Tuesday 3 May 2011

மீண்டும் ஒரு ப்ரேக் :(

மீண்டும் ஒரு நீண்ட விடுப்பு எடுக்கப் போகிறேன். இப்பவே நீ விடுப்புலதானே இருக்கறேன்னு நீங்க எல்லாரும் சொல்றது கேட்குது :)). இந்தோனேஷியாவில் இருந்தாலும் தொடர்ச்சியாக பங்கு கொள்ள முடியாத அளவுக்கு பயணங்கள்.  பதிவுலக நண்பர்களின் வலைப்பூவுக்கு வரமுடியவில்லை. பின்னூட்டங்கள் இட முடியவில்லை. இப்படி ஒரே முடியவில்லை புராணம்தான்.
அதனால் எல்லா  வேலைகளும்  முடிந்து  ஓரிடத்தில்  நிலை  கொள்ளும்   வரைக்கும்  தற்காலிக விடுப்பு. மீண்டும் உங்களை சந்திக்கும் வரை

அன்புடன்
கவிசிவா

Sunday 10 April 2011

தேர்தல் விழா!!!

நாட்டுல தேர்தல் ஜுரம் சூடு பிடிச்சுடுச்சாம். நானும் அது பற்றி பதிவு எழுதலேன்னா நாளைய வரலாறு நம்மை குற்றம் சொல்லிடுமே அப்படீங்கற தார்மீக (அப்படீன்னா என்ன?!!) எண்ணத்தின் அடிப்படையில்தான் இந்தப் பதிவு :-)


 
உண்மையிலேயே நம்ப மக்கள் கொடுத்து வச்சவங்கதான். பின்னே இந்த அரசியல்வியாதிங்க அடிக்கற கோமாளிக் கூத்தெல்லாம் பார்த்து சிரிச்சி சிரிச்சு சந்தோஷமா இருக்காங்க. ஆனா இந்த எலகஷன் கமிஷன் மேலதான் மக்கள் ரொம்ப கடுப்பாயிருக்காங்களாம். பின்னே அஞ்சு வருஷத்துக்கு ஒருவாட்டியாவது கொள்ளையடிச்ச பணத்துல கொஞ்சூ.......ண்டு பங்கை கிள்ளி கவர்ல போட்டுக் கொடுப்பானுங்க நம்ப அரசியல் வியாதிங்க. அதுக்கும் ஆப்பு வச்சா என்ன பண்றது!

தேர்தல் அறிக்கைன்னா இப்படீல்ல இருக்கோணும். எல்லாம் இலவசமாம். சுருக்கமா சொன்னா இலவசமா அரிசி வாங்கி கஞ்சியை வச்சு குடிச்சுக்கிட்டு இலவச டிவியில வர மொக்கைகளைப் பார்த்து மூக்கை சிந்திக்கிட்டு மூக்கு சிந்தின துணியை இலவசமா கிடைக்கற வாஷிங் மெஷின்ல போட்டுட்டு (கவனிச்சு படிக்கோணும் வாஷிங் மெஷின்ல போட மட்டும்தான் முடியும் துவைக்கறது நாமதான் துவைச்சுக்கணும். ஹி ஹி க்ரெண்ட் இருக்காதே) கம்முன்னு குந்தியிருக்கணும்.   நாடு... அதை நாங்க குடும்பத்தோடவோ இல்லை கூடவே இருக்கும் நட்போடவோ சேர்ந்து கொள்ளையடிச்சுப்போம்னு தலீவருங்க சொல்லிப்புட்டாங்கோ.

இதுல ஒரு கட்சிக்கு தேர்தல அறிக்கை வெளியிடக் கூட நேரமில்லாம கடைசீஈஈஈஈ நேரத்துலதான் வெளியிட்டிருக்காங்கோ. ஆமாமா கோஷ்டிப் பூசலை சமாளிச்சு அங்கே கிழிஞ்ச வேஷ்டியை தைச்சு கட்டிக்கிட்டு வர நேரமாகாதா! இதையெல்லாம் நாம புரிஞ்சுக்கலேன்னா இந்தியக் குடிமகனாக இருக்க நமக்கு தகுதியே இல்லேன்னு அர்த்தம்.

ஒருத்தரு ஒரு மாசத்துக்கு முன்னாடி வரை ஒரு வயசான தாத்தாவைப் போட்டு அந்தத் தாக்கு தாக்கினாரு. ஆனா இப்போ அந்தர்பல்டியில்ல அடிச்சுட்டாரு. தாங்க முடியலீடா சாமீஈஈஈ... ஆங் இதுக்குப் பேரு கூட்டணி தர்மம். இதையெல்லாம் குறை சொன்னா அவிங்க பொழப்பு நடத்தறது எப்பூடி?!

