Tuesday 29 June 2010

அலற வைத்த அழையா விருந்தாளி

போன சனிக்கிழமை காலையிலேயே எங்க வீட்டு ரங்கமணி கோல்ஃப் விளையாடப் போறேன்னு சொல்லி எஸ்கேப் ஆயிட்டார். அவரை அனுப்பி வச்சிட்டு மீண்டும் ஒரு குட்டித் தூக்கம் (பின்னே அதிகாலை 6மணிக்கெல்லாம் முழிச்சுக்கிட்டா என்னாவறது) போட்டுட்டு ஏழரைக்கு மீண்டும் முழிச்சு (ஏழரைக்கு முழிச்சதுனாலதான் அன்னைக்கு ஏழரையாயிடுச்சோ என்னவோ) குளிச்சு முடிச்சு... அப்பப்பா காலையிலேயே எம்பூட்டு வேலை...

ஒன்பது மணிக்கு ஒருவழியா லன்ச் சமைக்கலாமேன்னு கிச்சனுக்குள் போனேன். என்னது ஒன்பது மணிக்கே லன்ச் சமைப்பீங்களா அப்படீன்னு கேட்கக்கூடாது. ஏன்னா இந்த ரங்கமணிங்களுக்கு எல்லாம் பொதுவா ஒரு குணம் உண்டு. சீக்கிரம் சாப்பிட வருவேன்னு சொல்லிட்டு போனாங்கன்னா அன்னிக்கு ஒன்னு சாப்பிடவே வரமாட்டாங்க இல்லேன்னா மூணுமணிக்கு மேல வந்து நிப்பாங்க. லேட்டாகும்னு சொல்லிட்டு போனாங்கன்னா பதினோரு மணிக்கே வந்து 12மணிக்கு மீட்டிங் இருக்குதும்மா சாப்பாடு கொடுக்கறியான்னு வந்து நிப்பாங்க. இடையிலே ஒரு ஃபோனோ மெசேஜோ கூட இருக்காது. அதனால் இப்போ நிறையா தங்கமணிங்க உஷாராயிட்டோம். எப்போ வேணும்னாலும் வந்து சாப்பிடுங்க அப்படீன்னு பதினோரு மணிக்குள்ள சமைச்சு வச்சிடுவோம். ரங்கமணி எப்போ வர்றாங்களோ அப்போ திரும்பவும் சூடாக்கி கொடுத்திடுவோம் :)

ஆங்... எங்க விட்டேன்....சமைக்க கிச்சனுக்குள் போய் ஃப்ரிட்ஜை திறந்து(பின்ன மூடிட்டேவா எடுக்க முடியும்னு நீங்க முனுமுனுக்கறது கேக்குது) காய்கறிகளை எடுத்துட்டு திரும்பினா மிக்சி பக்கத்தில் ஒரு விருந்தாளி வந்து நிக்கறாங்க. எனக்கு அவங்களைப் பார்த்ததும் கையும் ஓடலை காலும் ஓடலை. உடனே ரங்கமணிக்கு ஃபோன் பண்ணினா... அவர் எடுக்கவே இல்லை. மனதுக்குள்ளே திட்டிக்கிட்டு வந்திருக்கவங்களுக்கு எதை வைச்சு கொடுக்கலாம்னு யோசிச்சேன். வீட்டில் உள்ளதை வைச்சு கொடுத்து(கொடுக்கவும் பயம்) அவங்களுக்கு போதலேன்னா பிரச்சினையாயிடுமே... (ஏன்னா வந்திருக்கறவங்க ரொம்ப கோபக்காரங்க) அப்படீன்னு யோசிச்சுட்டே(பயந்துக்கிட்டே) செக்யூரிட்டிக்கு ஃபோன் பண்ணி விருந்தாளி வந்திருக்கற விஷயத்தை சொன்னேன்.

