Showing posts with label குமுறல்கள். Show all posts
Showing posts with label குமுறல்கள். Show all posts

Wednesday, 25 August 2010

எனக்கொரு சந்தேகம் நான் இந்தியரா?!


நான் கடந்த 10வருடமாக வெளிநாட்டில் இருக்கிறேன். வருடத்திற்கு ஒரு மாதம் மட்டுமே இந்தியாவில் இருக்கிறேன். என்னிடம் இந்திய பாஸ்போர்ட் இருக்கிறது. அப்போ நான் இந்தியனா அல்லது நான் இந்தோனேஷியாவில் வாழ்வதால் இந்தோனேஷியனா?

எனக்கு ஏன் இந்த சந்தேகம் வந்ததுன்னா...

நம்ப செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் இந்தியரான்னு நம்ப மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்துக்கு சந்தேகம் வந்திடுச்சாம் :-(. நம் நாட்டுக்காக விளையாடி நான்கு முறை சாம்பியன் பட்டம் பெற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர். பத்ம விபூஷன் விருதால் சிறப்பிக்கப்பட்டவர். முதல் கேல் ரத்னா வாங்கியவர். எப்போதும் போட்டிகளில் விளையாடும் போதும் இந்திய கொடி வைத்துக் கொண்டுதான் விளையாடுகிறார். இந்தியன் பாஸ்போர்ட் வைத்திருக்கிறார்.

விளக்கமான செய்திக்கு இங்கே சொடுக்கவும்

இம்பூட்டும் இருக்கறவர பார்த்தே நீ இந்தியனான்னு சந்தேகப்படும் போது நானெல்லாம் எம்மாத்திரம்?

எனக்கு இன்னும் கொஞ்சம் சந்தேகம் இருக்குதுங்கோ யாராச்சும் தெளிவு படுத்தினா புண்ணியமா போகும்.

சோனியாகாந்தி இத்தாலியில் பிறந்தவர். இந்தியாவில் இருப்பவர் அவர் இந்தியரா இத்தாலியரா?

அவரின் தலைமையின் கீழ் ஆளும் கட்சியான காங்கிரஸ் இயங்குவதால் நாட்டின் சட்ட திட்டங்களுக்கு எந்த குந்தகமும் வந்து விடவில்லையா?

முக்கியமான சந்தேகம் வெளிநாட்டில் இருக்கும் நாமெல்லாம் இந்தியரா இல்லை நாடில்லாத நாடோடிகளா?

Monday, 8 March 2010

புதிய சட்டசபைக் கட்டிடம்

மார்ச் 13ம் தேதி தமிழ்நாட்டின் புதிய சட்டசபைக்கட்டிடம் திறந்து வைக்கப்படுகிறது. எல்லாரும் சாமியார் பின்னாடி ஓடுனதுல இந்த செய்தி அடிபட்டு விட்டது.

செய்தி இதுதான்... சட்டசபைக்கட்டிடத்தின் மேற்கூரை குறிப்பிட்ட 13ம்தேதிக்குள் கட்ட முடியாதாம். அதனால் 2கோடி ரூபாய் செலவில் சினிமா செட்டிங் போல சட்ட சபையின் மேற்கூரை அமைக்கப்படுகிறதாம். எவன் அப்பன் வீட்டுப்பணம் இப்படி வீணடிக்கப்படுகிறது?அப்படி 13ம் தேதியே திறந்தாக வேண்டும் என்ற கட்டாயம்தான் என்ன? வேலைகள் முடியும் வரைப் பொறுத்தால் என்ன?

பல லட்சம் மக்கள் வீடின்றி நடுரோட்டில் உறங்கும் போது இந்த 2கோடி ரூபாய் வீண்செலவு அவசியமா? நாட்டில் வேறு எந்த பிரச்சினைகளுமே இல்லாமல் பாலாறும் தேனாறும் ஓடுகிறது. அரண்மனை தர்பாரில் பாராட்டுக்கூட்டங்களும் கலை நிகழ்ச்சிகளும் நடத்தி ரசிக்க வேண்டுமே! அதற்கு தற்போதுள்ள அரண்மனையில் வசதி இல்லையே. மனசு குமுறுது. இவனுங்களை கேட்க யாருமே இல்லையா!

இதையெல்லாம் கேள்விகேட்க வேண்டிய பொறுப்பிலுள்ளவர்களோ காலவரையற்ற ஓய்வில்...அறிக்கை விடுவதோடு அவரது வேலை முடிந்துவிட்டது. கொடநாடுதான் தமிழ்நாடுன்னு முடிவு பண்ணிட்டார் போல!

எல்லாம் தமிழ்நாட்டின் தலைவிதி. பாதிபேர் ஒட்டுப் போடவே போக மாட்டான். பலர் காசுக்கு வோட்டு என்ற கொள்கையுடையவர்கள். அப்புறம் எப்படி இவனுங்களை கேள்வி கேட்க முடியும். அனுபவி ராஜா அனுபவி!

பின்குறிப்பு: நான் எந்தக்கட்சி ஆதரவாளனும் இல்லை. நாங்க வெறும் சோத்துக் கட்சிதான்:-)