ஒருத்தவங்க வேற நாட்டிலேருந்து இப்போதான் இறங்கி வந்திருக்காங்க. அவங்க தமிழ்நாட்டுல இருக்கணுமா இல்லையாங்கறதை நம்ப மக்கள்தான் முடிவு பண்ணோணுமாம். எம்மாம் பெரிய பொறுப்பை நம்ப மக்கள் தலையிலே கட்டியிருக்காங்கோ! யோசிச்சு முடிவெடுக்கோணும்.

ஒருத்தர் இன்னொரு வாட்டி அய்யோ... அம்மா... ன்னு அவலக் குரல் எழுப்ப வேண்டி வந்திருமோங்கற பயத்தில் இப்பவே எலக்ஷன் கமிஷனைப் பார்த்து லபோ...திபோ...ன்னு குதிக்க ஆரம்பிச்சுட்டாரு.

இன்னொருத்தரு மைக்கை சரியா புடிக்கத் தெரியாம கீழே போட்டுட்டு(?!) ஒருத்தரை மக்கள் முன்னால அடிச்சுட்டாருன்னு பாட்டு வாங்கிட்டு இருக்கார். அடிச்சாலும் அவரு ஆளைத்தானே அடிச்சாரு உங்களையா அடிச்சாரு இதைப் போய் பெருசாக்கிட்டு... போங்க போங்க யாராச்சும் கவர் கொண்டு வாராங்களான்னு பாருங்க.

ஏற்கெனவே ஜெயிச்ச இடத்துல திரும்பவும் தெருத் தெருவா ஓட்டு கேட்டுப் போனா திருவோடு(டெப்பாசிட்) கூட மிஞ்சாதுன்னு பூர்வீக இடத்தையும் சொந்த ஊரையும் தேடி ஓடிப்போய்ட்டாங்கோ ! சந்தோஷப் படுங்கப்பா உங்க தொகுதிக்கு ஸ்டார் வேல்யூ வந்திருக்குல்ல :)

இந்த எலக்ஷன்ல அரசியல்வியாதிகள் எல்லாரும் காமெடிப் பீசுன்னா ஹீரோ யாருப்பா? எல்லாம் நம்ப எலெக்ஷன் கமிஷன் தாங்க. ஒட்டுமொத்த அரசியல்வியாதியும் பேதி மருந்து கொடுத்த மாதிரி டரியல் ஆகி கிடக்கறாங்க இல்ல! எம்பூட்டு சந்தோஷமா இருக்கு! ஒவ்வொருத்தரும் எலெக்ஷன் கமிஷனைப் பற்றியும் அதிகாரிகளைப் பற்றியும் குய்யோ முறையோன்னு கத்தும் போது சிப்பு சிப்பா வருது. எல்லாம் கொஞ்ச நாளைக்குதான் எலெக்ஷன் முடிஞ்சு ஆட்சியை அமைச்சதுக்கு அப்புறம் காமெடிப் பீசாகப் போறது பொதுமக்களாகிய நாமதானுங்கோ :-(. அது வரைக்கும் என்ஜாய்!!!
 
படங்கள்: நன்றி கூகுளாண்டவர்!

Tuesday 29 March 2011

புதுசு கண்ணா புதுசு!

அடுத்தமுறை திருவனந்தபுரம் ஏர்போர்ட்டில் போய் இறங்கும் நம்ப ஊர் மக்கள்ஸ் வேறெங்கேயோ ஃப்ளைட்டை இறக்கிட்டானுங்களோனு திரு திருன்னு முழிக்காதீங்க. புதிய ஏர்போர்ட்டை திறந்துட்டாங்கள்ல! அழகா இருக்கு புதிய விமான நிலையம்.

இன்னும் வேலைகள் முழுவதுமாக முடியவில்லை. ஆனாலும் எல்லா வசதிகளுடன் அழகா இருக்கு. Arrival மற்றும் Departure வாயில்கள் தனித்தனியே சற்று அதிக இடைவெளியில் இருப்பதால் பழைய விமானநிலையம் போல் நெருக்கடியாக இல்லை. சுகமான கடல்காற்று
காத்திருக்கும் நேரத்தைக் கூட இனிமையாக்குகிறது :).விசாலமான கார்பார்க்கிங் வசதியும் இருக்கு.

ஏர்ப்போர்ட்டுக்கு போகும் சாலையும் குண்டு குழியில்லாமல் நேர்த்தியாக போட்டிருக்கிறார்கள். திருவனந்தபுரம் களக்கூட்டம் பைபாஸ் ரோட்டில் அனந்தபுரி மருத்துவமனைக்கருகில் இருந்து புதிய மேம்பாலம் வழியாக ஏர்ப்போர்ட்டை இணைத்திருக்கிறார்கள்.

