Tuesday 29 March 2011

புதுசு கண்ணா புதுசு!

அடுத்தமுறை திருவனந்தபுரம் ஏர்போர்ட்டில் போய் இறங்கும் நம்ப ஊர் மக்கள்ஸ் வேறெங்கேயோ ஃப்ளைட்டை இறக்கிட்டானுங்களோனு திரு திருன்னு முழிக்காதீங்க. புதிய ஏர்போர்ட்டை திறந்துட்டாங்கள்ல! அழகா இருக்கு புதிய விமான நிலையம்.

இன்னும் வேலைகள் முழுவதுமாக முடியவில்லை. ஆனாலும் எல்லா வசதிகளுடன் அழகா இருக்கு. Arrival மற்றும் Departure வாயில்கள் தனித்தனியே சற்று அதிக இடைவெளியில் இருப்பதால் பழைய விமானநிலையம் போல் நெருக்கடியாக இல்லை. சுகமான கடல்காற்று
காத்திருக்கும் நேரத்தைக் கூட இனிமையாக்குகிறது :).விசாலமான கார்பார்க்கிங் வசதியும் இருக்கு.

ஏர்ப்போர்ட்டுக்கு போகும் சாலையும் குண்டு குழியில்லாமல் நேர்த்தியாக போட்டிருக்கிறார்கள். திருவனந்தபுரம் களக்கூட்டம் பைபாஸ் ரோட்டில் அனந்தபுரி மருத்துவமனைக்கருகில் இருந்து புதிய மேம்பாலம் வழியாக ஏர்ப்போர்ட்டை இணைத்திருக்கிறார்கள்.

நாகர்கோவிலில் இருந்து வருபவர்கள் டிராஃபிக் நெரிசலில் சிக்காமல் களியக்காவிளையில் இருந்தே பைபாஸ் ரோடு வழியாக வந்துவிடலாம்.

என்னதான் எல்லாம் மாறினாலும் இமிக்ரேஷன் அதிகாரிகள் மட்டும் மாறவே இல்லை :-((. அதே கடுகடுப்புதான்.

User Development Fee ன்னு சொல்லி ஏர்போட்டில் வைத்து 575ரூபாய் வசூலிச்சுட்டாங்க. ஆனால் தொடர்ந்து இதே போல் சுத்தமாக பராமரிக்கறாங்கன்னா கொடுத்துட்டு போகலாம் தப்பில்லைன்னு தோணுது.









Thursday 24 March 2011

வந்துட்டோம்ல மொக்கை போட :-)

அப்புறம் எல்லாரும் எப்படி இருக்கீங்க?  நல்லாத்தான் இருக்கோம் நீ வந்துட்டீல்ல இதுக்கு அப்புறம் எப்படி இருப்போம்னு தெரியாதுன்னு நீங்க எல்லாம் நல்ல மனசோட சொல்றது நல்லாவே கேட்குது :)

இந்தியாவில் நல்லா வீட்டை சுத்திக்கிட்டு வந்தாச்சு. நிஜம்மாவே இந்த முறை வீட்டை மட்டும்தான் சுத்தினேன் :-(. மூணே மூணு நாள் மூணார் போயிட்டு வந்ததோட சரி அப்புறம் நாகர்கோவில் வாசம்தான்.

கூடிய சீக்கிரம் வழக்கமான மொக்கை பதிவுகளோட வரேன். அதுவரைக்கும் என்ஜாய் பண்ணுங்க மக்காஸ்......