உடனே செக்யூரிட்டிகளும் வீட்டுக்கு வந்து விருந்தாளியைப் பார்த்தாங்க. வந்த விருந்தாளி வயசு குறைஞ்சவங்களா இருந்ததால அவங்க கையில இருந்ததை வச்சே ஒன்னு கொடுத்தாங்க. விருந்தாளி மயங்கி கீழ விழுந்துட்டாங்க. பெரியவங்க யாராவது வந்திருக்காங்களான்னு வீட்டுக்குள்ள போய் தேடினாங்க. யாரும் இல்லை. அப்புறம் செக்யூரிட்டிகளே கையில் எடுத்துட்டு போயிட்டாங்க. இப்போதான் எனக்கு நிம்மதியாச்சு. அப்பாடா வந்த விருந்தாளிக்கு கோபம் வராதமாதிரி கவனிச்சு திருப்பி அனுப்பிச்சுட்டோமேன்னு நிம்மதியாச்சு.

சரி.. இவ்வளவு நேரம் விருந்தாளி விருந்தாளின்னு சொன்னேனே அவர் யாருன்னு கண்டுபிடிச்சுட்டீங்களா?! கண்டுபிடிச்சவங்களுக்கு சபாஷ். கண்டுபிடிக்காதவங்களுக்காக... வந்தது வேற யாரும் இல்லை....குட்டி பாம்பு தான். இரண்டு நாட்களாக பெய்த மழையில் மலையிலிருந்து அடித்துக் கொண்டு வந்திருக்கும் என்று நினைக்கிறேன்

சாவகாசமா ரங்கமணி கோல்ஃபெல்லாம் விளையாடி முடிச்சுட்டு ஏம்மா ஃபோன் பண்ணினியாம்மான்னு எனக்கு ஃபோன் பண்றார். எனக்கு வந்த கோபத்தில்... ஒண்ணும் செய்ய முடியலை ஏன்னா ஆள் எதிரில் இல்லையே :(. அப்புறம் என்ன அன்னிக்கு சமையல் அம்புட்டுதான். ரங்க்ஸு பர்ஸுக்கு வேட்டுதான் :)

டிஸ்கி: பாம்பு ஃபோட்டோ எங்கேன்னெல்லாம் கேட்கக் கூடாது. ஏன்னா புத்தகத்துல பாம்பு படம் இருந்தா கூட அந்த புத்தகத்தையே தொடமாட்டேன். அவ்வளவு தைரியசாலி நான் :( இப்பவும் கிச்சனுக்குள் போகும்போது யாராவது இருக்காங்களான்னு நல்லா தேடிப்பார்த்துக்கிட்டுதான் போறேன்.

Monday 28 June 2010

அமெரிக்காவில் 6வயது தீவிரவாதி

அமெரிக்காவின் ஒஹையோ வில் வாழும் இந்தியர் டாக்டர்.சந்தோஷ் தாமஸ். அவர் தன் குடும்பத்தோடு க்ளிவ்லாண்டிலிருந்து மினியாபொலீசுக்கு விமானத்தில் பயணம் செய்ய இருந்த போது அவரது 6வயது மகள் அலீசா தாமஸ் பெயர் அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்பு நிறுவனத்தின் no-fly லிஸ்டில் இருப்பதாக கூறப்பட்டது.

அதிகாரிகளுக்கு என்னா ஒரு காமன் சென்ஸ். 6வயது குழந்தையின் பெயர் தீவிரவாதி என சந்தேகிக்கப்படுபவர்களின் லிஸ்டில்! இப்போது அது விவாதமாகிவிட்டது. ஆனால் எதன் அடிப்படையில் அலிசாவின் பெயர் லிஸ்டில் சேர்க்கப்பட்டது என தெரிவிக்க அதிகாரிகள் மறுத்து விட்டனர்.
அமெரிக்க போலீசு நம்ப போலீசுக்கு அண்ணனா இருக்கானுங்களே!

