Sunday 24 October 2010

சாதனைத் தமிழன்

இது எனக்கு மெயிலில் வந்த செய்தி

நண்பர்களுக்கு அன்பான வேண்டுகோள். நம்மை உலக அரங்கில் தலை நிமிரச் செய்திருக்கும் இந்த தமிழரின் சாதனை சமூகத்தொண்டை எல்லோரிடமும் கொண்டு செல்ல உதவுங்கள். உங்கள் வலைப்பூவில் இதனை வெளியிட்டு அதிக வாக்குகள் கிடைத்து வெற்றி பெற உதவுவோம்.


                           A real hero from Madurai

                                     http://heroes.cnn.com/vote.aspx



2010 – உலகின் தலை சிறந்த ஹீரோ ஒரு தமிழன்

திரைப்படங்களை ரசியுங்கள் ரசிகர்களே. அதில் உங்கள் ஹீரோ செய்வதெல்லாம் நிஜம் என்று மட்டும் நம்பி விடவேண்டாம். உண்மையான ஹீரோ உங்கள் பகுதியில் நேர்மையாகவும், தியாக உணர்வோடும் , சேவை மனப்பான்யுடனும் , துணிவுடனும் உழைத்துகொண்டிருப்பார்கள் ஒரு ராணுவ வீரராக , தீயணைப்பு வீரராக, காவல் துறை அதிகாரியாக, ஆசிரியாராக, சமுக சேவகராக, துப்புரவு தொழிலாளியாக மற்றும் நேர்மையாக உழைத்து சம்பாதிக்கும் எவருமாக இருக்கலாம். அவர்களை சந்திக்கும் சமயத்தில் ஒரு நன்றி சொல்வோம் , பாராட்டுவோம். அவர்களில் யாரேனும் கவுன்சிலர் தேர்தலில் நிற்கக்கூடும். நின்றால் காசுக்கு ஆசைபடாமல் ஒட்டு போடுவோம்.



இப்போது அப்படி ஒரு நிஜமான ஹீரோவை உங்களுக்கு இந்த பதிவின் வாயிலாக அறிமுகபடுத்துகிறேன். இவர் உலகப்புகழ் பெற்ற CNN இணையதளத்தில் உலகின் தலை சிறந்த ரியல் ஹீரோக்களில் முதல் பத்தில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். ஒரு தமிழனாக, மதுரைகாரனாக ரெம்பவும் பெருமை படுகிறேன். இன்னும் வாக்கு பதிவு நடந்து கொண்டிருகிறது. இதில் தேர்ந்தெடுக்கப்படும் ஹீரோக்கள் அமெரிக்காவில் நவம்பர் மாதம் 25 ஆம் தேதியில் Shrine ஆடிடோரியம், Los Angeles இல் நடக்கும் ஒரு பெரும் விழாவில் கௌரவிக்க பட இருக்கிறார்கள். இது CNN தொலைகாட்சியில் இந்திய நேரம் காலை எட்டு மணி ( நமக்கு நவம்பர் 26 ஆம் தேதி ) உலகம் முழுக்க நேரலை ஒளிபரப்பில் காட்டப்பட இருக்கிறது. இதற்காக நாம் ஒவ்வொரு இந்தியனும், தமிழனும் பெருமை பட வேண்டும். ஆஸ்கார் சாதனையை விட இது தான் மகத்தான சாதனை.

பெயர் : நாராயணன் கிருஷ்ணன்

வயது : 29

இருப்பு : மதுரை

அப்படி என்ன செய்து விட்டார்?

அது நினைத்துபார்கவும் முடியாத கருணை செயல்.