நாகர்கோவிலில் இருந்து வருபவர்கள் டிராஃபிக் நெரிசலில் சிக்காமல் களியக்காவிளையில் இருந்தே பைபாஸ் ரோடு வழியாக வந்துவிடலாம்.

என்னதான் எல்லாம் மாறினாலும் இமிக்ரேஷன் அதிகாரிகள் மட்டும் மாறவே இல்லை :-((. அதே கடுகடுப்புதான்.

User Development Fee ன்னு சொல்லி ஏர்போட்டில் வைத்து 575ரூபாய் வசூலிச்சுட்டாங்க. ஆனால் தொடர்ந்து இதே போல் சுத்தமாக பராமரிக்கறாங்கன்னா கொடுத்துட்டு போகலாம் தப்பில்லைன்னு தோணுது.









Thursday 24 March 2011

வந்துட்டோம்ல மொக்கை போட :-)

அப்புறம் எல்லாரும் எப்படி இருக்கீங்க?  நல்லாத்தான் இருக்கோம் நீ வந்துட்டீல்ல இதுக்கு அப்புறம் எப்படி இருப்போம்னு தெரியாதுன்னு நீங்க எல்லாம் நல்ல மனசோட சொல்றது நல்லாவே கேட்குது :)

இந்தியாவில் நல்லா வீட்டை சுத்திக்கிட்டு வந்தாச்சு. நிஜம்மாவே இந்த முறை வீட்டை மட்டும்தான் சுத்தினேன் :-(. மூணே மூணு நாள் மூணார் போயிட்டு வந்ததோட சரி அப்புறம் நாகர்கோவில் வாசம்தான்.

கூடிய சீக்கிரம் வழக்கமான மொக்கை பதிவுகளோட வரேன். அதுவரைக்கும் என்ஜாய் பண்ணுங்க மக்காஸ்......

Saturday 11 December 2010

ஊருக்குப் போறோம்!

என் மொக்கைகளிலிருந்தும் புலம்பல்களிலிருந்தும்  நம் நட்புகளுக்கு மீண்டும் ஒரு குறுகிய கால விடுதலை :-). சந்தோஷமா இருங்க மக்கா!

பல வருடங்களுக்குப் பிறகு புகுந்த வீட்டு சொந்தங்கள் அனைவரும் மீண்டும் ஒரே இடத்தில் கூடப்போகிறோம் என்ற மகிழ்ச்சியோடு ஊருக்கு செல்கிறோம்.  அந்த மகிழ்ச்சியோடு அனைவருக்கும் எனது கிறிஸ்துமஸ் மற்றும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!

Saturday 4 December 2010

இடுக்கண் வருங்கால் நகுக

இன்னிக்கு நாட்டு நிலைமை இப்படித்தான் இருக்கு. மக்களே ஊழல்தொகையை பார்த்து மனம் வருந்தாதீர் என்று அரசியல்வியாதிகள் கோமாளிகளாக மாறி தினம் தினம் அறிக்கை விட்டு  மக்களை வேதனையில் சிரிக்க வைக்கறாங்க.
ஆரம்பிச்சு வச்சுது இத்தாலி மகராசி அன்னை சோனியா காந்தி

ஊழல் தடுப்பில் எங்களைப் போல செயல்படுங்கள்: சோனியா "அட்வைஸ்"

எப்படீங்க போஃபர்ஸ் விவகாரத்தில் குவாட்ரோச்சியை தப்பிக்க வச்சீங்களே அது மாதிரியா? இல்லை ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை 16 மாசம் மூடிவச்சீங்களே அது மாதிரியா? புரியலீங்க தெளிவா சொன்னா எல்லாருக்கும் உபயோகப்படும்ல!

அடுத்து வந்தாருய்யா நம்ப மாண்புமிகு(?!) முதலமைச்சர்

ஊழல் விஷயங்களில் நான் நெருப்பு மாதிரி!

எப்படீங்க எங்கயாச்சும் ஊழல் பண்ண வாய்ப்பு இருக்குன்னு தெரிஞ்ச உடனே நெருப்பு மாதிரி கப்புன்னு புடிச்சுக்குவீங்களே அதுமாதிரியா? இல்லை பணம் கொழிக்கும் துறைகள் உங்களுக்கு வேணும்னு நெருப்பு மாதிரி இருந்து சாதிப்பீங்களே அது மாதிரியா? சொல்றதை தெளிவா சொன்னா நாங்களும் நெருப்பு மாதிரி இருப்போம்ல

அடுத்து அடிச்சாரு பாருங்க ஒரு ஜோக்கு...

"கோபாலபுரம் வீட்டைத் தவிர வேறு சொத்துக்களை வாங்கவில்லை"

ஆமாமா வேற எல்லாம் "வாங்கவில்லை". நாங்க நம்பிட்டோம்.