இந்தோனேஷியாவில் இருக்கிறேன் என்ற காரணத்துக்காக அமெரிக்காவுக்கு விசிட் விசா அனுமதிக்க முடியாதுன்னு சொன்னப்போ இது என்னடா அநியாயமா போச்சுன்னு நினைச்சேன். 6வயசு குழந்தையை தீவிரவாதியா நினைக்கறவன் இந்தோனேசியாவில் இருக்கற எல்லாரும் தீவிரவாதின்னுதான் நினைப்பான் :(

Saturday 26 June 2010

தலைகீழான கொடி

நம்ப உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் பாகிஸ்தானுக்கு சார்க் மாநாட்டில் கலந்துக்க போயிருக்காராம். அங்க பாகிஸ்தான் அமைச்சரை சந்தித்து பேசினாராம். அப்போ ரெண்டு நாட்டு கொடியும் அங்க உள்ள மேஜையில் வச்சிருந்தாங்களாம். அதுல நம்ப நாட்டுக் கொடிய தலைகீழா கட்டி வச்சிருக்கானுங்க அந்த பாகிஸ்தான் அதிகாரிங்க. அவனுங்க வேணும்னு செஞ்சானுங்களோ இல்ல தவறுதலா நடந்துச்சோ... ஆனா அவரு பேச்சுவார்த்தையெல்லாம் முடிச்சுப்புட்டு ரொம்ப பரந்த மனசோட இதையெல்லாம் பெருசா எடுத்துக்கப்படாதுன்னு சொல்லிப்புட்டு அடுத்த ஜோலியை பார்க்கப் போயிட்டாரு.

ஆனால் எனக்கென்னமோ டிவியில் நம்ப கொடி தலைகீழா பறக்கறதைப் பார்த்தப்போ ரொம்பவே கோபம் வந்திடுச்சு. அமைச்சருக்கு நம் கொடி எப்படி இருக்கும்ங்கறது தெரியுமான்னே சந்தேகமா இருக்கு. இல்லேன்னா நம்ப அமைச்சர் அதை சரியாக்க சொல்லிட்டு அப்புறமா பேச்சுவார்த்தையை தொடர்ந்திருக்கலாமே. என்னமோ போங்க எதுவுமே சரியில்லை

Saturday 19 June 2010

அப்பாவுக்காக...







குட்டீ... என்ற உன் குரல் கேட்டால் குழந்தையானேன்
அம்மா என்ற உன் அழைப்பில் அன்புக்குரிய அன்னையானேன்
உன் இளவயது குறும்புகளை கேலி செய்யும் தோழியானேன்
அப்பா... என்று உன் மடி சாயும் போது அன்பு மகளானேன்

பத்து மாதம் அம்மா என்னைக் கருவில் தாங்கினாள்
அப்பா நீயோ என்னை உன் நெஞ்சில் தாங்கி தாயுமானாய்
கதை சொல்லி உறக்கும் போது பாட்டியானாய்
மூன்று வயதில் முதலெழுத்து சொல்லிக் கொடுத்து குருவுமானாய்
பள்ளிக் கல்லூரி கதைகளை ஆவலோடு கேட்கும் நண்பனானாய்
கணவனோடு புக்ககம் நான் செல்ல கண்கலங்கி தந்தையானாய்


*****************WE LOVE YOU DAD*****************


******HAPPY FATHER'S DAY TO ALL FATHERS*******

Friday 11 June 2010

என்னான்னு சொல்ல :(

சமீபத்தில் எனக்கு வந்த மெயில். இந்த அரசியல் வியாதிகளை என்ன செய்யலாம் சொல்லுங்க!
Forward this message to all..................................
Latest update after Swiss Bank has agreed to disclose the funds.
Our Indians' Money -
70, 00,000 Crores Rupees In Swiss Bank

1) Yes, 70 lakhs crores rupees of India are lying in Switzerland banks. This is the highest amount lying outside any country, from amongst 180 countries of the world, as if India is the champion of Black Money.

2) Swiss Government has officially written to Indian Government that they are willing to inform the details of holders of 70 lakh crore rupees in their Banks, if Indian Government officially asks them.

3) On 22-5-08, this news has already been published in The Times of India and other Newspapers based on Swiss Government's official letter to Indian Government.