தான் யார் என்றே அறியாத சித்த சுவாதீனம் கொண்ட மனிதர்களை நாம் சிறு கருணையுடனும் அல்லது கொஞ்சம் அருவருப்புடனும் கடந்து செல்வோம். சில சமயம் காசு போடுவோம். அதற்கும் மேல் என்ன செய்வோம்? அதை மறக்க முயற்சிப்போம். ஆனால் இவர் அவர்களை தேடி சென்று தினமும் மூன்று வேளை உணவு தருகிறார். அருவருப்பில்லாமல் ஊட்டி விடுகிறார்.கடந்த எட்டு வருடங்களாக ஒரு நாள் தவறாமல் இந்த சேவையை இவர் தொடர்ந்து செய்து வருகிறார். மழை, புயல்,தேர்தல்,கலவரம், பந்த் என்று எதுவும் பாராமல் வருடம் முழுக்க இந்த சேவையை செய்து வருகிறார். தினமும் 400 பேருக்கு மூன்று வேளை உணவு என்பது சாதாரணம் இல்லை. இது வரை ஒரு கோடியே இருபது லட்சம் உணவு பொட்டலங்கள் விநியோகிக்கபட்டுள்ளது.

ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் வேலை பார்த்த, விருதுகள் வென்ற செப் சமையல் கலை வல்லுநர் இவர். சுவிட்சர்லாந்தில் ஒரு பெரிய ஹோட்டல் நிறுவனத்தில் வேலை கிடைத்தவுடன் அதை பெற்றோர்களிடம் சொல்லிவிட்டு போவதற்காக மதுரைக்கு வந்தவர் அங்கே ஒரு வயது முதிர்ந்த ஒரு கிழவர் மலத்தை உணவாக உண்ணும் அவலத்தை கண்டு பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி தனது வெளிநாட்டு வேலையை துறந்து மதுரையிலேயே தங்கி வீட்டில் சமைத்து அதை இது போன்ற மனிதர்களை தேடி சென்று உணவு கொடுக்க ஆரம்பிக்கிறார். இது நடந்தது 2002 . இன்றும் இவரது சேவை தொடர்கிறது மதுரையை சுற்றி நூறு கிலோமீட்டர் பரப்பளவில் கண்ணில் படும் இதுபோன்ற மனிதர்களை தேடிபிடித்து உணவு தருகிறார். இதற்காக இவர் தன்னுடைய வாழ்கையை முழுமையாக அர்பணித்துள்ளார். இவரது அன்னை இவர் குறித்து கவலை பட்டு அழுதபோது, “அம்மா ஒரு நாள் என்னோடு வாங்க. நான் என்ன செய்கிறேன் என்று பாருங்கள் அப்புறம் நீங்கள் சொல்வதை கேட்கிறேன்” என்று சொல்லி அழைத்து போயிருக்கிறார். இவரது சேவையை கண்டு மனம் உருகிய அந்த தாய் ” நீ இவர்களை பார்த்துக்கொள், நான் உள்ளவரை உன்னை பார்த்துகொள்கிறேன்” என்று சொல்லிருக்கிறார். இதை படித்த போது என் கண்களில் நீர் முட்டிக்கொண்டு வந்ததை அடக்க முடியாமல் தவித்தேன். எழுதும் இந்த கணமும் கூட.

நாம் இங்கே நம்மை ஏமாற்றும் திரை நட்சத்திரங்களை ஹீரோ என்று சொல்லி தலையில் வைத்து கொண்டாடுகிறோம். பாலபிசேகம் முதல் முளைப்பாரி வரை எண்ணற்ற பைத்தியகாரத்தனத்தை அந்த ஹீரோக்களுக்காக செய்கிறோம். முதல் நாள் அவர்கள் படங்களை பார்க்க ஆயிரம், இரண்டாயிரம் செலவழிக்க தயங்குவதில்லை. சரி கொடுகிரீர்கள் அந்த அளவுக்கு உரித்தான கலைபடைப்பையாவது அவர்கள் தருகிறார்களா? அவர்கள் என்ன செய்தார்கள். நானும் கொடை செய்கிறேன் என்று சொல்லி சிலவற்றை செய்து பத்திரிகைகளில் மறக்காமல் செய்தி கொடுக்கிறார்கள். அவர்கள் இவரின் கால் தூசுக்கு கூட பொருந்த மாட்டார்கள். இவர் தான் உண்மையான ஹீரோ. சாகசம் செய்வது சாதனை அல்ல. இல்லாதவர்க்கு தேடிசென்று ஈவதே சாதனை. எனக்கு இவர் தான் என்றென்றும் ஹீரோ. இவரை பார்க்கவும், இவருடன் புகைப்படம் எடுத்துகொள்ளவும், இவருடன் ஒரு நாள் இருந்து சிறு உதவியேனும் செய்யவும், பொருள் உதவி செய்யவும், இவரை பற்றி எழுதவும் பேசவும் பெரும் ஆவல் கொள்கிறேன், பெரும் பெருமை கொள்கிறேன் எனது ஹீரோ ஒரு மகத்தானவன் என்பதில்.

