைக் கண்டதும் சந்தோஷம் தாங்காமல் துள்ளிக் குதிக்க ஆரம்பித்து விட்டது

தூரத்தில் எல் போர்ட் மாட்டி சீரியசாக ஒரு பெண் நடந்து வந்து கொண்டிருக்கிறார்.


பார்த்தவடன் எல்லோருக்கும் புரிந்து விட்டது.

எல்லோரும் கோரசாக: ஹேஏஏஏஏஏய் சந்தூஊஊஊஊ

சந்தூ@எல்போர்ட்: (இதுக்கு என்னான்னு ரியாக்ட் பண்ணனும்னு தெரியலன்னு சொல்லிக்கிட்டே) ஹாஆஆஆஆய்

நாஞ்சில்: லேட்டாச்சுப்பா கிளம்ப வேணாமா?

கவிசிவா: இன்னும் இமா வானதி இவங்கல்லாம் வர்றேன்னு சொன்னாங்க இன்னும் காணோமே.

அப்போது இமா கையில் பல பூக்கள் காய்களின் ஃபோட்டோக்களோடு வருகிறார். கூடவே ஆமையாரும்.

இமா: இது நான் நியூஸிலாந்தில் காட்டுக்குள் மாட்டிக்கிட்டபோது எடுத்த படங்கள். இதெல்லாம் என்ன பூ காய்னு யாருக்காவது தெரியுமா?

வசந்த்: ஆரம்பிச்சுட்டாங்கையா ஆரம்பிச்சுட்டாங்க

அப்போது வானதி கேமரா மைக் எல்லாம் எடுத்துட்டு வர்றாங்க

ஜெய்லானி: என்னாது இதெல்லாம்?

வானதி: ஹி ஹி இங்கேயே சமையல் போட்டியும் நடத்திடலாம்னு..

நாஞ்சில்(மனதுக்குள்):அடடா தெரியாம இந்த கும்பல்ல வந்து மாட்டிக்கிட்டோம் போல இருக்கே! நம்ப பங்காளிக யாராவது வந்தாலூம் கும்மி அடிக்கலாம்.

அந்த நேரம் பார்த்து "நாடோடி" ஸ்டீபன் வருகிறார்

நாஞ்சில்: மக்கா நீயாவது வந்தியே! இங்க எல்லாம் ஒரு கேங்கா இருக்காங்க. அது சரி ஏன் லேட்டு?

ஸ்டீபன்: ஹி ஹி அது பக்கத்து வீட்டு மதிலேறி குதிச்சு மாங்கா பறிக்கும் போது மாட்டிக்கிட்டேன். அதான் அங்க இருந்து மாங்காயோட எஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஆக லேட்டாயிடுச்சு

எல்லோரும் கிளம்பி தீம் பார்க் போறாங்க. இனி தீம் பார்க்கில்...இவர்களோடு இன்னும் சிலரையும் சேர்த்து  தீம் பார்க்கில் சந்திக்கலாம்....