4) But the Indian Government has not sent any official enquiry to Switzerland for details of money which has been sent outside India between 1947 to 2008.. The opposition party is also equally not interested in doing so because most of the amount is owned by politicians and it is every Indian's money.

5) This money belongs to our country. From these funds we can repay 13 times of our country's foreign debt. The interest alone can take care of the Center s yearly budget. People need not pay any taxes and we can pay Rs. 1 lakh to each of 45 crore poor families.

6) Let us imagine, if Swiss Bank is holding Rs. 70 lakh Crores, then how much money is lying in other 69 Banks? How much they have deprived the Indian people? Just think, if the Account holder dies, the bank becomes the owner of the funds in his account.

7) Are these people totally ignorant about the philosophy of Karma? What will this ill-gotten wealth do to them and their families when they own/use such money, generated out of corruption and exploitation?

8) Indian people have read and have known about these facts. But the helpless people have neither time nor inclination to do anything in the matter. This is like "a new freedom struggle" and we will have to fight this.

9) This money is the result of our sweat and blood.. The wealth generated and earned after putting in lots of mental and physical efforts by Indian people must be brought back to our country.

10) As a service to our motherland and your contribution to this struggle,please circulate at least 10 copies of this note amongst your friends and relatives and convert it into a mass movement.

இவனுங்களைத் தட்டி கேட்க நேரமில்லாமல் நாம் இன்னமும் ஜாதியையும் மதத்தையும் கட்டிகொண்டு ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு இருக்கும் நாமும் குற்றவாளிகளே!!!

Tuesday 8 June 2010

தங்கநாற்கர சாலையும் விபத்தும்

இந்த முறை இந்தியா போயிருந்தப்போ அப்பா அம்மா நான் மூணு பேரும் மதுரைக்கு காரில் கிளம்பினோம். டிரைவர்தான் ஓட்டினார். இப்போது நாகர்கோவில் மதுரை சாலை பக்காவாக போட்டிருக்காங்க. தங்க நாற்கர சாலை திட்டத்தில்தான் இந்த சாலையும் உள்ளது. எதிரில் வாகனங்கள் வராது ரோடும் பக்காவாக இருக்கிறது என்பதால் வாகனங்கள் எல்லாம் 100கிமீ வேகத்தில்தான் செல்கின்றன.

எங்கள் காரும் 100கிமீ வேகத்தில்தான் போய்க் கொண்டிருந்தது. எங்கள் முன்னால் அடுத்த ட்ராக்கில் ஒரு டெம்போ போய் கொண்டிருந்தது. இந்நிலையில் ஒரு லாரி ரோட்டின் குறுக்கே நின்று கொண்டிருந்தது. இதனால் முதல் ட்ராக்கில் வந்து கொண்டிருந்த டெம்போ லாரியை கடப்பதற்காக எங்கள் கார் வந்து கொண்டிருந்த ட்ராக்கிற்கு திடீரென மாறியதால் எங்கள் கார் மீது பலமாக மோதியது.

அதிர்ஷ்டவசமாக டெம்போ காரின் டயரில் மோதியதால் டயர் வெடித்து கார் அப்படியே நின்று விட்டது. முன் சீட்டில் இருந்த அப்பா சீட் பெல்ட் போட்டிருந்ததால் எங்கும் போய் மோதாமல் அப்படியே இருந்து விட்டார். டிரைவருக்கும் எந்த அடியும் இல்லை. பின் சீட்டிலிருந்த அம்மாவும் நானும் முன்சீட்டில் சென்று மோதினோம் ஆனால் அடி எதுவும் படவில்லை. நல்லவேளையாக விபத்தில் யாருக்கும் சிறு காயம் கூட இல்லை. ஆனால் கார் மிக மோசமாக சேதமடைந்து விட்டது.

பழைய காரை மாற்றி இந்த புதிய காரை வாங்கி 20நாட்களே ஆகியிருந்தது. இன்ஷ்யூரன்ஸ் இருந்ததால் பிரச்சினை ஏதும் இல்லை.