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்

பெற்றான் பொருள்வைப் புழி.

ஏதும் இல்லாதவரின் கடும்பசியைத் தீர்த்து வையுங்கள். பொருளைப் பெற்றவன் சேமித்து வைக்கும் இடம் அதுவே.

ஆதலால் நீங்கள் சேர்த்துவைக்க இடம்

http://www.akshayatrust.org/contact.php

Akshaya’s Helping in H.E.L.P. Trust

9, West 1st Main Street,

Doak Nagar Extension,

Madurai – 625 010. India

Ph: +91(0)452 4353439/2587104
E mail : ramdost@sancharnet.in


மொக்கையாக எத்தனையோ வோட்டு போட்டுருக்கோம். ஒரு நல்ல விசயத்திற்கும் வோட்டு போடலாம் வாருங்கள். நீங்கள் வோட்டு போடவேண்டிய இடம்

http://heroes.cnn.com/vote.aspx

பின்குறிப்பு: ஒருவரே எத்தனை ஓட்டு வேண்டுமென்றாலும் போடலாம். எந்த கட்டணமும் இல்லை. கொஞ்சம் நேரத்தை ஒதுக்கி உங்களால் எவ்வளவு முடியுமோ அத்தனை ஓட்டு போடுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

19 comments:

  1. ஓட்டு போட்டேன், போடுவேன், போட்டுகிட்டே இருப்பேன்...

    ஆனால் ஒண்ணு மட்டும் புரியல இவரை மாதிரி ஆளுங்க எலக்க்ஷன்ல நின்னா மட்டும் ஏன் இந்த மக்கள் ஓட்டுப்போட மாட்டுறாங்க..:((

    ReplyDelete
  2. ஓட்டு போட்டுவிட்டு தான் கமெண்ட்டே எழுதுகிறேண்.பகிர்வுக்கு கண்ணீருடன் நன்றி.

    ReplyDelete
  3. கவி, கண்டிப்பா ஓட்டு போடுவோம்:))

    ReplyDelete
  4. அவரவர் வலைப்பூவிலும் வெளியிட்டு பலரை சென்றடைய உதவுங்கள்.

    நன்றி பிரதாப்!
    இவரைப்போல் இன்னொரு மருத்துவரை மக்கள் ஜெயிக்க வச்சிருக்காங்க. அப்துல்காதரின் ஆஹா பக்கங்களில் அவரைப்பற்றிய பதிவு இருக்கு. ஆனா என்ன இவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கு :(

    நன்றி ஆசியா!
    நன்றி பவி!

    ReplyDelete
  5. நானும் ஓட்டுப்போட்டுட்டேன். இவரைப்பத்தி ஏற்கனவே ஆ.வியில் வந்துருக்கு. இன்னும்கூட நிஜமான ஹீரோக்கள் இருக்காங்க. நமக்குத்தான் வெள்ளித்திரையை விட்டு கண்ணை எடுக்கமுடியலை :-(

    ReplyDelete
  6. நல்ல விஷயம்.. ஓட்டு போட்டாச்சு கவி..

    ReplyDelete
  7. நன்றி சாரல் மேடம்!
    நன்றி சந்தனா!

    ReplyDelete
  8. ம்.. மெயில்கள் வந்தன.. ஓட்டு போட்டுட்டேன்..

