Saturday 26 June 2010

தலைகீழான கொடி

நம்ப உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் பாகிஸ்தானுக்கு சார்க் மாநாட்டில் கலந்துக்க போயிருக்காராம். அங்க பாகிஸ்தான் அமைச்சரை சந்தித்து பேசினாராம். அப்போ ரெண்டு நாட்டு கொடியும் அங்க உள்ள மேஜையில் வச்சிருந்தாங்களாம். அதுல நம்ப நாட்டுக் கொடிய தலைகீழா கட்டி வச்சிருக்கானுங்க அந்த பாகிஸ்தான் அதிகாரிங்க. அவனுங்க வேணும்னு செஞ்சானுங்களோ இல்ல தவறுதலா நடந்துச்சோ... ஆனா அவரு பேச்சுவார்த்தையெல்லாம் முடிச்சுப்புட்டு ரொம்ப பரந்த மனசோட இதையெல்லாம் பெருசா எடுத்துக்கப்படாதுன்னு சொல்லிப்புட்டு அடுத்த ஜோலியை பார்க்கப் போயிட்டாரு.

ஆனால் எனக்கென்னமோ டிவியில் நம்ப கொடி தலைகீழா பறக்கறதைப் பார்த்தப்போ ரொம்பவே கோபம் வந்திடுச்சு. அமைச்சருக்கு நம் கொடி எப்படி இருக்கும்ங்கறது தெரியுமான்னே சந்தேகமா இருக்கு. இல்லேன்னா நம்ப அமைச்சர் அதை சரியாக்க சொல்லிட்டு அப்புறமா பேச்சுவார்த்தையை தொடர்ந்திருக்கலாமே. என்னமோ போங்க எதுவுமே சரியில்லை

12 comments:

  1. நம்மால விட்டுத்தள்ள முடியலை பாருங்க அதான் கவி நாட்டுப்பற்று.

    ReplyDelete
  2. அப்படியா அவனுங்க கண்டிப்பா வேணும்னே பண்ணிப்பானுங்க... நம்மாளுங்களுக்கு பாவம்அவ்ளோ நாலெட்ஜ் பத்தாது..,

    ReplyDelete
  3. இந்த மாதிரி விசயம் ஊருக்கே தெரியனும்... தமிழிஷ்ல இணைசிட்டேன்.......

    ReplyDelete
  4. நியாயம்தான்! விடுங்க!

    ReplyDelete
  5. மாப்ஸ் நாஞ்சிலு.... நல்ல காரியம் செஞ்சிட்டய்யா....! இந்த உண்மை ஊருக்கே தெரியட்டும்...மாப்ஸ்!

    என்ன பண்றது இந்த அரசியல்வாதிகளை....?

    ReplyDelete
  6. உண்மை தானே...கண்டிப்பாக அவனுங்க வேண்டும் என்று தான் செய்து இருப்பானுங்க என்று நினைக்கிறேன்....ஒரு வேளை அமைச்சருக்கு கொடியினை பற்றி தெரியவில்லை என்று நினைக்கிறேன்......

    ReplyDelete
  7. அமைச்சர் இங்கதானே அங்க இல்லியே..!!30 வ்ருஷத்தில போன முதல் உள் துறை அமைச்சர்ங்கிறதால வாய மூடிகிட்டு வந்திருப்பார்...

    ReplyDelete
  8. //அமைச்சருக்கு நம் கொடி எப்படி இருக்கும்ங்கறது தெரியுமான்னே சந்தேகமா இருக்கு//

    எனக்கும் சந்தேகமாத் தான் இருக்குது கவி :))

    ReplyDelete
  9. என்னதூ? கொடி தலைகீழாகப் பறக்குதோ? வடிவாப் பார்த்தனீங்களோ? நீங்க நேராக நின்றுதானே பார்த்தீங்கள்?..

    நான் அரசியல் பற்றியெல்லாம் பெரிதும் கவனிப்பதில்லை... ஆர்வமும் குறைவு.

    ReplyDelete
  10. //asiya omar said...
    நம்மால விட்டுத்தள்ள முடியலை பாருங்க அதான் கவி நாட்டுப்பற்று.//

    அந்த நாட்டுப்பற்று அரசியல்வியாதிகளுக்கும் இருந்தால் நல்லா இருக்கும். வரும்ங்கறீங்க?!


    //நாஞ்சில் பிரதாப் said...
    அப்படியா அவனுங்க கண்டிப்பா வேணும்னே பண்ணிப்பானுங்க... நம்மாளுங்களுக்கு பாவம்அவ்ளோ நாலெட்ஜ் பத்தாது..,//

    உண்மைதான் ப்ரதாப் என்ன செய்யலாம் இவனுங்களை தலைகீழா தொங்க விடலாமா?

    //இந்த மாதிரி விசயம் ஊருக்கே தெரியனும்... தமிழிஷ்ல இணைசிட்டேன்....... //

    நன்றி!!!

    //Software Engineer said...
    நியாயம்தான்! விடுங்க! //

    விட்டுவிட கஷ்டமா இருக்குதுங்க :(

    //dheva said... மாப்ஸ் நாஞ்சிலு.... நல்ல காரியம் செஞ்சிட்டய்யா....! இந்த உண்மை ஊருக்கே தெரியட்டும்...மாப்ஸ்!

    என்ன பண்றது இந்த அரசியல்வாதிகளை....? //

    ஒண்ணுமே பண்ண முடியலியே :(

    // GEETHA ACHAL said...
    உண்மை தானே...கண்டிப்பாக அவனுங்க வேண்டும் என்று தான் செய்து இருப்பானுங்க என்று நினைக்கிறேன்....ஒரு வேளை அமைச்சருக்கு கொடியினை பற்றி தெரியவில்லை என்று நினைக்கிறேன்...... //

    நாட்டோட உள்துறை அமைச்சராமாம் கொடுமைடா சாமி

    //ஜெய்லானி said...
    அமைச்சர் இங்கதானே அங்க இல்லியே..!!30 வ்ருஷத்தில போன முதல் உள் துறை அமைச்சர்ங்கிறதால வாய மூடிகிட்டு வந்திருப்பார்...//

    அது சரிதான்

    //எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...
    //அமைச்சருக்கு நம் கொடி எப்படி இருக்கும்ங்கறது தெரியுமான்னே சந்தேகமா இருக்கு//

    எனக்கும் சந்தேகமாத் தான் இருக்குது கவி :)) //

    :(

    //athira said...
    என்னதூ? கொடி தலைகீழாகப் பறக்குதோ? வடிவாப் பார்த்தனீங்களோ? நீங்க நேராக நின்றுதானே பார்த்தீங்கள்?..//

    எல்லாரையும் பூசார் மாதிரியே நினைச்சா எப்படி? பூசார்தான் தலைகீழா தொங்கிக்கிட்டு டிவி பார்ப்பார் :)

    நான் அரசியல் பற்றியெல்லாம் பெரிதும் கவனிப்பதில்லை... ஆர்வமும் குறைவு.

    ReplyDelete
  11. கொடியைத் தலைகீழாகப் பறக்கவிட்டவனுக்கு அடுத்த ஜென்மத்தில் நிச்சயம் வவ்வால்தான்

    ReplyDelete
  12. இப்பவே தலைகீழா கட்டித் தூக்கணும் கூடவே அமைச்சரையும் முடியுமா?!

    ReplyDelete