இந்த விபத்து நடக்க முக்கியமான சில காரணங்கள்

1. எங்கள் காரின் வேகம். ஒருவேளை மெதுவாக சென்றிருந்தால் டெம்போ இந்த ட்ராக்கிற்கு மாறும் போது ப்ரேக் போட்டவுடன் எங்கள் கார் நின்றிருக்கும். விபத்தை தவிர்த்திருக்கலாம். அப்படியே டெம்போ மோதியிருந்தாலும் பாதிப்பு குறைவாக இருந்திருக்கும்.

2. எதிர்திசையில் தவறாக வந்த லாரி. அந்த லாரி தவறாக இந்த ட்ராகில் வராமல் இருந்திருந்தால் டெம்போ அதன் வழியில் ஒழுங்காக சென்றிருக்கும்.

3. ட்ரைவர்களின் பொறுமையின்மை. லாரி தவறாகத்தான் வந்தது. ஆனால் டெம்போ ட்ரைவர் 1நிமிடம் பொறுமையாக இருந்திருந்தால் லாரி யு டர்னில் திரும்பியிருக்கும். இவர் நேரே சென்றிருக்கலாம்.

4: இண்டிகேட்டர் போட்டுத்தான் ட்ராக் மாற வேண்டும் என்ற அடிப்படை எண்ணம் இல்லாமல் இருப்பது.


அந்த ரோட்டில் விபத்துக்கள் அதிகம் நடக்கிறது. ஒருமாதம் முன்புதான் என் உறவினர் ஒருவர் காரும் இதே போல் விபத்துக்குள்ளாகியது. ரோடு பக்காவாக இருக்கிறது. ஆனால் சரியான அறிவிப்பு பலகைகள் இன்னும் எல்லா இடங்களிலும் வைக்கப் படவில்லை. யு டர்ன் ஐக் குறிக்கும் பலகைகளைப் பார்க்கவே முடியவில்லை.

இன்னொரு முக்கிய பிரச்சினை வேண்டுமென்றே எதிர்திசையில் தவறாக வரும் வாகனங்கள். சிறிது தூரம் சரியான திசையில் போய் யூ டர்ன் எடுப்பதை தவிர்த்து விட்டு பல வாகனங்கள் இப்படி வருகின்றன. முக்கியமாக லாரிகள் மற்றும் அரசு போக்குவரத்து வாகனங்கள்தான் இப்படி வருகின்றன. ஒருகிலோமீட்டர் தூரத்திற்கான நேரத்தையும் பெட்ரோலையும் சேமிக்கிறேன் என்று மற்றவர்களின் உயிருக்கு உலை வைக்கிறார்கள்.

அடுத்து மிகமுக்கிய பிரச்சினையாக எனக்குப் பட்டது துணைச்சாலைகளிலிருந்து முக்கிய சாலைக்கு வரும் வாகனங்கள் கவனித்து வருவதே இல்லை. திடீர் திடீரென்று ஏறி வரும்போது முக்கிய சாலையில் வருபவர்கள் ஒருகணம் தடுமாறி விடுகின்றனர். இது அந்த சாலையில் மட்டுமல்ல நகரில் ஓட்டுபவர்கள் கூட அப்படித்தான் வருகின்றனர். ஒரு முறை டவுனுக்குள் சென்று மீண்டும் வீடு திரும்புவதற்குள் போதும் போதுமென்றாகி விடுகிறது.

அரசு முயற்சியெடுத்து நல்ல சாலைகளைப் போட்டாலும்(சில இடங்களிலாவது போடுகிறார்களே) பொதுமக்கள் சாலை விதிகளை மதிக்காவிட்டால் என்ன செய்வது?!

Saturday 5 June 2010

வந்துட்டேனுங்க!