    ReplyDelete
  9. ஓட்டு போட்டு விட்டேன்!

    ReplyDelete
  10. சுயநலமில்லா நல்ல‌ மனுஷங்களில் இவரும் ஒருவர்! நானும் (3 முறை) ஓட்டு போட்டுவிட்டேன் கவி! ஒவ்வொருவரின் இடுகைக்காகவும் 3 ஓட்டு என்று போட்டுவருகிறேன். அதென்ன 3 ஓட்டு என்கிறீர்களா? 3 எனக்கு ரொம்ப பிடிக்கும். அதற்கு காரணமெல்லாம் கேட்கக்கூடாது :) மற்றபடி ராசி மீதெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை.

    ReplyDelete
  11. கவி! இந்தோனேஷியாவில் சுனாமியின் தீவிரத் தாக்குதலைப்பற்றி அறிந்ததும் உங்களைப்பற்றி கவலையாயிருக்கிறது! உங்களுக்கு ஒன்றும் பாதிப்பில்லையே?

    ‘சகோதரி அன்னுவின் வலைத்தளத்தில்’ நான்கு நாட்களுக்கு முன் திரு. நாராயணன் கிருஷ்ணனைப்பற்றி படித்து மனம் நெகிழ்ந்து போனேன். உடனேயே ஓட்டும் அங்கேயே போட்டு விட்டேன். விரைவில் அவரது தொண்டு நிறுவனத்திற்கு ஓரளவு பணம் அனுப்ப முடிவும் எடுத்துள்ளோம். முடிந்தால் இங்குள்ள சில நிறுவனங்களையும் சேவை செய்யும் மனப்பான்மை இருப்பவர்களையும் அணுகி முடிந்த அளவு அவரது இல்லத்திற்கு பணம் சேமித்து அனுப்பும் யோசனையும் உள்ளது.
    நீங்களும் இதைப்பற்றி எழுதியிருந்ததைப்பற்றி படித்ததும் மகிழ்வாயிருந்தது. உங்களுடைய பதிவிற்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்!!

    ReplyDelete
  12. நன்றி ஹுசைனம்மா!

    நன்றி எஸ்.கே.

    நன்றி அஸ்மா!

    நன்றி மனோம்மா! நான்கு நாட்களுக்கு பின் இன்றுதான் இணையம் பக்கம் வர முடிந்தது. உங்கள் அன்பான அக்கறைக்கு நன்றிம்மா! நாங்கள் இருக்கும் தீவில் பிரச்சினை ஏதும் இல்லை.

    ReplyDelete
  13. அன்பு கவிசிவா,

    ஓட்டு போட்டாச்சு. முடிந்தவரை எல்லார்கிட்டயும் ஓட்டுப் போடும்படி கேட்டுக் கொண்டேன்.

    உங்கள் முயற்சிக்கு நன்றி, கவி.

    அன்புடன்

    சீதாலஷ்மி

    ReplyDelete
  14. கவி நானும் போட்டேன்,போட்டுட்டு இருக்கேன்,கடைசி வரை போடாடியாவது போடுவேன்.
    முடிஞ்ச வரை எல்லாருக்கும் மெயில்பண்ணிட்டேன்.

    ReplyDelete
  15. நன்றி சீதாம்மா! நானும் ஓட்டு போட்டுக்கிட்டே இருக்கேன்.

    ReplyDelete
  16. நன்றி ஆமினா! தொடர்ந்து போடுங்க. நானும் ஓட்டு போட்டுக்கிட்டே இருக்கேன்.

    ReplyDelete
  17. present , piraku pathil poodukireen

    ReplyDelete
  18. பார்வேட் மெயிலில் வந்து கொண்டு தான் இருக்கு .
    முடிந்த வரை ஓட்டு களை போஉகீறேன்.

    ReplyDelete
  19. நன்றி ஜலீலாக்கா! முடிந்தவரை ஓட்டு போடுங்கள்

    ReplyDelete