அதுலயும் ஓடாத படங்களுக்கு கதைவசனம் எழுதி 50லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கினாராம். இதுதாங்க இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த ஜோக்.

நானும் கதைவசனம் எழுதலாமான்னு யோசிக்கறேன். 50லட்சமெல்லாம் வேணாம் ஒருலட்சம் கிடைச்சாலும் போதும்.

அடுத்து துணைமுதல்வர் எனக்கு மட்டும் ஜோக்கடிக்கத் தெரியாதான்னு கேட்டுட்டு வந்தார்

"தி.மு.க ஆட்சியின், "இமேஜ்' உயர்ந்து கொண்டிருக்கிறது : துணை முதல்வர் பெருமிதம்"

ஹி ஹி டங்கு ஆஃப் த ஸ்லிப்பு தூ தூ ஸ்லிப்பு ஆஃப் த டங்கு... டேமேஜ்னு சொல்றதுக்கு பதிலா இமேஜ்னு சொல்லிட்டார் போல

எது எப்படியோ நல்லா வாய் விட்டு சிரிக்கலாம் இந்த ஜோக்குக்கு.
அரசியல்வாதிக்கு குறைஞ்சவனா நானுன்னு ஸ்டேஜுக்கு வந்தாரு தொழிலதிபர் ரத்தன் டாட்டா
நீரா ராடியா டேப் விவகாரம்: "ரத்தன் டாடா, இது தனி மனித உரிமையை மீறிய செயல் என்று கருத்து தெரிவித்திருந்தார்."

ஆமாமா பிளாக் டை பிளாக் கவுன் ன்னு நீங்க ஜொள்ளியதையெல்லாம் வெளியிட்டது தனி மனித உரிமை மீறல்தான். அதை வன்மையாக கண்டிக்கிறோம். ஆனா மாறன் மந்திரி ஆகக் கூடாதுன்னு சொன்னீங்களே அது என்னங்க தனி மனித விஷயம் புரியலியே! சொன்னீங்கன்னா அப்பாவிங்க நாங்க புரிஞ்சுக்குவோம்.

மக்களே தினந்தோறும் செய்தித் தாள் படியுங்க. நம்ப அரசியல்வியாதிகள் வெளியிடற அறிக்கைகளைப் படிச்சா வாழ்க்கையில் என்ன டென்ஷன் ஸ்ட்ரெஸ் எல்லாம் இருந்தாலும் பறந்து போயிடும். வாய் விட்டு சிரிப்பீங்க

இடுக்கண் வருங்கால் நகுக!

Wednesday 1 December 2010

முதன்முறை அழுகைகள்- ஒரு எதிர்வினை!

வலைப்பூ ஆரம்பிச்சு பல மாதங்கள் ஆயிடுச்சு. இதுவரைக்கும் ஒரு எதிர்வினை கூட எழுதலேன்னா நானும் பதிவர்னு சொல்லிக்கிட்டு திரிய முடியுமா! ஆனால் எதிர்வினை எழுதி அடிவாங்கும் அளவுக்கு உடலில் தெம்பு இல்லை. அதனால் யாரும் அடிக்க மாட்டாங்கன்னு நம்பி எதிர்கவுஜ எழுதிட்டேன் :)

நாஞ்சிலார் எழுதிய இந்த கவிதைக்கு எதிர்கவுஜ...




முதல்முறை பள்ளி சென்ற போது
வராத அழுகை

முதல்முறை பரீட்சையில்
முட்டை வாங்கியபோது
வராத அழுகை

முதல்முறை ஆசிரியரிடம்
அடி வாங்கியபோது
வராத அழுகை

முதல்முறை சைட் அடித்து அவள் அண்ணனிடம்
மாட்டிக் கொண்டதும்
வராத அழுகை

முதல்முறை காதலில் தோற்ற போது
வராத அழுகை

முதல்முறை பார்த்த பெண்
வேண்டாம்னு சொன்ன போது
வராத அழுகை

முதல் முறை வேலை புட்டுக்கிட்ட போது
வராத அழுகை

முதல்முறை காதலித்த பெண்ணை
திருமணம் செய்தபோது
வராத அழுகை

முதல்முறை மனைவி சமையலை
சாப்பிட்ட போது
வராத அழுகை

முதல்முறை மொக்கை கவுஜ
எழுதிய போது
வராத அழுகை

பல முதல்முறை அழுகைகளை
முறியடிக்கும் ஏதாவது
ஒரு பிரகாசமான பல்பை
எதிர்பார்த்து வாழ்க்கையை
பல பல்புகளுடன் கழித்துக்
கொண்டிருக்கிறார்கள்...