இரண்டு மாதங்கள் இடைவெளிக்குப் பின் மீண்டும் மொக்கை போட வந்துட்டேனே! எல்லாரும் நல்லா இரு(ந்திரு)ப்பீங்கன்ன்னு நினைக்கிறேன் :). இனிமே இந்தப்பக்கம் அடிக்கடி வருவேன் கவனமா இருந்துக்கோங்க.

இந்திய பயணம் பல நல்ல நிகழ்வுகளோடும் சில சங்கடமான நிகழ்வுகளோடும் இருந்தது.

முதலில் இனிய நிகழ்வுகள்...

ஏழு வருட இடைவெளிக்குப் பின் என் அண்ணனை நேரில் பார்த்த சந்தோஷம். அவனது வருகைக்காக திருவனந்தபுரம் விமான நிலையத்தில் கண்களில் நீர் மல்க காத்திருந்த தருணம்... நீண்ட ஏழு வருடங்களை விட அதிகமாக தோன்றியது. அண்ணனைப் பார்த்த நொடியில் பேச வார்த்தைகளில்லாமல் கண்களால் பேசி தழுவிக் கொண்டோம். மிக மிக சந்தோஷமான தருணம் அது. என் செல்ல மருமகள் என்னைக் கட்டிக் கொண்டதில் கிடைத்த சந்தோஷம் எத்தனை கோடிகள் கொட்டிக் கொடுத்தாலும் கிடைக்காது.

அடுத்து என் தங்கையின்(சித்தப்பா மகள்) திருமணம் இனிதே நடை பெற்றது. உறவுகளை ஒரே இடத்தில் ஒரு சேர பார்த்ததில் கிடைத்த மகிழ்ச்சியை வார்த்தைகளில் சொல்லத் தெரியவில்லை அத்தனை சந்தோஷம் குதூகலம் கொண்டாட்டம். சிறுவயதில் நாங்கள் செய்த குறும்புகளை பேசி சிரித்து மகிழ்ந்தோம்.

அடுத்து எங்கள் அம்மாவின் 60வது பிறந்த நாள்... எங்கள் தந்தையின் 60வது பிறந்த தினமும் சஷ்டியப்த பூர்த்தி விழாவும் அமெரிக்காவில் என் அண்ணன் வீட்டில் நடந்தேறியது. விசா பிரச்சினையால் அப்போது என்னால் அங்கு செல்ல முடியவில்லை. அந்த வருத்தத்தை எங்கள் அம்மாவின் 60வது பிறந்த நாள் தீர்த்து வைத்தது.

அப்பா அம்மாவுக்குத் தெரியாமல் ஹோட்டல் விஜயதாவில் ஒரு டின்னருக்கு ஏற்பாடு செய்தோம். மிக நெருங்கிய உறவினர்கள் சிலரை மட்டும் அழைத்திருந்தோம். சும்மா ஒரு கெட் டுகெதர் என்று அப்பா அம்மாவை அண்ணா ஹோட்டலுக்கு கூட்டி வந்தார். நானும் என் மாமியாரும் பிறந்த நாள் கேக்-கோடு ஹோட்டலில் காத்திருந்தோம். மற்ற உறவினர்களும் வந்து சேர பிறந்த நாள் கேக்கை வெளியில் எடுக்க அம்மா அப்பாவுக்கு இனிய சந்தோஷ அதிர்ச்சி. பின்னர் நல்ல சாப்பாடு :). இப்படி ஒரு விஷயத்திற்கு ஐடியா கொடுத்தது என் அண்ணி. செயல் படுத்தியது நாங்கள் என்றாலும் மூளையாக இருந்தது என் அண்ணிதான்.

இந்த சந்தோஷத்துடனேயே அடுத்த நாள் நான் கிளம்பி விட்டேன்.

இவ்வளவு சந்தோஷங்களைக் கொடுத்த இந்திய பயணம் சில சங்கடங்களையும் கொடுத்தது.

நாகர்கோவிலிலிருந்து மதுரைக்கு காரில் சென்றோம். அப்போது நாங்கள் சென்ற கார் விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்ட வசமாக யாருக்கும் சிறு காயமும் ஏற்படவில்லை. ஆனால் கார் மிக மோசமாக பாதிப்படைந்தது. இந்த விபத்து பற்றி விரிவாக எழுத வேண்டும் என்று நினைக்கிறேன். அதனால் அதற்கு ஒரு தனிப்பதிவிடுகிறேன்.

அடுத்து சில மருத்துவர்களின் தொழில் நேர்மையின்மை. என் அப்பாவுக்கு உடல்நிலையில் ஏற்பட்ட சில அசௌகரியங்களுக்காக நாகர்கோவிலில் அந்த துறையில் உள்ள பிரபல மருத்துவரை அணுகினோம். அவர் பரிசோதித்து விட்டு உடனே சர்ஜரி செய்யவேண்டும் என்றார். அது மைனர் சர்ஜரி என்பது எல்லோருக்கும் பொதுவாக தெரிந்த ஒன்று. அவரிடம் மைனர் சர்ஜரிதானே என்று கேட்டதற்கு இல்லை இல்லை மேஜர் சர்ஜரி எனவும் ரிஸ்க் மிக அதிகம் என்றும் சொல்லி பயமுறுத்தி விட்டார்.

என் சித்தப்பாவும் ஒரு மருத்துவர். அவரிடம் ஆலோசனைக் கேட்ட போது சர்ஜரி தேவையில்லை எனவும் எதற்கும் இன்னொரு ஸ்பெஷலிஸ்டை பார்க்கலாம் என்று திருவனந்தபுரத்தில் உள்ள பிரபல தனியார் மருத்துவ மனையில் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கித் தந்தார். அவரிடம் காண்பித்த போது சர்ஜரி தேவையே இல்லை மாத்திரைகளே போதும் என்று நம்பிக்கையூட்டினார். இப்போது அப்பா மாத்திரைகள் மட்டுமே எடுத்துக் கொள்கிறார்

இதற்கிடையே ஏற்கெனவே நாங்கள் பார்த்த நாகர்கோவில் டாக்டரின் அண்ணன்(அவரும் மருத்துவர்) என் அப்பாவோடு வேலை பார்த்தவர். அவர் தன் தம்பியிடம் இது பற்றி பேசியிருக்கிறார். அதன் பின் நாங்கள் அந்த டாக்டரைப் பார்த்த போது அவரது அணுகு முறையே மாறியிருந்தது. அது வரை ரஃபாக பேசியவர் பின்னர் மெதுவாக பேச ஆரம்பித்து விட்டார். இரண்டு நாட்கள் கழித்து பார்த்த போது இப்போது சர்ஜரி தேவையில்லை மாத்திரைகளில் குணப்படுத்தலாம் என்கிறார்.

முதலில் பையன் அமெரிக்காவில் இருக்கிறான் ஹாஸ்பிட்டலில் பிடித்துப் போட்டு விட்டால் மொத்தமாக ஒரு அமவுண்ட் கறந்து விடலாம் என்று கணக்கு போட்டவர் தன் அண்ணனுக்குத் தெரிந்தவர் என்றதும் அப்படியே மாறிப் போனார்.

ஒருவேளை நாங்கள் இன்னொரு டாக்டரைப் பார்க்காமல் இருந்திருந்தாலோ அல்லது அவரது அண்ணனைத் தெரியாமல் இருந்திருந்தாலோ தேவையில்லாமலேயே அப்பாவுக்கு ஒரு சர்ஜரி நடந்திருக்கும். எத்தனைப் பேரை இவர் இப்படி ஏமாற்றியிருப்பாரோ தெரியவில்லை :(

அந்த ஒருவார காலம் எங்கள் குடும்பத்தினர் பட்ட மனவேதனை...ஒருவருக்கொருவர் தைரியம் சொல்லிக் கொண்டு உள்ளுக்குள் வேதனைகளை அடக்கிக் கொண்டு....தனிமையில் கண்ணீர் விட்டு... நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.

எப்படியோ எல்லாம் நல்லவிதமாக முடிந்தது.